தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அம்பாறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்களும் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதமுனை 6ஆம் பிரிவைச் சேர்ந்த தௌபீக் சினாத் றினா (20) என்ற திருமணமாகாத பெண், கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு அதிகாரிகளும் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்தனர். கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார். உயிரிழப்பில் சந்தேகம் காணப்படுவதால், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார். அங்கு சட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை;

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில், கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வவுணதீவு பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, வவுணதீவு பிரதேசசபையின் பிரதி தவிசாளர் த. டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து கரையாக்கன்தீவு வாவிக்கரையோரப் பகுதியில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அங்கிருந்த கசிப்பு போத்தல்கள் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான நேற்று (23)07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனு. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆணிகளும் சீமெந்து தட்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 464 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் ரயில் பாதைகள் பல இடங்களில் சேதமடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை இன்று (24) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. பாதை புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அண்மையில் வெற்றிகரமான சோதனை ஓட்டம் (வெள்ளோட்டம்) நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் பயணிகள் சேவையை மீள ஆரம்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.50 மணிக்கு தலைமன்னார் நோக்கி ரயில் புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா சூறாவளிக்குப் பின்னர் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டதால், மன்னார் மாவட்ட மக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். குறிப்பாக, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில், ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது மன்னார் மக்களுகளின் நீண்ட தூரப் பயணத் தேவைகளை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட ங்கள்; சுற்றுலா அமைச்சின் விசேட தலையீடு ரவிகரன்

சுற்றுலாத்துறையில் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள்; சுற்றுலா அமைச்சின் விசேட தலையீடு தேவை என – ரவிகரன் எம்.பி வலியுறுத்து சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு சுற்றுலா அமைச்சு விசேட தலையீட்டை மேற்கொள்ளவேண்டுமென சுற்றுலா பிரதி அமைச்சரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்த சுற்றுலா பிரதிஅமைச்சர் ருவன் ரணசிங்க, முல்லைத்தீவு மாவட்டத்தில் 76சுற்றுலா மையங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அதில் 10சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் 23.07.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை சுற்றுலா அதிகார சபையால் 2025 மே…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளியில் 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கல்லாறு பகுதியில் 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. தர்மபுரம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற  இரகசியத் தகவலின் அடிப்படையில் கல்லாறு  கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 11:45 மணியளவில் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் பொலிஸார்  மீட்டனர். அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது, அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும்  சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தப்பிச் சென்ற நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம்  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட  கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

குருதிப் பரிசோதனைக்கு அதிக கட்டணம்; யாழ். வைத்தியசாலைக்கு ரூ. 3 மில். அபராதம்

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, இரத்தப் பரிசோதனைக்காக அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தமை தொடர்பில் ரூ. 30 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு (CAA) கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டு, இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை இரத்தப் பரிசோதனைக்காக (FBC) நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச கட்டணமான ரூ. 400 இற்கு பதிலாக ரூ. 550 அறவிட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை 13ஆம் திகதியன்று இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அவ்வைத்தியசாலையில் சோதனை நடத்தியதோடு, இது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. குறித்த வழக்கு நேற்றுமுன்தினம் (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வைத்தியசாலை நிர்வாகம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்றினால்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறிச் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றும், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் நேற்று புதன்கிழமை மாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது இரணைதீவுக்குத் தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 இற்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதைக் கடற்படையினர் அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கன்னியா வெந்நீருற்றில் புத்தவிகாரைக்கா அடிக்கல்!

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட விவகாரம் புத்தவிகாரை அமைக்கப்படுவதற்கா? இது தமிழரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில்  தொல்பொருள் இடங்களை புனரமைப்பு செய்யும் நோக்குடன் இன்று  அடிக்கல் நாட்டப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினரால் இன்று  காலை 10.20 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்போது திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார்  எனப் பலர் கலந்து கொண்டனர். கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில் புத்த விகாரை கட்டுவதற்காகவே  அடிக்கல் நாட்டப்படவுள்ளது என வெளியான தகவலுக்கமைய இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழர்களின் வரலாறு மழுங்கப்படவுள்ளதாக தெரிவித்து பல அரசியல் பிரமுகர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் குமார்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர்  இன்றைய தினம்  செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது. அதனை அடுத்து இன்றைய தினம் புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ,  ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன்,  பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்,  இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக்,  நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர். இந்நிலையில்  செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்…

மேலும் படிக்க