தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு கணினி வழங்கிய ரவிகரன் எம்.பி;

கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு கணினி வழங்கிய ரவிகரன் எம்.பி; புதிதாகப் பொருத்தப்பட்ட மின்னிணைப்புக்களையும் பார்வையிட்டார் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கோம்பாவில், விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு 27.07.2026இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் அவரது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதிஒதுக்கீட்டிலிருந்து மேசைக்கணினி வழங்கிவைக்கப்பட்டதுடன், மேல்மாடி வகுப்பறைகளுக்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டின் மூலம் பொருத்தப்பட்ட மின்ணைப்புக்களையும் இதன்போது பார்வையிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு – கோம்பாவில், விக்னேஸ்வர வித்தியாலய பாடசாலைச் சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 10.03.2026அன்று குறித்த பாடசாலைக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள்தொடர்பில் நேரடியாக ஆராய்ந்தார். இதன்போது குறித்த பாடசாலைக்கு மேசைக்கணினி ஒன்று தேவையெனவும், மேல்மாடி வகுப்பறைகளுக்கு மின் இணைப்பு பொருத்தப்படவேண்டுமெனவும் பாடசாலைச் சமூகத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் பாடசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கைக்கு 4ஆவது இடம்!

இலங்கை உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளது.  2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறிக்கையின் பிரகாரம், மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தை வியட்நாமும், இரண்டாம் இடத்தை பெலிஸூம் (Beliz), மூன்றாம் இடத்தை மொசாம்பிக்கும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் ஆகிய துறைகளில் இலங்கை தற்போது வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகச் சர்வதேச நிதியமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசையில் இலங்கை 05 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சொக்லேட் வடிவில் வந்த ‘குஷ்’ போதைப்பொருள் இலங்கை ப் பயணி கைது

தாய்லாந்திலிருந்து சுமார் 1 கிலோ 480 கிராம்    ‘குஷ்’   ரக போதைப்பொருளை சொக்லேட் பொதிகளில் மறைத்து நாட்டுக்குள் கடத்தி வந்த இலங்கைப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ்  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று காலை  (27)  கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய  ஒருவரென என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் நேற்று காலை 9.25 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL-403 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார். அவரது பயணப் பொதியைச் சோதனை செய்தபோது, சுமார் 1 கிலோ 480 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.   அவை இயந்திரத்தின் மூலம் சொசேஜ் வடிவில் தயாரிக்கப்பட்டு, அதன் மீது சாக்லேட் பூசப்பட்டு, காற்று புகாத வகையில் பொதி செய்யப்பட்டிருந்தது. மேலும்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் நேற்று வரை டெங்கு மரணம் 61; 82,011 பேர் பாதிப்பு

நாட்டில் நேற்று வரை பதிவாகியுள்ள  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதென்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காட்டப்பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் இந்த ஆண்டின்  நேற்றுவரையான காலப்பகுதியில் 17,395 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,294 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்  ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5639 பேரும், கண்டியில் 5634 பேரும், களுத்துறையில் 5355 பேரும் இரத்தினபுரியில் 4553 பேரும், காலியில் 4534 பேரும் பதிவாகியுள்ளனர். அந்த வகையில் ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 26,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுப் மேலும்…

மேலும் படிக்க