இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு பிரிவினருக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் மோதல் ஒன்று ஏற்பட்டிருந்தது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இம்மோதலில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று திங்கட்கிழமை காலை நிலவரப்படி சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், தற்போது அங்கு மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பேருந்து புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று திங்கட்கிழமை முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணையாக சொகுசு பேருந்து கட்டணங்களும் அதிவேக வீதிகளுக்கான பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நடைமுறைக்கு வரும் புதிய பேருந்து கட்டண திருத்தம் குறித்து பேருந்து ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்தி, பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான சோதனைகள் இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் புதுப்பிப்பதற்கு இன்னும் 2 நாட்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீர்கொழும்பு சிறை நிலைமை கட்டுப் பாட்டுக்குள்;விசேட விசாரணைக் குழுவொன்று நியமனம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் நேற்று (05) இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பாரிய மோதலில் இருவர் உயிரிழந்ததோடு, இந்த வன்முறைச் சம்பவத்தின் போது காயமடைந்த சுமார் 35 கைதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமென தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்குள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்று அம்பலமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட தர்க்கமே இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலானது “பூரு மூனா” (Booru Moona) எனும் பாதாள உலகக் கும்பல் தலைவருடன் நெருங்கிய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவு அபிவிருத்திக்கு ரூ. 2000 மில். நிதி ஒதுக்கீடு. பிமல் ரத்நாயக்க

நெடுந்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் ரூ.1500-2000 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்பட அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார். நெடுந்தீவு பகுதியில் ரூ. 40மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது. அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ.1500-2000 ஆயிரம் மில்லியன் வரை அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. நெடுந்தீவில் ரூ.40மில்லியன் செலவில் நிரந்தரமாக எரிபொருள் நிலையமொன்றை அமைக்கவுள்ளோம். நெடுந்தீவு மக்களுக்கான எரிபொருள் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இங்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிறுவ நாம் கோரிய போது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இராணுவ முகாமுக்கு முன் கேப்பாபுலவு மக்கள் போராட்டம்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (05.06.2026) 12வது நாளை எட்டிய நிலையில், இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுவரை உரிய தீர்வு எட்டப்படாத காரணத்தால், இன்று (05) காலை கேப்பாபுலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேரணியாக சென்று தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக நிறைவு பெற்றிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதுடன் மக்களின் பயன்பாட்டிற்காக இருந்த பாடசாலை, ஆலயம், தேவாலயம் மற்றும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

படகுத்துறையில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மீனவ வாடிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

படகுத்துறையில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மீனவ வாடிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்பிரிவில், இலுப்பைக்கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்குரிய கடலுணவுகளைக் கொள்வனவுசெய்யும் வாடிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது வலியுறுத்தலையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த வாடிகளை விடுவிப்பதுதொடர்பில் கடற்படையினருக்கு கடிதமொன்றை அனுப்பிவைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் – மாந்தை மேற்கு, பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 03.07.2026நேற்று இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், படகுத்துறைப் பகுதி மீனவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 18.06.2026அன்று அப்பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், கடலுணவுக் கொள்வனவாளர்கள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இதன்போது தமது கடலுணவுக்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கரும்புலிகள் நாள் ஜூலை 5-

கரும்புலிகள் நாள் ஜூலை 5- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5-ஆம் நாள் ஈழத் தமிழர்களால் கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொடைப் பிரிவான கரும்புலிகளின் முதல் தற்கொலைத் தாக்குதலை 1987-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம்  திகதி. கப்டன் மில்லர் (வல்லிபுரம் வசந்தன்)  நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவ முகாம் மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி முதன் முதலாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் நடந்த ஜூலை 5-ஆம் நாளை, விடுதலைப் புலிகள் இயக்கம் “கரும்புலிகள் நாள்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஆண்டு தோறும் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களால் இந்நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மானிப்பாய் குப்பை மேடு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கழிவு சேகரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு நிலையத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குறித்த குப்பை மேட்டில் திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர். பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் சீரான கழிவு தரம்பிரிப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக இப்பகுதியில் தீ விபத்துகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இம்முறை கழிவுப் பொருட்கள் முறையாக தரம்பிரிக்கப்படாததாலேயே தீ ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குப்பை மேடு குடியிருப்புகளுக்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவு குடிநீர் பிரச்சினை தீர்க்க கோரிக்கை

நெடுந்தீவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், கடல்நீரை நன்னீராக்கும் (RO Plant) திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் RO Plant திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 80,000 லிட்டருக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டு, சுமார் 900 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், நெடுந்தீவில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் தற்போது 1400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால், தற்போதைய நீர் உற்பத்தி போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் அரச…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

2026 GCE O/L விண்ணப்பம் ஒன்லைனில் கோரப்பட்டுள்ளது!

இவ்வருடம் (2026) நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2026 GCE O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கையை இலங்கை பரீட்சைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் இருவரும் நேற்று (03) முதல் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்:பாடசாலை விண்ணப்பதாரிகள்:  தத்தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஏற்கனவே அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விண்ணப்பதாரிகள்:  தமது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டை…

மேலும் படிக்க