இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சாட்சியங்களின்றி தனிநபர் தாக்குதல் களை மட்டுமே எதிர்க்கட்சி முன்னெடுக்கிறது பிரதமர்

சட்டத்தின் ஆதிக்கத்தினை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதையே நாம் செய்துவருகின்றோம்.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், மக்கள் ஆணைக்கு அமைவாகச் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்களின் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான,நேற்று (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதனையும் தகவல்கள் அல்லது சாட்சியங்கள் மூலம் நிரூபிப்பதற்கு அவர்கள் தவறிவிட்டனர் என்றும், அவர்களின் வாதங்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் ரயில் பாதைகள் பல இடங்களில் சேதமடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை இன்று (24) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. பாதை புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அண்மையில் வெற்றிகரமான சோதனை ஓட்டம் (வெள்ளோட்டம்) நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் பயணிகள் சேவையை மீள ஆரம்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.50 மணிக்கு தலைமன்னார் நோக்கி ரயில் புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா சூறாவளிக்குப் பின்னர் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டதால், மன்னார் மாவட்ட மக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். குறிப்பாக, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில், ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது மன்னார் மக்களுகளின் நீண்ட தூரப் பயணத் தேவைகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

A/L பரீட்சை ஒத்திவைப்பு கோரிக்கை தள்ளுபடி!

2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனுவை (Writ Petition) மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது. குறித்த மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட நீண்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது. தமது முதலாவது மற்றும் இரண்டாவது தடவைகளுக்காக 2026 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஒரு சில மாணவர்களினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதிய கால அவகாசம் கோரி அவர்கள் இந்த சட்ட நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும், நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின்படி திட்டமிட்டவாறு அடுத்த மாதமே பரீட்சை நடைபெறும் என்பது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

முச்சக்கர வண்டி நீர்வீழ்ச்சியில் கவிழ்வு; 2 பேர் பலி

நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (22) காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், 3 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டியின் சாரதியும், அதிலிருந்த மற்றொரு நபருமே இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற சமயத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். முச்சக்கர வண்டி அதிக வேகத்துடன் சென்றுகொண்டிருந்த வேளையில், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மூவரும் தற்போது வைத்தியசாலையில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள்

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) நகரங்களுக்கிடையிலான மற்றும் நீண்ட தூரப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காக, 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது 2026-ஆம் ஆண்டுக்கான அரச முதலீட்டுத் திட்டத்தின் கீழ், 49 முதல் 54 பயணிகள் அமரும் வசதி கொண்ட 600 புதிய சாதாரண வகைப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆரம்பத்தில் 14.4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், 2025–2026-ஆம் ஆண்டிற்கான வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்திற்கு உயர்தர வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட பேருந்துகளே (deluxe air-conditioned buses) மிகவும் பொருத்தமானவை என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சாதாரண வகைப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வினாத்தாள் அச்சிடுவதில் தாமதம்; 9 ஆம் தரப் பரீட்சை ஒத்திவைப்பு

இரண்டாம் தவணைப் பரீட்சைகளின் ஒரு பகுதியாக இன்று (22) நடைபெறவிருந்த 9 ஆம் தரத்துக்கான புவியியல் மற்றும் குடியியல் கல்விப் பாடங்களுக்கான பரீட்சையை தென் மாகாணக் கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட இந்தப் பரீட்சை எதிர்வரும் ஜூலை 24-ஆம் திகதி நடைபெறும் என தென் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். பரீட்சை வினாத்தாள் அச்சிடும் பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உரிய கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு வினாத்தாள்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மாற்றம் குறித்து சம்பந்தப்பட்ட கல்வி வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தேவேந்திரமுனையில் மீனவர் வீடு மீது துப்பாக்கிச் சூடு;

மாத்தறை – தேவேந்திரமுனை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீடு மீது இன்று (22) அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கார் ஒன்றில் வந்த சிலர் கைத்துப்பாக்கி மூலம் வீட்டை இலக்காகக் கொண்டு  துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றும், வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பயங்கர வாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும்! ஹர்ஷன நாணயக்கார

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், பல தசாப்த கால பழமையான சட்டத்தை ஒழிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கையாக புதிய சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்றத்தின் ஊடாகப் பிணை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் விளக்கமளித்தார். பிணை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை முடிவு அல்ல என்றும், இதுபோன்ற விவகாரங்களில் நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

குவைத்துக்கான ஸ்ரீலங்கன் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது இதன்படி, நேற்று (20) முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது +94 11 777 1979 அல்லது +94 74 444 1979 ஆகிய வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும். அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதேவேளைமத்திய கிழக்கு பிராந்தியத்தில் திடீரென தீவிரமடைந்துள்ள பாதுகாப்புப் பதற்றம் காரணமாக, முக்கிய நகரங்களுக்கான தனது விமான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இந்த ஆண்டின் நேற்று வரையான காலப்பகுதியில் 76,044 டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதுடன் 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த  ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த  பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ள  னர்.கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம்   15,910 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் பதிவாகியுள்ளதாக அந்தப்…

மேலும் படிக்க