முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்திய சாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டி
முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கு புதிய அம்பியூலன்ஸ் வண்டி முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை, நோயாளர் போக்குவரத்து மற்றும் அவசரச் சிகிச்சைச் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கான புதிய அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று நேற்று (30) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவால் இந்த வாகனம் கையளிக்கப்பட்டது. இந்த அம்பியூலன்ஸ் வண்டியானது அதிநவீன வசதிகளைக் கொண்ட “நிசான்” ரக வாகனமாகும். இது ஆரம்பத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்காக (PSD) ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அது சார்ந்த பணிகளுக்காகப் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது. நாட்டின் சுகாதாரச் சேவையின் அவசியத் தேவையைக் கருத்திற்கொண்டு, இந்த வாகனத்தை வீணடிக்காமல் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்க ஜனாதிபதி செயலகம் (Presidential Secretariat)…
மேலும் படிக்க