தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கன்னியா வெந்நீருற்றில் புத்தவிகாரைக்கா அடிக்கல்!

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட விவகாரம் புத்தவிகாரை அமைக்கப்படுவதற்கா? இது தமிழரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில்  தொல்பொருள் இடங்களை புனரமைப்பு செய்யும் நோக்குடன் இன்று  அடிக்கல் நாட்டப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினரால் இன்று  காலை 10.20 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்போது திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார்  எனப் பலர் கலந்து கொண்டனர். கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில் புத்த விகாரை கட்டுவதற்காகவே  அடிக்கல் நாட்டப்படவுள்ளது என வெளியான தகவலுக்கமைய இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழர்களின் வரலாறு மழுங்கப்படவுள்ளதாக தெரிவித்து பல அரசியல் பிரமுகர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் குமார்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர்  இன்றைய தினம்  செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது. அதனை அடுத்து இன்றைய தினம் புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ,  ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன்,  பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்,  இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக்,  நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர். இந்நிலையில்  செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்..!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்..! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.. அதனை அடுத்து இன்றைய தினம் புதன்கிழமை புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

முச்சக்கர வண்டி நீர்வீழ்ச்சியில் கவிழ்வு; 2 பேர் பலி

நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (22) காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், 3 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டியின் சாரதியும், அதிலிருந்த மற்றொரு நபருமே இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற சமயத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். முச்சக்கர வண்டி அதிக வேகத்துடன் சென்றுகொண்டிருந்த வேளையில், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மூவரும் தற்போது வைத்தியசாலையில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள்

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) நகரங்களுக்கிடையிலான மற்றும் நீண்ட தூரப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காக, 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது 2026-ஆம் ஆண்டுக்கான அரச முதலீட்டுத் திட்டத்தின் கீழ், 49 முதல் 54 பயணிகள் அமரும் வசதி கொண்ட 600 புதிய சாதாரண வகைப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆரம்பத்தில் 14.4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், 2025–2026-ஆம் ஆண்டிற்கான வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்திற்கு உயர்தர வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட பேருந்துகளே (deluxe air-conditioned buses) மிகவும் பொருத்தமானவை என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சாதாரண வகைப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வினாத்தாள் அச்சிடுவதில் தாமதம்; 9 ஆம் தரப் பரீட்சை ஒத்திவைப்பு

இரண்டாம் தவணைப் பரீட்சைகளின் ஒரு பகுதியாக இன்று (22) நடைபெறவிருந்த 9 ஆம் தரத்துக்கான புவியியல் மற்றும் குடியியல் கல்விப் பாடங்களுக்கான பரீட்சையை தென் மாகாணக் கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட இந்தப் பரீட்சை எதிர்வரும் ஜூலை 24-ஆம் திகதி நடைபெறும் என தென் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். பரீட்சை வினாத்தாள் அச்சிடும் பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உரிய கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு வினாத்தாள்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மாற்றம் குறித்து சம்பந்தப்பட்ட கல்வி வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தேவேந்திரமுனையில் மீனவர் வீடு மீது துப்பாக்கிச் சூடு;

மாத்தறை – தேவேந்திரமுனை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீடு மீது இன்று (22) அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கார் ஒன்றில் வந்த சிலர் கைத்துப்பாக்கி மூலம் வீட்டை இலக்காகக் கொண்டு  துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றும், வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க