சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார்மீண்டும் உறுதியாக கூறிய பழ. நெடுமாறன்

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் மீண்டும் உறுதியாக கூறிய பழ. நெடுமாறன் தஞ்சாவூர், ஜூலை 23– தஞ்சாவூரில் இன்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– நூற்றாண்டு விழா தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக பொறுப்பேற்ற முது முனைவர் வ.அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்படி உள்ளது என்பது குறித்து ஓராண்டுக்கு பிறகு கருத்து கூறுவது தான் சரியாக இருக்கும். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றியதை வரவேற்கிறோம். நான் சினிமா பார்ப்பதில்லை. அதனால் ஜனநாயகன் படம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டுநாயக்கா விமான படைத் தளம்மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்ட நாள்

24.7.2001ம் ஆண்டு கட்டுநாயக்கா விமான படைத் தளம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரகாவியமான 14கரும்புலி மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்   தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையினை ஏற்படுத்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது தரைகரும் புலிகள் சென்று தாக்குதல் நடத்தி வீர வரலாறு படைத்து விடுதலை போராட்டத்திற்கு திருப்பு முனையினை ஏற்படுத்திய தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு நாள். தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழர்களின் வரலாற்றில் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களையும் வெற்றி தாக்குதல்களையும் நினைவிற்கொண்டு புலிகளின் வீரத்தினையும் வரலாற்றினையும் எடுத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. கட்டுநாயக்காவில் குண்டுகளை ஏற்றி தமிழர் வாழ் இடங்கள் மீது வீசி தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களத்தின் வான் கழுகுகளை அவர்கள் வாழ்கின்ற குகைக்கு சென்று அழித்த க*ரு*ம்*பு*லி மறவர்களின் வீரத்தினை அவர்களின் வரலாற்றினை இன்று நினைவு கொள்ள…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான நேற்று (23)07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனு. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆணிகளும் சீமெந்து தட்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 464 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி 

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது; ரவிகரன்

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது; ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு அரண் ஆகுதலே இத்தீவின் நல்லிணக்கம் – ரவிகரன் எம்.பி இடித்துரைப்பு இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல் உயரும்போதெல்லாம் அரச இயந்திரங்களின் துணையோடு தமிழர்கள்மீதான அடக்குமுறைகள் இனக்கலவரங்களாகத் தொடர்ந்ததாகத் தெரிவித்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாலேயே தமிழர்கள் சமஷ்டியையும், தனி ஈழத்தையும் கோரவேண்டியநிலை ஏற்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே ஆட்சியாளர்கள், இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகமான ஈழத் தமிழர்களுக்கு அரணாகுவதால் மாத்திரமே இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்துகாணால் ஆக்கப்பட்டோர் விவகாரம், முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை, புதைகுழிகள் விவகாரம், நினைவேந்தல் உரிமை உள்ளிட்ட தமிழர்கள் நீதிகோரும் விடயங்களுக்கு ஆதரவாக ஆட்சியாளர்களும் குரல் கொடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். கறுப்பு ஜூலை தொடர்பாக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர்  இன்றைய தினம்  செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது. அதனை அடுத்து இன்றைய தினம் புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ,  ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன்,  பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்,  இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக்,  நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர். இந்நிலையில்  செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்..!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்..! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.. அதனை அடுத்து இன்றைய தினம் புதன்கிழமை புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயிலிட்டி காணி விடுவிப்புக்காக தொடரும் போராட்டம்

அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மயிலிட்டி மக்கள், அந்த நிலங்களை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்ந்தது. ​மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக்குழு மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்று வரும் இப்போராட்டத்தில், வலி வடக்கு வலையத்தைச் சேர்ந்த ஜே/248, ஜே/251, ஜே/246 மற்றும் ஜே/255 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். முன்பதாக யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள், இன்றுவரை வெவ்வேறு பிரதேசங்களில் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். அதேநேரம் யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தங்களின் சொந்த நிலங்கள் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருப்பது, வாழ்வாதாரத்தையும், பூர்வீகமாக வாழ்ந்த…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பம்.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை (15) காலை ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நாளைய தினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி முதலாம் கட்ட அகழ்வு பணிகள் 09 நாட்கள் நடைபெற்றதில், 19 மனித எண்புக்கூடுகள் மீட்கப்பட்டன. அதனை அடுத்து இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்.

பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (வயது 88) இன்று காலமானார். தனது மந்திர குரலால் கோடிக்கணக்கான மனங்களை வசப்படுத்தியிருந்த அவர், இன்று காலமானார். ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். 1938ம் ஆண்டு ஆந்திராவின் பல்லேபட்லா கிராமத்தில் ஏப்ரல் 23 அன்று பிறந்தார். 19 வயதிலேயே இவர் சினிமா துறைக்குள் நுழைந்துவிட்டார். 1957ல் வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன் என முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து மறக்க முடியாத பாடல்களை கொடுத்திருக்கிறார். இவர் 4 முறை சிறந்த பின்னணி பாடகி என்று தேசிய விருதுகளை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தமிழ் மக்களி டமிருந்து ராஜபக்சக் கள் கொள்ளையடித்த நகைகளை மக்களு க்கு வழங்க வேண்டும்

தமிழ் மக்களிடமிருந்து ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீண்டும் அவர்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தமிழரசுக்கட்சி எம். பி எஸ். சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவற்றில் ஊழல் நடந்துள்ளதால் இது தொடர்பில் விசாரணை செய்யாமல் விட முடியாது என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நகைகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக பட்டியலைக் கோரி அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர்,எத்தனை ஆயிரம் பேர் நகைகளை அடகு வைத்துள்ளனர். அவ்வாறென்றால் எவ்வளவு கோடி ரூபா பெறுமதியான நகைகளை ராஜபக்‌ஷ அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது என்பதனை வெளிக்கொண்டு வாருங்கள் என்றும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,…

மேலும் படிக்க