இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையின்படி 21 மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்டநேரம் வெயிலில் இருப்பதால் மக்கள் சோர்வை உணரக்கூடும், அதே சமயம் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருப்பதால் வெப்பத் தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும். எனவே நிலவும் உயர் வெப்பநிலை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தியாக தீபம் அன்னை பூபதியின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி

தியாக தீபம் அன்னை பூபதியின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு நோக்கி புறப்பட்டுள்ளது. தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவரது திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் வீதியிலுள்ள தியாக தீபம் திலீபன்  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இன்று காலை இந்த ஊர்தி பணி ஆரம்மானது. யாழில் இருந்து இன்று ஆம்பிக்கப்பட்டுள்ள இந்த ஊர்தி, வடக்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று இறுதியாக அன்னை பூபதி அம்மாவின் நினைவிடத்தை சென்றடைந்து நிறைவடையும்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் சாதனை

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் மிகச் சிறந்த நிலையை எட்டியுள்ளன. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் (பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்) 9,191 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் அடிப்படையில் 65.19 சதவீதமாகும். இதன் மூலம் மாகாணங்களுக்கிடையிலான தரவரிசையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் பெருமையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், உயிரியல் பிரிவு மற்றும் கலைப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கேப்பாப்பிலவு மக்களின் பூர்விகக் காணிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாப்பிலவு மக்களின் பூர்விகக் காணிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து; இராணுவத்துடன் பேச்சு நடாத்தி விரைவில் முடிவைத் தெரிவிப்பதாக – ஜனாதிபதி பதில் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத்தொடர்பில், கூடியவிரைவில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, குறித்த கலந்துரையாடலின் பின்னர் கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பான முடிவு தம்மால் அறிவிக்கப்படுமெனவும் பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் 07.04.2026நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது கேப்பாப்பிலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பில் குறித்த பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்குழுக்கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடக்கு மற்றும் கிழக்கு பொது மக்களின் காணி களை விடுவிப்ப தற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கை ஜனாதிபதி!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார். இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் 1,000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எஞ்சிய காணிகளையும் முறைப்படியாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். அத்துடன், நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போது எழுந்துள்ள சிக்கல்களுக்குச் சாதகமான தீர்வுகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார். மத வழிபாட்டுத்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

தேசிய QR கொடுப் பனவு ஊக்குவிப்புத் திட்டம்”உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப் படவுள்ளது.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரூ. 5,000 வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணத்தை (Merchant Discount Rate) முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் எவ்வித கூடுதல் செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போது இலங்கையில் மிகவும் வலுவான டிஜிட்டல் நிதி உட்கட்டமைப்பு காணப்படுவதுடன், நாட்டின் வயதுவந்த மக்களில் 89% பேருக்கு வங்கி வசதிகள் உள்ளன.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனித குலமும் வேதனையை ரஞ்சித் ஆண்டகை

உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனிதகுலமும் வேதனையை அனுபவித்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரதான திருப்பலியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வது அல்லது புனித பைபிளின் பகுதிகளை வாசிப்பது மாத்திரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக இந்தக் காலப்பகுதியில் உலக அமைதிக்காக நாம் பிரார்த்திப்போம். ஒரு மனிதனின் சுயநலத்தாலும், உலகை ஆள வேண்டும் என்ற அந்த மனிதனின் ஆசையாலும் இன்று உலக அமைதி சீர்குலைந்துள்ளது. இதனால் மனிதகுலத்திற்கே பெரும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த மனிதனின் மனதை மாற்றவும், இந்த கடினமான மற்றும் தவறான பாதையிலிருந்து அவரை விலக்கவும் நாம் பிரார்த்திப்போம். கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்களால்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது

விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகள், எவ்வித மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில் நேற்று (02) தற்காலிகமாக நிறைவடைந்துள்ளன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் உடல்களைத் தேடி, களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் நேரடி மேற்பார்வையில் கடந்த மார்ச் 30, 2026 அன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையில் தற்செயலாக எலும்புகள் கண்டெடுக்கப்படாத நிலையில், ஒரு பாரிய புதைகுழி இருப்பதாகக் கருதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும். மார்ச் 30 முதல் ஏப்ரல் 01 வரை மூன்று நாட்கள் அகழ்வுப்…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி 

கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற சம்பவம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று(2) நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக நேற்று(2) நள்ளிரவு பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை கைப்பற்ற முனைந்த போது வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காணொளி அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள் மடம் மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

குருக்கள்மடம் மனித புதைகுழியில் இடம்பெற்று வந்த அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மூன்று தினங்களாக இப்புதைகுழியில், அகழ்வுப் பணிகள் இடம்பெற்று ஆறடி ஆழம் வரை தோண்டப்பட்டது.இருந்தபோதும் மனித எச்சங்கள் எதையும் இதற்குள் காணக்கிடைக்கவில்லை. இதனால், இப்பணிகள் நேற்று முன்தினம் (01) கைவிடப்பட்டன.தோண்டப்பட்ட இடம் மண்ணிட்டு மூடப்பட்டது. களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஸ்கேன் செய்யப்பட்ட வேறு இடத்தில் பணிகளைத் தொடர்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.புனித ஹஜ் கடமையை முடித்துவிட்டு கல்முனை வீதியால் பயணம் செய்திருந்த 170 முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இவ்விடத்தில் மூடப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க