தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிண்ணியாவில் மயானப் பிரச்சினையை முன்வைத்து பொதுமக்கள் போராட்டம்!

கிண்ணியா நகர சபை பிரிவுக்குட்பட்ட சின்னத் தோட்டப் பிரதேச மக்களின் இந்து மயானப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் இன்று தங்களின் வேலைநிறுத்த மற்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை – கிண்ணியா நகர சபையினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சின்னத் தோட்டம் பகுதியில் கழிவு முகாமைத்துவத் தளம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தளத்தை உடனடியாக அவ்விடத்திலிருந்து அகற்றக் கோரியும், குப்பைகளைக் கொட்டுவதற்கு மாற்று இடமொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுமே சின்னத் தோட்ட மக்கள், இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு தொடர்ச்சியாகக் கழிவுகள் கொட்டப்படுவதனால், அருகில் உள்ள இந்து மயானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். இதனால் ஏற்படும் கடும் துர்நாற்றம் மற்றும் குப்பைகளின் விசிறல் காரணமாகவும், கழிவுகளால் கவரப்பட்டு வரும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தித்வா புயலால் பாதிக்கப் பட்ட பாடசாலை களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; ரவிகரன் எம்.பி

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி மன்னார் – மடுகல்வி வலயத்தில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சீர்செய்வதற்குரிய, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் இணையவழியில் பதிவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மடு வலயக்கல்விப் பணிப்பாளர், அவ்வாறு இணையவழியில் பதிவேற்றப்பட்டுள்ள பாடசாலைகளின் பாதிப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் விரைவில் வழங்கப்படுமென வடமாகாண கல்வித்திணைக்களம் தமக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தித்வா புயலால் மடு கல்வி வலயத்தின், மாந்தை மேற்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெளிக்குளத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்: துரத்திப் பிடித்த இளைஞர்கள்

வவுனியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட வெளிக்குளம் பகுதியில், நேற்றயதினம்  இரவு டிப்பர் வாகனம் ஒன்றின் மூலம் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்ட கட்டிட இடிபாட்டுக் குப்பைகள் மற்றும் மரக்கழிவுகள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினரின் துரித நடவடிக்கையால் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. வெளிக்குளம் பகுதி வயல் கரையோரங்களைச் சூழவுள்ள இயற்கையான சூழலில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு டிப்பர் வாகனம் மூலம் பெருமளவிலான கட்டிட இடிபாட்டுக் குப்பைகளும் மரக்கழிவுகளும் கொட்டப்பட்டன. இதனை அவதானித்த அப்பகுதி கிராமத்து இளைஞர்கள் உடனடியாகச் செயற்பட்டு, குப்பைகளைக் கொட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற டிப்பர் வாகனத்தை சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர் இது குறித்து வவுனியா மாநகர சபை உறுப்பினர் அருணனுக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர சபை உறுப்பினர் அருணன், சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்களைக் கடுமையாக எச்சரித்தார்.…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

07 அதிகாரிகள் உட்பட 27 பேரை பலியெடுத்த சிறை மோதல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதன்படி,  07 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை  நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்காக நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிமல் ஜி. புஞ்சிஹேவா…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கமா? மக்கள் குற்றச்சாட்டு

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் முறையற்ற வகையில் பணம் கோரப்படுவதாகவும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ​சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: மன்னார்  மாவட்டத்தை சேர்ந்த தாய் ஒருவர்,கணவன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தனது 10 வயதிற்குட்பட்ட இரண்டு பிள்ளைகளுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தபோது, ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அவற்றைச் சரிசெய்து கடவுச்சீட்டு தர 250,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளது. ​எனினும், அந்தத் தாய் எவ்வித மேலதிகப் பணத்தையும் வழங்க மறுத்து, அதே விண்ணப்பங்களுடன் கொழும்பில் உள்ள பிரதான கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு எவ்வித குறைபாடுகளும் இன்றி, எவ்வித மேலதிகக் கட்டணமும் இன்றி, ஒரே நாளில் அவசர சேவையின் கீழ் தனது இரு பிள்ளைகளுக்கும் கடவுச்சீட்டுக்களைப்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டு. நகரில் அதிகாலை பயங்கர தீ! வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள பல வர்த்தக நிலையங்களில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் ஐந்து கடைகள் தீக்கிரையாகி கடுமையான சேதமடைந்துள்ளன. இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ, ஒன்றுக்கொன்று அண்மையில் அமைந்திருந்த வர்த்தக நிலையங்களுக்கு வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ஐந்து வர்த்தக நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள சொத்து சேதத்தின் முழுமையான விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு பகுதியில் தொடர்ச்சியாக தீ விபத்துகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தடைசெய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து

அரிசி அல்லது நெல்லை கால்நடைத் தீவன உற்பத்திக்காகப் பயன்படுத்துவதைத் தடைசெய்து  வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த மேற்படி வர்த்தமானியை இரத்து செய்வதாக குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நுகர்வோர் விவகார அதிகாரசபையினால்  வெளியிடப்பட்டுள்ளது. புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம், அரிசி அல்லது நெல்லை கால்நடைத் தீவன உற்பத்திக்காக நேரடியாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு ஏதேனும் வகையில் கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கோ, விற்பனை செய்வதற்கோ, விற்பனைக்காக காட்சிப்படுத்துவதற்கோ, களஞ்சியப்படுத்துவதற்கோ,  விநியோகிப்பதற்கோ அல்லது கொள்வனவு செய்வதற்கோ மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேற்படி நடைமுறை கடந்த ஜூன் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பு, அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் சுதீபன் போல் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான சரியான தகவல்கள் தரவுகள் இதுவரை இல்லை நாம் வேலை வாய்ப்புக்களை கோரும் போது தரவுகள் கையசம் இருந்தாலே, வேலை வாய்ப்பை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். செப்டெம்பர் மாதமளவில் அபிவிருத்தி உத்தி யோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது போட்டி பரீட்சை இன்றி நடைபெறவுள்ளதாகவும் அறிகிறோம், எனவே பட்டதாரிகள் பட்டப்படிப்பினை முடித்து வெளியேறிய ஆண்டு, அவர்களின் துறை சார்ந்த தரவுகள் கையசம் இருந்தாலே வேலை வாய்ப்பினை சிக்கல்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மன்னார் காற்றாலை மின் நிலைய நிர்மாணப் பணிகள் முன்னெடுப்பு வலுசக்தி அமைச்சு 

மன்னார் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சு  தெரிவித்துள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம்   ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முதல் கட்ட காற்றாலை டர்பைன்கள் சில வாரங்களுக்கு முன்பு இலங்கையை வந்தடைந்தன. மீதமுள்ள அனைத்து உபகரணங்களும் தற்போது திருகோணமலை துறைமுகம் வந்தடைந்துள்ளதுடன், அவற்றை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் மூலம் பூர்த்தி செய்வதற்கான அரசின் இலக்கை நோக்கிச் செல்லும் முக்கிய ஆரம்ப நடவடிக்கையாக இந்த மன்னார் காற்றாலை மின் நிலையத் திட்டம் கருதப்படுகிறது. மேலும், 2050 ஆம் ஆண்டுக்குள் இலங்கை அடைய எதிர்பார்க்கும் ‘நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்ற’ (Net Zero…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சிறைச்சாலை சம்பவங்களுக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன் நீதியமைச்சர்

தமது பொறுப்பிலுள்ள அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் அதன் பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக நீதியமைச்சர் ஹர்சண நாணயக்கார தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்  எவருடைய உயிரும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க