சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கரும்புலிகள் நாள் ஜூலை 5-

கரும்புலிகள் நாள் ஜூலை 5- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5-ஆம் நாள் ஈழத் தமிழர்களால் கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொடைப் பிரிவான கரும்புலிகளின் முதல் தற்கொலைத் தாக்குதலை 1987-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம்  திகதி. கப்டன் மில்லர் (வல்லிபுரம் வசந்தன்)  நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவ முகாம் மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி முதன் முதலாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் நடந்த ஜூலை 5-ஆம் நாளை, விடுதலைப் புலிகள் இயக்கம் “கரும்புலிகள் நாள்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஆண்டு தோறும் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களால் இந்நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மானிப்பாய் குப்பை மேடு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கழிவு சேகரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு நிலையத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குறித்த குப்பை மேட்டில் திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர். பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் சீரான கழிவு தரம்பிரிப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக இப்பகுதியில் தீ விபத்துகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இம்முறை கழிவுப் பொருட்கள் முறையாக தரம்பிரிக்கப்படாததாலேயே தீ ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குப்பை மேடு குடியிருப்புகளுக்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவு குடிநீர் பிரச்சினை தீர்க்க கோரிக்கை

நெடுந்தீவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், கடல்நீரை நன்னீராக்கும் (RO Plant) திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் RO Plant திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 80,000 லிட்டருக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டு, சுமார் 900 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், நெடுந்தீவில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் தற்போது 1400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால், தற்போதைய நீர் உற்பத்தி போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் அரச…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

2026 GCE O/L விண்ணப்பம் ஒன்லைனில் கோரப்பட்டுள்ளது!

இவ்வருடம் (2026) நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2026 GCE O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கையை இலங்கை பரீட்சைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் இருவரும் நேற்று (03) முதல் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்:பாடசாலை விண்ணப்பதாரிகள்:  தத்தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஏற்கனவே அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விண்ணப்பதாரிகள்:  தமது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

தமிழக முதலமைச்சர் விஜய் – இலங்கை துணை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜயை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில், விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த  உயர்ஸ்தானிகர், இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக பேசினார். இரு நாடுகளின் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்தும் வழிகள், கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான நட்புறவு மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் பிரதி  உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மேயரை பதவி நீக்கிய வடக்கு ஆளுனரின் வர்த்தமானிக்கு ஜீலை 15 வரை இடைக்கால தடை:

வவுனியா மாநகரசபை மேயரை பதவி நீக்கிய வடக்கு ஆளுனரின் வர்த்தமானிக்கு ஜீலை 15 வரை இடைக்கால தடை: வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு! வவுனியா மாநகர மேயர் சு.காண்டீபன் அவர்களை பதவி நீக்கி வடமாகாண ஆளுனர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஆளுனரின் முடிவினை சவாலுக்கு உட்படுத்தி மனுதாரரான வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று (03.07) வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இது தொடர்பாக மனுதாரர் சார்பில் ஆயஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, வட மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வவுனியா மாநகர மேயர் காண்டீபனின் பதவியை நீக்கி அறிவித்தார். அதற்கு எதிராக எழுத்தாணை…

மேலும் படிக்க