தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் விபத்து நால்வர் காயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கம்பம் ஒன்றில் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக கல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர அறுவைச் சிகிச்சைக்காக (சத்திர சிகிச்சை) தமிழ் மக்களிடம் ஊடகங்கள் வாயிலாக அவர் உதவி கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது முதற்கட்ட அறுவைச் சிகிச்சை மற்றும் ஏனைய மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான நிதி குறுகிய காலத்திற்குள் திரட்டப்பட்டது. நிதி உதவி கிடைத்ததைத் தொடர்ந்து, ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எஞ்சிய நிதி சமூக நலனுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும்! “எனது உடல்நிலை குறித்து அக்கறை கொண்டு, சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு எனது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மன்னாரில் சிறுவர் கள் மற்றும் பெண்களுக் கெதிரான பாலியல் அநீதிக் கெதிரான கண்டனப் பேரணி.

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமயத் தலைவர்களால் இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி வெள்ளிக்கிழமை (29) மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் கே.மகாலட்சுமி தலைமையில் பெற்ற குறித்த கண்டனப் பேரணியில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மெசிடோ நிறுவன பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதோடு, புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் யுகைதியா முகைதீனும் கலந்துகொண்டிருந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர். “சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அநீதிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்”,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

மாகாணசபைத் தேர்தல் உடன் நடத்தப்படுவது அவசியம். ஞானமுத்து ஸ்ரீநேசன்

மாகாண சபை தேர்தலை இழுத்தடிப்பு செய்யாமல் அரசாங்கம் உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். பழைய தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என 43 கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுத்திருக்கின்றனர். எனவே, அரசாங்கம் சாக்குப் போக்கு சொல்வதை விடுத்து விரைவாக அதனை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நேற்று வியாழக்கிழமை(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜே. வி. பி எதிர்க்கட்சியில் இருக்கும்போது மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்கள். 2018 ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட மாகாண சபை புதிய தேர்தல் மூலமாக இன்னும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு வரவில்லை. தாங்கள் நினைத்தால் மாகாண சபையை கொண்டு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பௌத்த துறவியால் துஷ்பிரயோகத்திற் குள்ளான சிறுமிக்கு நீதிகோரி முல்லை யில் கவனயீர்ப்பு நடவடிக்கை;

பௌத்த துறவியால் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமிக்கு நீதிகோரி முல்லையில் கவனயீர்ப்பு நடவடிக்கை; ரவிகரன் எம்.பி பங்கேற்பு அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் 29.05.2026இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். அத்தோடு இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிறுமியின் கண்ணீர் மௌனமாகாது, மத ஆடையின் பின்னால் மறையும் குற்றங்களுக்கு நீதி வேண்டும், குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை வேண்டும், சிறார்களைக் காப்போம் குற்றங்களை நிறுத்துவோம், சிறார்களின் பாதுகாப்பு எங்கள் உரிமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு அமைதிவழியில் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணவில்லை.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் (வெள்ளிக்கிழமை)   தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமல் போனவர்களை மீட்பதற்காகப் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியிலிருந்து சுமார் 10 படகுகளும், முனை பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளும் என 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சக மீனவர்கள் இன்று அதிகாலை முதலே கடலுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நேற்று முன்தினம் புதன்கிழமை (27) கடலுக்குச் சென்ற இவர்களைத் தேடி சக மீனவர்கள் சென்றிருந்த போதிலும், பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், இன்று வானிலை சற்றே சாதகமாக உள்ளதால் தேடுதல் பணி முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முச்சக்கரவண்டி சாரதியை மயக்கி காட்டுக்குள் வீசிவிட்டு கொள்ளை – மட்ட க்களப்பில் அதிர்ச்சி

மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கூலிக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், அதன் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து, அவரிடமிருந்த தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைபேசி என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயங்கிய நிலையில் ரிதிதென்னை காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த  முச்சக்கரவண்டி சாரதி நேற்று வியாழக்கிழமை (28) காலை மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு பூநொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். சம்பவதினமான நேற்றுமுன்தினம் (27) பிற்பகல் 3:00 மணியளவில் வீடு சென்று மதிய உணவை உட்கொண்ட அவர், மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இரவு 7:00 மணியளவில் இரவு உணவிற்காக இடியாப்பம் வாங்கிக்கொண்டு வீடு திரும்புவதாகத் தனது உறவினர்களுக்குக் கைபேசி மூலமாகத் தெரியப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், மட்டக்களப்பு நகரின் ஆட்டோ…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மட்டு. தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் பல திடுக்கிடும் தகவல்கள்!

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதான சந்தேகநபர் உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக் கூறி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாயை பார்வையிடுவதற்காக தமது தந்தையுடன் அவரது இரண்டு பிள்ளைகள் பதுளையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்றிருந்தனர். இதன்போது அவர்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, விடுதிக்குள் ஏற்பட்ட தீப்பரவலில் 3 வயதுடைய ஆண் பிள்ளையொன்றும், 5 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர். ​ இந்த நிலையில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பாலியல் குற்றவாளி களை காப்பாற்றாதே” – நீதி கேட்டு கொந்த ளித்த வடகிழக்கு பெண்கள்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ‘வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு’ அமைப்பினால் இன்று மட்டக்கப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி, மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் “பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக…” பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்”மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம், சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு பிணை கிடையாது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர். இச்சம்பவம் தொடர்பில்  ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள் உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத் திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கள விஜயம்

யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கள விஜயம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (26.05.2026) விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் கெளரவ அருண ஜெயசேகர அவர்கள், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட இதுவரை விடுவிக்கப்படாத பகுதிகளில் விசேட கள ஆய்வொன்றை மேற்கொண்டார். இந்த கள ஆய்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கெளரவ ராமலிங்கம் சந்திரசேகர் , பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் நிலப்பரப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.…

மேலும் படிக்க