இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அடையாள வேலைநிறுத்தம் நிறைவு.

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை நிறைவடைந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையின்படி 21 மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்டநேரம் வெயிலில் இருப்பதால் மக்கள் சோர்வை உணரக்கூடும், அதே சமயம் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருப்பதால் வெப்பத் தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும். எனவே நிலவும் உயர் வெப்பநிலை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அரசாங்க மருத்துவ சங்கத்தினருடன் பேச்சுவார்த்தைக்கும் இடம் கிடையாது! நளிந்த ஜயதிஸ்ஸ

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நியாயமற்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருடன் இனி எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடம் கிடையாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேவையானால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நீதிமன்றம் செல்லலாம் என சபையில் குறிப்பிட்ட அவர், புதிய நியமனம் பெற்றுக்கொண்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய பொலிஸ் பாதுகாப்பும் அத்துடன் மக்கள் பாதுகாப்பும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நியாயமற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் . அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த மாதத்தில் மாத்திரம் 5 தடவைகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாகியுள்ள…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பெக்கோ இயந்திரம் மோதியதில் அரச பேருந்து விபத்து – 10 பேர் வைத்திய சாலையில்!

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இன்று (09) அதிகாலை 1:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி வீதியைக் குறுக்கறுத்துச் சென்ற பெக்கோ இயந்திரத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. விபத்தின் போது பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்தில் பேருந்து முற்றாக சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான ரயில் சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான ஆசன முன்பதிவுகள் கடந்த 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் ஆர்வத்துடன்  தமக்கான பதிவுகளை மேற்கொள்வதை காணமுடிகின்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் நேற்று பிற்பகல் எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து மக்கள் எரிபொருளை சேகரிக்க முண்டியடித்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி ஊர்தியே இயந்திர பிரச்சினைக் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஊர்தியில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாவும் ஊர்தி வீதியில் கவிழ்ந்ததையடுத்து அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நடந்த இடத்திற்கு கொள்கலன்கள் மற்றும் வாளிகளுடன் விரைந்த பிரதேச வாசிகள், வீதியில் வழிந்தோடிய எரிபொருளைச் சேகரிப்பதில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் தீப்பரவல் ஏதேனும் ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்காலிக லாபத்திற்காக குறித்த மக்கள் உயிரை ஆபத்தில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் டீசல் விலை அதிகரிப்பு.

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது. இதற்கமைய, எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) – 590 ரூபாய் லங்கா சூப்பர் டீசல் (LSD) – 600 ரூபாய் எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) – 620 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லாஃப்ஸ் எரிவாயுவை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுவை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 7,000 மெற்றிக் தொன் லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த 6ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தது. குறித்த எரிவாயு கையிருப்பினை லாஃப்ஸ் நுகர்வோருக்கு இன்று முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அஸ்வெசும கொடுப் பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப் பட்டுள்ள தாக ஜனாதிபதி!

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும்  தற்போதைய உலகப் போர்ச் சூழலினால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். இதன்போது எரிபொருள் மற்றும் வலுசக்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எரிபொருள் செலவினங்களுக்கு ஏற்ப விலைகளைத் திருத்தியமைக்கும் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். சந்தைப் பெறுமதிக்கு இணங்க, தற்போது ஒரு லீற்றர் டீசலின் விலை 600 ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கடுத்த தினமொன்றில் எரிபொருளுக்கான புதிய செலவு…

மேலும் படிக்க