சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

கனடாவில் வரலாறு படைத்த தமிழினப் படுகொலை நினைவகம் திறக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு நாள்!

கனடாவில் வரலாறு படைத்த தமிழினப் படுகொலை நினைவகம் திறக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு நாள்! கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழினப் படுகொலை நினைவகம் (Tamil Genocide Monument) திறக்கப்பட்டு நேற்றுடன் (மே 11, 2026) ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி, சிங்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் இந்த நினைவகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. ஈழத் தமிழர்களின் பூர்வீக தாயகமான தமிழீழத்தின் வரைபடம் மற்றும் வடக்கு-கிழக்கின் ஒன்பது மாவட்டங்களைக் குறிக்கும் ஒன்பது தூண்களுடன் 4.8 மீட்டர் உயரத்தில் இந்த நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணி: 2021-இல் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்குப் பதிலடியாக, பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) தலைமையிலான மாநகராட்சி இந்த நினைவகத்தை அமைப்பதாக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

சுவிற்சர்லாந்து பேர்ன் மாநகரில் “வைரக்குடுவை” நூல் அறிமுக விழா – 2026

சுவிற்சர்லாந்து பேர்ன் மாநகரில் “வைரக்குடுவை” நூல் அறிமுக விழா – 2026 ****************************** யாழ்/உரும்பையூர் து.திலக் (கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து வீரகேசரி வார வெளியீட்டில் வாரந்தோறும் எழுதிய படைப்பாளர் பார்வை “வைரக்குடுவை” தொகுதி 01, ஆளுமைகள் 25 நூல் அறிமுகவிழா கடந்த 09.05.2026 சனிக்கிழமையன்று சுவிற்சர்லாந்து Eropaplatz B1, 3008 Bern எனும் இடத்தில் தாயக அறிவிப்பாளர் ஜனனி கார்த்திகேசு தலைமையில் தமிழர் களறி ஆவணக்காப்பக வெளியீடாக அறிமுகமானது…… இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கினை பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருச்சுனையர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், சென்மார்க்கிறேத்தன் கதிர்வேலாயுத சுவிகள் ஆலயம் சார்பாக சோமசுந்தரம் விநாயகமூர்த்தி, ஈழத்தின் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார், நூலாசிரியரின் உறவினர் நாகலிங்கம் மகேஸ்வரன், செங்காளன் மாநிலத்திலிருந்து வருகை தந்த சமூக ஆர்வலர் திரு.வீரகத்தி சிவராசா, ராதா நடனாலய அதிபர் முதுகலைமாணி திருமதி.ஞானசுந்தரி வாசன்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி புலச் செய்திகள் 

மத்திய கிழக்கு போரில் கொல்ல ப்பட்ட அமெரிக்க தமிழ் இராணுவ வீரர்

மத்திய கிழக்கு போரில் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்ற தமிழ் இராணுவ வீரரும் கொல்லப்பட்டுள்ளார். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நடைபெறுகின்றது.இந்தப் போரில் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தில் இணைந்த விசாகன் சத்தியமூர்த்தி கடந்த 21 ஆம் திகதி மத்திய கிழக்கு யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதி கிரியைகள் ஏப்ரல் 2ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் 950 S Sepulveda Blvd, Los Angeles, CA 90049, United States என்ற முகவரியில் அமைந்துள்ள Los Angels National Cemetory யில் நடைபெறவுள்ளதாக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. புலச் செய்திகள் 

இத்தாலியில் பணி யாற்றிய இலங்கை வம்சாவளி பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு

இத்தாலிய பொலிஸ் துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை வம்சாவளி அதிகாரியான  27 வயதுடைய  ஷெஹான் பெர்னாண்டோ , மிலனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வென்னப்புவ, தல்டேனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷெஹான், மிலனில் உள்ள தனது தங்குமிடத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக இத்தாலிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது உடலுக்கு அருகிலேயே அவரது பணித் துப்பாக்கியும் (Service Weapon) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் ஒரு தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து இத்தாலிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் சேதம்

கனடாவின் பிராம்ப்டன், சின்குவாசி பூங்காவில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாச்சலம் மற்றும் கனடியத் தமிழர் தேசிய அவை கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி அதிகாலையில் இந்த நினைவுச்சின்னத்தின் பிரதான மேடை மற்றும் நினைவுப் பலகைகள் வர்ணங்கள் பூசப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல் அருவருப்பானது எனக் குறிப்பிட்டுள்ள விஜய் தணிகாச்சலம், இது ஒட்டுமொத்த ஒன்ராறியோ தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீதான நேரடித் தாக்குதல் எனச் சாடியுள்ளார். வெறுப்புணர்வும் மற்றும் இனப்படுகொலையை மறுக்கும் போக்கும் ஒன்ராறியோவில் இடம்பிடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்லவென்றும் கடந்த 2025ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில் இது திட்டமிட்ட ஒரு சதி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

ஈழத்தமிழன் ஒருவர் சுவிஸ் இராணுவ த்தின் முக்கிய அமைப்பில்..!

ஈழத்தமிழன் ஒருவர் சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில்..! புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) துணைத்தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiram Chandrelegar) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். ஜெனிவா மாநிலத்தில் பிறந்த ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம், தனது கடின உழைப்பாலும் திறமையாலும் சுவிஸ் இராணுவத்தின் உயரிய பொறுப்புகளில் ஒன்றை எட்டியுள்ளார். 2025-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய நிர்வாகக் குழுவில், லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் தலைவராகவும், லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்து இராணுவத்தின் மிக முக்கியமான அமைப்பான சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய துணைத்தலைவராக, ஈழத்தமிழ் பின்புலத்தைக் கொண்ட லெப்டினன்ட்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ உரை இரத்து இனப்படுகொலையே காரணம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழர்கள் மீது ராஜபக்ஷக்கள் நிகழ்த்திய இனப்படுகொலை காரணமாகவே, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:- “ஒக்ஸ்போர்ட் யூனியன் ஏற்பாடு செய்த உரை அல்லது உரையாடல் நிகழ்வுகள் எந்தக் காரணத்துக்காகவும் இரத்துச் செய்யப்படுவதில்லை. அவ்வாறு இரத்துச் செய்வதை கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகவும், தன் புகழுக்கான இழுக்காகவும் அந்த நிறுவனம் கருதுகின்றது. இவ்வாறான நிலையில், நாமல் ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டமை அரிதான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதற்கு, நாமலின் குடும்பத்தால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையே காரணம். நாமல் ராஜபக்ஷவின் குடும்பம் தமிழர்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சொல்லொண்ணாத் துயரங்கள் உலகறிந்தவை. அந்தப் பாதகமான…

மேலும் படிக்க
செய்திகள் புலச் செய்திகள் 

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாகும் லண்டனில் போராட்டம்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது அந்த வகையில் இந்த போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களிலும்  சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் பிரித்தானியாவிலும் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது . தமிழர்களின் தன்னாட்சிக்கான உரிமைக் குரலாகவும், இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாகும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்  கரியாலயம் முன்பாக இன்றையதினம் (04) காலை 11.00 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமாகி பேரணியாக  பாராளுமன்றம் வரை சென்று நிறைவடைந்தது இதில் லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள், லண்டன் மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழர்களின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

சுவிஸ் நாட்டில் நேற்றைய தினம் துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம்

சுவிஸ் நாட்டில் நேற்றைய தினம் துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம்   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஐம்பதாவது அகவையில் தடம் பதித்துள்ள 2026 ஆண்டு தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலை அமைப்புக்குமிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். சுவிஸ் நாட்டில் BERN மாநகரில் நேற்றைய தினம் தேசத்தின் புதல்வி துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை ஒழுங்கமைப்பு செய்தவர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளை பொறுப்பாளராக சமீப காலத்தில் நியமிக்கப்பட்ட திரு .ரகுபதி அவர்கள் ஆவார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சமீபத்தில் எடுக்கப்பட்டநிழற் படம் யாருமே எதிர்பாரத வகையில் அதிரடியாக திரையில் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றி இருந்தார். தேசியத் தலைவர் அவர்களுக்கு துணையாகவும் பக்கபலமாகவும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

இனவழி ப்பு நினைவுத் தூபி- கனடாவில் திறந்து வைக்கப்பட்டது

தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி- கனடாவில் திறந்துவைக்கப்பட்டது   பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு!! கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர். இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றுவதுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதன் பின்னர் கனடாவின் அரசியல்வாதிகள் உட்பட பல நாடாவை வெட்டி நினைத்தூபியை திறந்துவைத்தனர். ஒளிப்படங்கள் https://www.facebook.com/profile.php?id=100063943606793

மேலும் படிக்க