உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

நேபாளம், சீனாவில் பேரழிவு வெள்ளம்! உதவிக்கரம் நீட்டும் ஐ.நா

நேபாளம் மற்றும் சீனாவில் பெரும் உயிரிழப்புகளையும், பலர் காணாமல் போகும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் தான் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ள குட்டெரெஸ், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐ.நா. குழுக்களும் அதன் பங்காளி அமைப்புகளும் நிவாரணப் பொருட்கள் மற்றும் பணியாளர்களைத் திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

சுற்றுலா விமானம் திடீர் விபத்து – 13 பேர் உயிரிழப்பு

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. செஸ்னா கரவன் C-208 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், நேற்று (01) பெருவின் பிரபல சுற்றுலாத் தலமான நாஸ்கா கோடுகள் (Nazca Lines) மீது பார்வைப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விமானத்தில் 11 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் பயணித்திருந்தனர். உயிரிழந்தவர்களில் ஜெர்மனியைச் சேர்ந்த 2 பேர், ஸ்பெயினைச் சேர்ந்த 2 பேர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 7 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால் விமானத்தில் இருந்த எவரும் உயிர் தப்பவில்லை என்று பெரு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை சம்பவ இடத்திலிருந்து 4 பேரின் சடலங்கள்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஜப்பானில் நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழந்துள்ளனர்

தென்மேற்கு ஜப்பானின் கியூஷு (Kyushu) தீவில் உள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தின் அளவு: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து 6.1 ரிக்டர் அளவில் பின்னதிர்வும் ஏற்பட்டது. உயிரிழப்பு மற்றும் காயம்: ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி (Sanae Takaichi) அளித்த தகவலின்படி, இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகள்: குமாமோட்டோ, நாகசாகி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள் சேதம்: காஷிமா (Kashima) பகுதியில் உள்ள பிரபல ‘இயான் மால்’ (Aeon Mall) வணிக வளாகத்தின் இரண்டாவது தளம் இடிந்து விழுந்தது. யட்சுஷிரோ நகரில் உள்ள காகித ஆலையின்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட. அமெரிக்க ஜனாதிபதி

மேற்கு ஆசிய போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியுடனான இரவு விருந்தின்போதே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஜி7 உச்சிமாநாட்டை தொடர்ந்து வெர்சாய் அரண்மனையில் மெக்ரோனுடன் இரவு உணவு அருந்தியபோது, ​​டிரம்ப் தனிப்பட்ட முறையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

அமெரிக்காவின் B-52 அடுக்குக்குண்டு வீச்சு போர் விமானம் விபத்து

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் (Edwards Air Force Base), அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான B-52 அடுக்குக்குண்டு வீச்சு போர் விமானம் (B-52 Stratofortress Bomber) விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜூன் 15, 2026 அன்று காலை 11:20 மணியளவில் (உள்ளூர் நேரம்) இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது 1950-களிலிருந்து அமெரிக்க விமானப்படையின் மிக முக்கிய தூணாக விளங்கும் B-52 ரக விமானங்கள், வரலாற்றில் சந்தித்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கடைசியாக 2016-ஆம் ஆண்டு குவாம் (Guam) தீவில் இத்தகைய விமானம் விபத்துக்குள்ளானது, ஆனால் அதில் இருந்த 7 வீரர்களும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தின் முக்கிய விவரங்கள்: வழக்கமான சோதனை ஓட்டம்: இந்த விமானம் அதன் ரேடார் அமைப்பை நவீனமயமாக்கும் திட்டத்தின் (AESA…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

நாம் கூட்டாளிகளாக இருக்க வேண்டும், எதிரிகளாக அல்ல”; சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

உலகமே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை, சீனாவின் ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ மாளிகையில் இன்று (14) ஆரம்பமானது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெறும் இந்தத் தீர்மானமிக்க பேச்சுவார்த்தைக்காக பெருமளவிலான ஊடகவியலாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரும் தயார் நிலையில் உள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்கத் தூதுக்குழுவினர் தற்போது பிரதான மாநாட்டு மண்டபத்தில் அமர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்தியாளர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். “ஒரு நிலையான இருதரப்பு உறவு உலகிற்கு நல்லது,” என்று குறிப்பிட்ட அவர், “நாம் கூட்டாளிகளாக இருக்க வேண்டுமே தவிர, எதிரிகளாக அல்ல,” என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். “நாம் இணைந்து ஒரு…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

நிலவு பயணத்தின் பின் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II

ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அதன்படி, ஒராயன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று (11) அதிகாலை 5.30 மணியளவில் கலிபோர்னியாவின் சென் டியாகோ கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. 10 நாட்கள் கொண்ட இந்த விண்வெளிப் பயணத்தை முன்னெடுத்து, ஒராயன் விண்கலம் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நிலவை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.இந்தத் திட்டத்தின் கீழ், விண்வெளி வீரர்கள் 406,771 கிலோமீட்டர் (252,756 மைல்கள்) தூரத்தைக் கொண்ட நிலவுப் பயணத்தைப் பூர்த்தி செய்துள்ளனர்.மனிதகுலம் விண்வெளியில் இதுவரை பயணம் செய்த அதிகூடிய தூரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.      

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய பண வீக்கம் தோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மறித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இதுவரை இல்லாத மிக மோசமான இடையூறு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் திகதி வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்  ஊடாக, சர்வதேச நாணய நிதியம் பல்வேறு பொருளாதார நிலைமைகள் குறித்த கணிப்புகளை முன்வைக்கவுள்ளது. போரினால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் கடுமையான நிதி நிபந்தனைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடையக்கூடும் என்று…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. உலக செய்திகள் 

ரஷ்ய வெளியுறவு பிரதியமைச்சர் அவசரமாக கொழும்பு வருகை!

ரஷ்ய வெளியுறவு பிரதியமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ நேற்று (31) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்தார். இவருடன், ரஷ்ய வெளியுறவு அமைச்சின் உயரதிகாரி ஒருவரும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்திய தலைநகர் பதுடில்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று மாலை 04.20 மணியளவில், இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் பொறியாளர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு, இலங்கைக்கான ரஷ்யத் தூதர் லெவன் ஜகரேயன் ஆகியோர் விமான நிலையம் சென்று ரஷ்ய பிரதியமைச்சரை வரவேற்றனர். இலங்கை-ரஷ்யாவுக்கிடையிலான 11 ஆவது அரசியல் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில், இவர் இலங்கை வந்துள்ளார். நாட்டின் உயர்மட்ட தலைவர்களையும் இவர் சந்திப்பாரென வௌிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மேலும் படிக்க
உலக செய்திகள் சிறப்புச் செய்தி 

வளைகுடா கடற் பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளின் துறைமுகங்களை நோக்கிச் சென்ற கப்பல்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பின்வரும் பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளன: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகப் பல சர்வதேச கப்பல் நிறுவனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. வெளிநாடுகளில் பணியாற்றும் மாலுமிகள் அனுப்பும் பணத்தை  நம்பியிருந்த ஆயிரக்கணக்கான…

மேலும் படிக்க