1001 நாட்கள் போராடி வரும் தம்மை ஏமாற்றி அரசாங்கமும் அதிகாரிகளும்!
தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடி வரும் தங்களுக்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 1001நாட்களை கடந்து இன்றைய தினமும் போராட்டம் சித்தாண்டி சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது கால்நடைப்பண்ணைக்குரிய காணியை தங்களுக்கு வழங்குமாறு கோரி 1001 நாட்கள் போராடிவரும் தம்மை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை. கொழும்பில் உள்ள மகாவலி அதிகார சபை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கடந்த 10 ஆம் திகதி தம்முடன் ஒரு முக்கிய சந்திப்பை…
மேலும் படிக்க