தாயகச் செய்தி 

செம்மணியில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு

செம்மணியில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடு இன்று கண்டுபிடிப்பு செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாளான இன்று, 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது அடையாளம் காணப்பட்டது

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மாவிட்டபுரம் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய 2026 மகோற்சவப் பெருவிழா இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. முருகப்பொருமானுக்கு அதிகாலையில் இருந்து சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று காலை மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்று, முருகப் விநாயகப் பெருமான், சிவன், உமாதேவியார்  சமேதராயும் மற்றும் முருகப் பொருமான் வள்ளி தெய்வானை சமேதராயும், வசந்த மண்டபத்திலிருந்து  கொடித் தம்பம்  எழுந்தருளி கொடியேற்றம்  சிறப்பாக நடைபெற்றது. மாவை கந்தனின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி  தேர்த் திருவிழாவும்  12 ஆம் திகதி ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித  தீர்த்தத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளமையும்  குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும்   ஏராளமான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

இனியவாழ்வு இல்ல த்தின் பொதுச்சபை யைக் கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்க;

இனியவாழ்வு இல்லத்தின் பொதுச்சபையைக் கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்க; பழையமாணவர்களும், பெற்றோரும் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்லத்தின் பொதுச்சபையை விரைவாக கூட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொழ்ளுமாறு, இனியவாழ்வு இல்லத்தின் பழையமாணவர்களும், பெற்றோரும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு விரைவில் பொதுச்சபையைக் கூட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் 18.07.2026நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்லத்தில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், உடனடியாக பொதுச்சபையைக் கூட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி இனியவாழ்வு இல்லத்தின் பழையமாணவர்களும், அங்கு கல்வி கற்கும் மாணவர்களுடைய பெற்றோர்கள் பலரும்…

மேலும் படிக்க