கிளி கண்டாவளை பாலத்தில் நடந்த விபத்து
யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றிக் கொண்டு பயணித்த கப் ரக வாகனம், பரந்தன் வீதி ஊடாக முல்லைதீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது, வெளிகண்டல் பகுதியில் வேகட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் படிக்க