இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

இன்று (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்க ;ரவிகரன் எம்.பி

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்க; அடக்குமுறைக் கருவியான பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப்பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலைசெய்வதற்கு நடவடிககை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு நாட்டில் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கபடவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் 10.06.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேஸ்குமார் சங்கீத்சன் என்னும் சொல்லிசைப்பாடகர் அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். இந்த நாட்டிலே காலத்திற்கு காலம் இவ்வாறான கலைஞர்களும், படைப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தியதற்காக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடபகுதி கடற் பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடு களைக் கட்டுப்படுத்துக – ரவிகரன்

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 10.06.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்குமாகாண கடற்றொழிலாளர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என வடமாகாணத்தில் நான்கு மாவட்டங்களிலும் மீனவர்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்களான சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், டைனமெற் வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற தீய செயல்களால் வடபகுதிக் கடல்வளம் முற்றாக அழிந்துபோகின்றது. இத்தகைய சட்டவிரோத தொழில்களைத்  தடுக்கவேண்டிய கடற்றொழில் திணைக்களமோ, கடற்படையோ செயலற்றவர்களாக இருக்கின்றனர். இதுகுறித்த கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் கேட்டால், ஆளணிப்பற்றாக்குறை இருப்பதாகவும்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

சங்கீத்ஷனை விடுவிக்கா விட்டால் வடக்கு, கிழக்கு போராட்டங்கள் வெடிக்கும் சிறீதரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்காவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் வெடிக்குமென, தமிழரசுக்கட்சி எம்.பி. சிவஞானம் சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மீண்டும் இந்த நாட்டில் பயங்கரமான, துயரமான சம்பவங்கள் இடம்பெறத்தொடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் வைத்து கிளிநொச்சி உதயநகர் கிழக்கை சேர்ந்த கணேஷ்குமார் சங்கீத்ஷன் என்ற இளம்பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் . நாட்டில் ஒரு பாடல் பாடியதற்காக,ஒரு காலத்தின் செய்தியை கண்ணாடியாக சொல்கின்ற ஒரு கலைஞன் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நாட்டில் 1978 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சிங்கள, தமிழ் இளைஞர்களை மிக மோசமாக பாதித்திருந்தது. இன்று…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன்

ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துக – ரவிகரன் எம்.பி கோரிக்கை; கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்கிறார் –  அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை அரச பொதுவிடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த கோரிக்கையை உரியவகையில் பரிசீலித்து, விரைவில் முடிவை அறிவிப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் 09.06.2026இன்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பாடல் பாடியதால் கைது இல்லை; விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் பதிவே காரணம்

கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை.  விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால் தான்  கைது செய்யப்பட்டார்.  பேச்சு சுதந்திரம் என்று குறிப்பிட்டுக்கொண்டு முறையற்ற வகையில் செயற்பட கூடாது  என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்றுவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். மேடையில் பாடல் பாடியதற்காக தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

தமிழ் திரையுலகிற்கு மண்வாசனையையும், எதார்த்தத்தையும் கொண்டு வந்து புரட்சி செய்த மாபெரும் கலைஞன், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (84) அவர்கள் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூன் 10, 2026) அதிகாலை சென்னையில் காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும், திரையுலகையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் ஸ்டுடியோக்கள் சார்ந்த நிலையை மாற்றி, கேமராக்களை கிராமத்து மண்ணை நோக்கித் திருப்பியவர். “என் இனிய தமிழ் மக்களே…” என்ற அவரது கம்பீரக் குரலும், ’16 வயதினிலே’, ‘முதல் மரியாதை’, ‘கிழக்குச் சீமையிலே’ போன்ற காலத்தால் அழியாத காவியப் படைப்புகளும் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பாகும். மாபெரும் கலை ஆளுமைக்குத் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மோப்ப நாய்களின் உதவியுடன் அதிகாலை சோதனை தீவிரம்!

2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் முதல் இன்று வரை திடீர் சோதனைகள் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை  இடம்பெற்று வருகின்றன. போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது கல்முனை காரைதீவு நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கைகளில் பொலிஸ் மோப்ப நாய்கள் பங்கேற்றதுடன்  குறிப்பாக அதிகாலை வேளைகளில்  நெடுந்தூர சேவையில் கொழும்பிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற  பேருந்துகளும் பயணிகளும் இதன்போது   சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அத்துடன் அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்ல…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி – மடக்கிப்பிடித்த மக்கள்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி  காவல் துறை பிரிவுக்குட்பட்ட நுணாவில் மேற்கு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அழிவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சருகு புலி, அண்மைக் காலமாக குடியிருப்பு பகுதிகளில் நடமாடி கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு கிராம மக்கள் மற்றும் சாவகச்சேரி காவல்துறையினருடன் இணைந்து.மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த சருகு புலி பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் இருந்து மயக்கமருந்து மற்றும் கொண்டு செல்லும் கூடு போன்ற  உபகரணங்கள் இன்றி வந்தவர்கள் நாளை வருவதாக கூறி செல்லமுற்பட்ட வேளை ஊரவர்கள் குழப்பம் அடைந்ததை அடுத்து, மற்றுமொரு வனஜீவராசிகள்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

உக்ரைன் போர் ஒரு தீர்மானகரமான திருப்புமுனையில்

உக்ரைன் போர் ஒரு தீர்மானகரமான திருப்புமுனையில் உக்ரைனின் ஏவுகணை இலட்சியங்கள், உறைந்த போர்முனைகள், நேட்டோ விரிவாக்கம் மற்றும் அமைதியின் நிச்சயமற்ற எதிர்காலம் ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ அறிமுகம்: புதிய கட்டத்தை நோக்கி நகரும் போர் ரஷ்யா–உக்ரைன் போர் 2022 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மிகவும் முக்கியமான மற்றும் தீர்மானகரமான கட்டத்தை தற்போது அடைந்துள்ளது. போர்க்களத்தில் கடுமையான மோதல்கள் தொடர்ந்தாலும், அதே நேரத்தில் மாஸ்கோ, கீவ், பிரஸ்ஸல்ஸ், வாஷிங்டன் மற்றும் நேட்டோவுக்கு இடையே ஒரு தீவிரமான இராஜதந்திரப் போட்டியும் உருவாகியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தற்போதைய போர்முனைகளை உறைய வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், உக்ரைன் தனது சொந்த பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருவது…

மேலும் படிக்க