சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பலாலி காணி விடுவிப்பு போராட்டம் – போராட்டகாரருக்கு எதிராக வழக்கு

பலாலியில்  இடம்பெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் இடையூறு விளைவித்ததாக கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தன், ஜனநாயக கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமையாளர்களுக்கு பலாலி பொலிசாரும், உதவி பொலிஸ் அத்தியட்சகரும் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கில், 2026.08.16 அன்று பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் என்பவரின் ஏற்பாட்டில், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி, காலை 09.30 மணி முதல் 13.00 மணி வரை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பலாலி பிரதான வீதி T சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பாக குறிப்பிட்டே, 2026.08.17 அன்று பலாலி பொலிஸாரினால்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் செம்மணியில் அகழ்ந்து எடுக்கப் படும் மனித எச்சங்களுக்கு சர்வதேச நீதி கோரி பேரணி

  யாழ்ப்பாணம் – 17.08.2026 செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித எச்சங்களுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணரவும், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகளுக்கு சர்வதேச நீதியைப் பெற்றுத்தரவும் கோரி இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வாசிகசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, கோயில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை இடம்பெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அகழ்வுப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடனும் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.  ஈழத்தமிழர் வரலாற்றுப் பக்கங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய ‘செஞ்சோலை படுகொலை’ நடந்து இன்றோடு (2006 ஆகஸ்ட் 14 – 2026 ஆகஸ்ட் 14) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாளில், முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை விமானப்படை நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 16 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவிகள், முதலுதவி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிக்காக வல்லிபுனத்திலுள்ள செஞ்சோலை வளாகத்தில் தங்கியிருந்தனர். ஆகஸ்ட் 14 காலை 7:00 மணியளவில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிஃபிர் (Kfir) போர் விமானங்கள்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கு அரசின் அறிவிப்பு

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) உதவியுடன் மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான சிறப்பு ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக குறித்த நபர்களின் இலங்கை அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, அரச புலனாய்வுச் சேவையின் ஒப்புதல் அனுமதி பெறப்பட்ட பின்னர் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் ஊடான பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்கு சென்றவர்கள், தங்களுடன் தொடர்புடைய கொலை, தேசத்துரோகம் உள்ளிட்ட பாரிய குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை களுக்கு இடையூறு

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு காரணமாக இன்று (11) முற்பகலில் கடவுச்சீட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பில் வினவியபோது, குறித்த அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? பலாலி மக்கள்

எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? எங்கள் நிலங்களை சுரண்ட இனியும் இடமளிக்க முடியாது என்ற வலுவான கோசத்துடன், வலிகாமம் வடக்கு – பலாலி பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் இன்று 8ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். பல ஆண்டுகளாக தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும், தமது காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் காணப்படுவதால் வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும், பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும், மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு மக்கள் தமது…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

எமது பூர்வீக நிலங் களை உடனடியாக எம்மிடம் ஒப்படை யுங்கள்! – மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வலியுறுத்தியும், நீண்டகாலமாக காணிகளை மீட்பதற்காக போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மன்னாரில் இன்று (7) வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டம், காணி இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டிலும், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) நிறுவனத்தின் அனுசரணையிலும் நடைபெற்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை உள்ளிட்ட பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மன்னார் மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், கிராம மக்கள், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனிதப் புதைகுழியின் என்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 ஆக உயர்வு

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாள் பூர்த்தியடையும் நிலையில் நேற்று வியாழக்கிழமை வரை 499 என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு 494 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை குவியல்களாகவும், ஒழுங்கு முறையின்றியும் நேர் சீரின்றியும், உட்கார்ந்த நிலையிலும், கழுத்துடன் துண்டாட்டப்பட்டு, மண்டையோடு பிறிதொரு இடத்திலும் தலையில்லா முண்டமான என்புகூட்டு பிறிதொரு இடத்திலும், மழை அங்கியுடன் சிறுவர் ஒருவரின் என்புக் கூடும் மீட்கப்பட்டுள்ளன. என்புக் கூடுகள் மாத்திரமன்றி சான்றுப் பொருட்களாக குழந்தைகளுக்கான “பால் போத்தல்”, பாடசாலை புத்தக பை, வளையல்கள், செருப்பு, காலுறைகள், மோதிரம், தாயத்து உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.   மீட்கப்பட்ட என்பு கூடுகள் மற்றும் சான்றுப் பொருட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி எலும்புக் கூடுகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன்

செம்மணி எலும்புக்கூடுகளின் ஆய்வு விவகாரம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணுமாதிரிகளை சேகரித்து பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன்எம்.பி வலியுறுத்து செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமெவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 05.08.2026இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் ஓகஸ்ட் 04ஆம் திகதி நேற்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் செம்மணிமனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483மனித எலும்புக்கூடுகள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பண்டாரவன்னியன் மற்றும் பால்ராஜ் போன்றோரை நினைவு கூருவது எமது வரலாற்றுக் கடமை;

பண்டாரவன்னியன் மற்றும் பால்ராஜ் போன்றோரை நினைவு கூருவது எமது வரலாற்றுக்கடமை; அந்த வரலாற்றுக் கடமையை தொடர்ந்து முன்னெடுப்பேன் – ரவிகரன் எம்.பி தெரிவிப்பு தமிழர்களின் வீரத்தினைப் பறைசாற்றுகின்றவகையிலான வரலாற்றினையுடைய வன்னி மன்னன் பண்டாரவன்னியன், பால்ராஜ் போன்றவர்களை நினைவுகூருவது தமிழர்களின் வரலாற்றுக் கடமை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அத்தோடு கடந்த மேமாதம் இலங்கை நாடாளுமன்றில் பால்ராஜ்ஜிற்கு தாம் அஞ்சலி செலுத்தியமைக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், பெரும்பான்மை இனத்தவர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்ததாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவ்வாறான எதிர்ப்புக்களைக் கண்டு தாம் அஞ்சப்போவதில்லை எனவும் இவ்வாறான நினைவுகூரல்களும், அஞ்சலிகளும் தம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவுந் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – முற்றவெளி மைதானத்தில் 02.08.2026நேற்று இம்பெற்ற தமிழர் பாரம்பரிய வீரக்கலை வீரர்களின் மதிப்பளிப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு…

மேலும் படிக்க