புத்தளம் -கற்பிட்டியில் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு
புத்தளம் – கற்பிட்டி பங்களாவத்தை மற்றும் சேதவாதீ ஆகிய கடலோரப் பகுதிகளில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கிவரும் இலங்கை விஜய கடற்படைக் கப்பலின் ஆலங்குடா பிரிவினரால், நேற்று கற்பிட்டியவின் பங்களாவத்தை கடலோரப் பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு உரப் பைகள் இருந்ததை அவதானித்த கடற்படையினர் அதனை சோதனை செய்தனர். குறித்த உரப் பைகளில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 80 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும், கற்பிட்டி சேதவாதீ கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவுடன் இணைந்து நடத்தப்பட்ட மற்றொரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கைவிடப்பட்ட…
மேலும் படிக்க