பொதுவான செய்திகள் 

கிளியில் வீதி சோதனை: 30-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள், 20-க்கும் மேற்பட்ட டிப்பர்கள் பறிமுதல்

கிளிநொச்சி பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கையின் போது, 30-க்கும் அதிகமான அதிவேக மோட்டார் சைக்கிள்களும், 20-க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி விபத்துகளை குறைத்து, பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் இலக்கத் தகடுகள் இல்லாமை, உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்குதல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்குகின்றன. இதனையடுத்து குறித்த வாகனங்கள் அனைத்தும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற விதிமீறல்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கத்தி வெட்டு தாக்குத லுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து ள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 39 வயதுடைய ரகு துஷ்யந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணை தகவலின்படி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் முன்னதாக வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். அப்போது, அவரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ். போதனா வைத்தியசாலைக்கு ரூ. 300 மில். செலவில் அதிநவீன AI தொழில் நுட்ப கேத் ஆய்வகம்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு ரூ. 300 மில். செலவில் அதிநவீன AI தொழில்நுட்ப கேத் ஆய்வகம் ரூ. 300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட அதிநவீன கேத் ஆய்வகப் பிரிவை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையில் நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன இதய ஆய்வகம் (Cath Lab ), சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் பிரசன்னத்தில் நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தால் ரூ. 300 மில்லியன் செலவில் நிறுவப்பட்ட இந்த நவீன இதய ஆய்வகம், இதய நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் மக்களுக்கு உகந்த சுகாதார சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன்…

மேலும் படிக்க