அண்மை செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இலங்கை சிறை யிலுள்ள தமிழக மீனவர்களை விடு விக்க வேண்டும்! மோடியிடம் விஜய் கோரிக்கை

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு அளிக்கப்பட்டது. இதன்பின், சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இருவரும் தமிழ்நாடு மற்றும் தேசிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். சுமார்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த அர்ச்சுனா எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டும் டாக்டர் ராமதாஸ்

ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்’ எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துப் பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்வுரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள் என்றும், அந்தப் போராட்டக் காலங்களில் தமிழினம் பின்னடைவைச் சந்தித்ததற்குச் சகோதர யுத்தங்களும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இத்தகைய சூழலில், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் குறிவைத்து, ‘ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்’…

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

மு.க.ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்து பெற்றார்.தமிழக முதல்வராக பொறுப் பேற்றுள்ள விஜய்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று சென்னையில்  முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பு ஸ்டாலினின் இல்லத்தில் இடம்பெற்றது. முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்குச் சென்ற  ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  வாசலுக்கே சென்று ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம்  ஒன்றையும் அன்பளிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினர். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

அத்துமீறி பிரவேசித்த இந்திய கடற் றொழிலாளர்கள் 07 பேர் கைது

யாழ்ப்பாணம் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய கடற்றொழிலாளர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவுக்கு வடக்கே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.இந்திய கடற்றொழிலாளர்களின் 02 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கரைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இந்திய இலங்கை வெளியுறவு அமைச்சர் இடையே விசேட கலந்துரை யாடல்

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், பிராந்திய பதற்றங்களின் பின்விளைவுகள் மற்றும் அவற்றின் விரிவான தாக்கங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கை மற்றும் “மகாசாகர் தொலைநோக்கு” முயற்சிக்கு தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு!

திருச்சி: திருச்சி சிறுகனூரில், ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் பெயரில் திமுக மாநாடு இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. 10 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடக்கும் இம்மாநாடு, திமுகவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும். திரைப்பட இசையமைப்பாளர் தேவா மற்றும் இசைக் கலைஞர் அப்துல் குத்தூஸின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரம்மாண்ட கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி, தொண்டர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு மேடைக்குச் செல்வார். மாநாட்டிற்காக 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பேர் அமரவும், 7 லட்சம் பேர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இன ஒடுக்குமுறைக்கு எதிராக வீறு கொண்டு களமாடியவர், நல்லகண்ணு! கவிஞர் காசி ஆனந்தன்

இன ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போர்க்களத்தில் வீறு கொண்டு களமாடியவர், நல்லகண்ணு! கவிஞர் காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி!! சென்னை, பிப். 26   ‘பொதுவாழ்வில் தூய்மையாக வாழ்ந்த பொதுவுடைமையாளரை இழந்தோம். நெஞ்சம் நிமிர்த்தி உரிமை இழந்தோர் விடியலுக்காய் நெருப்பை எரிந்து வெடித்த தீப்பந்தமாய் அணைந்தது. வீறு கொண்ட தலைவராய் வாழ்ந்து ஆண்டுகள் நூறு கண்ட வீரவேங்கை விழி மூடியது. உலக விடுதலையாளர் நல்லகண்ணு ஐயா உயிர் மூச்சை நிறுத்தினார்.’ இவ்வாறு தமிழீழ நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன், நல்லகண்ணு ஐயா மறைவுக்குறித்த தனது இரங்கல் அஞ்சலியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் பதிவு செய்திருப்பதாவது:- நல்லகண்ணு ஐயாவின் முதலானிய ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள்-உழவர் போராட்டங்கள் – உயர் சாதிக்காரர்களின் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சாதி ஒழிப்புப் போராட்டங்கள் – ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ” நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தன. ” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,” பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ‘அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு 25. 02. 2026 அன்று பிற்பகல் 1. 55 மணியளவில் காலமானார்.’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
செய்திகள் தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இந்தியாவின் விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் நடந்த விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.ரெட்பேர்ட் ஏர்வேஸுக்குச் சொந்தமான விமான ஆம்புலன்ஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நேற்று (23) இரவு 7:11 மணிக்கு ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புது டில்லிக்கு புறப்பட்ட விமானம், இரவு 7:30 மணியளவில் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது.அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறித்த விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், விபத்தானது, இடியுடன் கூடிய மழை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர்களில், இரண்டு பணியாளர்களும் ஒரு நோயாளியும் அவரது உறவினர்களும் அடங்குவதாக மேலும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ மனு தாக்கல்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது.அதன் பின்னர் இந்தத் தடை இந்தியாவால் அவ்வப்போது நீடிக்கப்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தடையானது நீடிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை U.A.P.A தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, வைகோ 2013 இல் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி மேன்முறையீடு ஒன்றை செய்திருந்தார்.இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி…

மேலும் படிக்க