அண்மை செய்தி இலங்கை செய்தி. 

டுபாயில் சிக்கிய ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான “பஸ் லலித்” எனப்படும் லலித் கன்னங்கர என்பவர், மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ‘பஸ் லலித்’ இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். டுபாய் பாதுகாப்புப் படையினரால் கடந்த நாட்களில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ மீது மனிதக்கொலை, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஊர்காவற்றுறையில் வாகன விபத்து- சாரதியின் தூக்க கலக்கத்தில் நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் –  ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாள்ளத்துற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று (22) மதியம் இடம்பெற்றுள்ளது. அராலிச் சந்தியை அண்மித்த பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற குறித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான குறித்த கார் யாழ் வேலணைப் பகுதியை நோக்கி புதிதாக கட்டமைக்கப்பட்டுவரும் அதி உயர் மின் கம்பத்தில் மோதி பலத்த சேதங்களுக்குள்ளான நிலையில் பொலிசாரின் விசாரணையை அடுத்து பாரம் தூக்கியின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த விபத்தின் போது எவருக்கும் பாரதூரமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவருவதுடன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கமே விபத்துக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

நாடு திரும்பும் அகதிகளின் பிரச்சினைகளை ஒரே பொறிமுறையில் தீர்க்க வேண்டும்

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகளை ஒரே பொறிமுறையில் நீக்குவதற்கு வடக்கு, கிழக்கில் ‘ஒருங்கிணைந்த மீள் வருகை மற்றும் மறுவாழ்வு அலகு’ ஒன்றை நிறுவ வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2 இல் விசேட கூற்றொன்றை முன்வைத்தே அவர், இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்தியாவிலுள்ள எமது மக்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது சனத்தொகை வீதம் குறைவடைந்து வருகிறது.இந்நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்தால் எமது சனத்தொகை விகிதாசாரம் அதிகரிக்கும், பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும்.இவ்வாறு வரும் பட்சத்தில்,இராணுவத்தின் வசமுள்ள இவர்களின் காணிகளையும் விடுவிக்க முடியும்.இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப விரும்புவது தொடர்பாக, குறிப்பாக பாதுகாப்பு அனுமதி, வீடமைப்பு,காணி மற்றும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வீட்டுத்திட்ட மிகுதி நிதி எங்கே? – அராலி மத்தியில் மக்கள் போராட்டம்

வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி இன்றையதினம் அராலி மத்தி பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்கப்பட்டது. குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமான போராட்டம் சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக நகர்ந்தது. அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் மற்றும் உதவித் திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஈழத்தமிழர்கள்மீதான சகல படுகொலை களுக்கும் சர்வதேச நீதிவிசாரணை அவசியம்; ரவிகரன்

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள்மீதான சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதிவிசாரணை அவசியம்; அதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்திய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சர்வதேச நீதி விசாரணைக்கு தற்போதைய அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தினார். இவ்வாறு சர்வதேச நீதிவிசாரணைகள் மேற்கொள்ளப்படுவதன்மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமெவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் 18.08.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழினப் படுகொலைச் சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வுப் பணிகளின் 54ஆம் நாள் அகழ்வு 17.08.2026…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நேரடி தலையீடுகளை மேற்கொள்வதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை  சந்தித்து கலந்துரையாடிய போதே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இவ்வாறு உறுதியளித்துள்ளார். இச்சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காண்பதே  இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தேவையான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக சஜித் பிரேமதாச இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், அவற்றுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்க்கட்சித்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை இன்று 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்காக பாடசாலை ரீதியில் விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேர் உள்ளடங்கலாக 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்று படுத்திக் கொள்வது கட்டாயமாகும். அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். பரீட்சைக்கான கால அட்டவணையை கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பதாகவே…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இடிந்து விழும் அபாயத்தில் பழமையான இரும்புப் பாலம்; பரவிப்பாஞ்சான் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள பழமையான இரும்புப் பாலம் சேதமடைந்துள்ள நிலையில், அதனை உடனடியாக சீரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏ-9 பிரதான வீதியிலிருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள குறித்த பாலம், 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாகவும், 1985ஆம் ஆண்டு சேதமடைந்த பின்னர் விடுதலைப் புலிகளால் தற்காலிகமாக அமைக்கப்பட்டு நீண்டகாலமாக மக்கள் பாவனையில் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், பல்வேறு மக்கள் போராட்டங்களின் பின்னர் 2018ஆம் ஆண்டு கட்டம் கட்டமாக மீள மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பரவிப்பாஞ்சான் கிராமத்தின் வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ். நகரில் படையினரின் அடாவடித்தனமான வியாபாரம்

யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால் சிறு வியாபாரிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது. அத்துடன் வலிகாமம் வடக்கு பகுதியில்  அபகரிக்கப்பட்ட மக்களின் சொந்தக் காணிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் விவசாய விளைச்சல்ககளே இவ்வாறு யாழ் நகருக்குக் கொண்டுவந்து விற்கப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது ​குறிப்பாக வலிகாமம் வடக்கில் மக்களின் சொந்தப் பூர்வீக நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அந்தக் காணிகளில் படையினர் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறு அறுவடை செய்யப்படும் சோளங்களை இராணுவத்தினரே நேரடியாகத் தங்களது வாகனங்களில் யாழ்ப்பாண நகர்ப் பகுதிக்குக் கொண்டுவந்து விற்பனையில் ஈடுபட்டு வருவது அண்மைய நாள்களில் அவதானிக்க முடிகின்றது. ​அதேநேரம் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி வலிகாமம் பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பல வருடங்களாக அகதி…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

களுவாஞ்சிகுடியில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு:ஒருவர் கைது

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றில் திருடப்பட்ட 24½ பவுண் தங்க நகைகளை 24 மணி நேரத்திற்குள் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளனர். துறைநீலாவணையில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24½ பவுண் தங்க நகைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) திருடப்பட்டிருந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதே நாளில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டைப் பெற்றவுடன் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன் பலனாக, 24 மணி நேரத்திற்குள் களவாடப்பட்ட அனைத்து தங்க நகைகளும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டார். விசாரணைகளில், கைது செய்யப்பட்ட யுவதி வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், பாதிக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.…

மேலும் படிக்க