இலங்கை செய்தி. தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

தமிழக முதலமைச்சர் விஜய் – இலங்கை துணை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜயை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில், விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த  உயர்ஸ்தானிகர், இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக பேசினார். இரு நாடுகளின் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்தும் வழிகள், கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான நட்புறவு மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் பிரதி  உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மேயரை பதவி நீக்கிய வடக்கு ஆளுனரின் வர்த்தமானிக்கு ஜீலை 15 வரை இடைக்கால தடை:

வவுனியா மாநகரசபை மேயரை பதவி நீக்கிய வடக்கு ஆளுனரின் வர்த்தமானிக்கு ஜீலை 15 வரை இடைக்கால தடை: வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு! வவுனியா மாநகர மேயர் சு.காண்டீபன் அவர்களை பதவி நீக்கி வடமாகாண ஆளுனர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஆளுனரின் முடிவினை சவாலுக்கு உட்படுத்தி மனுதாரரான வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று (03.07) வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இது தொடர்பாக மனுதாரர் சார்பில் ஆயஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, வட மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வவுனியா மாநகர மேயர் காண்டீபனின் பதவியை நீக்கி அறிவித்தார். அதற்கு எதிராக எழுத்தாணை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை. ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டடைப்பகுதியில் காட்டு யானையின் அட்டகாசம்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டடைப்பகுதியில் காட்டுயானையின் அட்டகாசம் அதிகாரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். வீடுகளில் நெல்மூடைகளை வைத்திருக்கமுடியாத நிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் வீடு ஒன்றிற்குள் புகுந்த காட்டுயானை நெல்பைகளை உடுத்து நாசாம் செய்து உண்டுள்ளது.இந்த நிலையில் இன்று(03.07.2026) அதிகாலை வேலை ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவு சங்கத்திற்குள் புகுந்த காட்டுயானை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட அறையின் கதவினை உடைத்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்த 6பை நெல்லினை எடுத்து உண்டு நாசப்படுத்தியுள்ளது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மாணவர்களின் பாதுகாப்புக்காக கிளிநொச்சி A9 வீதியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கிளிநொச்சி A9 வீதியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு – இன்று சாரதிகளுக்கு அறிவுறுத்தல் கிளிநொச்சி A9 வீதியின் இரணைமடு சந்தி முதல் பரந்தன் சந்தி வரை பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ரிப்பர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் கடந்த ஜூன் 30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற வீதி விபத்துகளைத் தடுப்பது மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டது. அதன்படி, தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை, இரணைமடு சந்தி முதல் பரந்தன் சந்தி வரையிலான A9 வீதிப் பகுதியில் ரிப்பர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வண்ணான்கேணி வடக்கில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி தவிப்பு

கிளிநொச்சி மாவட்டம், வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக  கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து, கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் கிராம மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: “எமது கிராமத்தில் வாழ்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்குவதற்கு சொந்தக் காணி இல்லாத நிலையில், உறவினர்களின் வீடுகளிலும், மற்றவர்களின் காணிகளிலும் தற்காலிகமாக தங்கி வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு அசௌகரியங்களையும், நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில், எமது கிராமத்தின் பின்புறமாக அமைந்துள்ள அரசின் ஒதுக்கீட்டுக் காப்புக் காணிகளை, பிரதேச செயலகத்தின் ஊடாக பொதுப் பயன்பாட்டுக்காக (வெகுசமூகத்திற்காக) வழங்குவதற்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொக்குத் தொடுவாய் அத்துமீறிய உப்பள நிருமாணம்: விளக்கம் கோரி ரவிகரன்

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிருமாணம்: தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்! முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலாளரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குறித்த பகுதியில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலை குறித்தும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு 2026.06.29 அன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு கோரப்பட்டுள்ளது. அந்த வகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறி உப்பளம் அமைப்பதைத் தடுத்தல் மற்றும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தல் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து வினவல்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒதியமலை தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா;

ஒதியமலை தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா; ரவிகரன் எம்.பி பங்கேற்பு. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஒதியமலை தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா 02.07.2026 நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் குறித்த ஆலயத்தின் கருவறை, முருகன் சந்நிதானம், நாகதம்பிரான் சந்நிதானம், வசந்தமண்டபம், வைரவர் சந்நிதானம் என்பவற்றுக்கு புதிய கட்டடங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வே இவ்வாறு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன் அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி..! யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணற்காடு சந்தி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் இருவரும் பாடசாலைக்கு பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்திருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஆசிரியர் ஒருவரும், பிள்ளைகளை ஏற்றி சென்ற தாயும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது குடத்தனை கிழக்கு பகுதியிலிருந்து குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாட சாலையில் தனது இரண்டு பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது மருதங்கேணி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு ஆசிரியர்களது மோட்டார் சைக்கிளும் மணல்காடு சந்தி பகுதியில் ஒன்றை ஒன்று…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஜூலை 20 முதல் செப்டெம்பர் வரை “எல் நினோ” கடுமை யாகத் தாக்கும் – பேராசிரியர் பிரதீப ராஜா

பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள “எல் நினோ” இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் மிகக் கடுமையாகத் தாக்கும் என்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த கமக்காரர் அமைப்பு மற்றும்  மீனவசங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ தொடர்பான கலந்துரையாடல்  கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஏற்படப்போகும் எல்நினோ நிலையை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் K.அழகக்கோன், பெண்கள் வாழ்வுரிமைச்சங்கத்தின் இணைப்பாளர் வல்லிபுரம் வாசுகி, கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவசங்க பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் ஒன்பது நாளை எட்டியது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியே தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 59.5 ஏக்கர் காணிகள் பூர்வீக மக்களுக்குச் சொந்தமானவை என்றும், தற்போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ நிலைகளை அருகிலுள்ள மாற்று நிலங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறே தாங்கள் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தனர். தேசிய பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இராணுவ முகாம்களை மாற்றி அமைத்து, பூர்வீக மக்களின் காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைக்க…

மேலும் படிக்க