அண்மை செய்தி இலங்கை செய்தி. 

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் ஈவன் பெபஜோர்ஜியு (Evan Papageorgiou) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த பயணத்தில் இணையவுள்ளனர். இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்யவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ரஷ்யா–உக்ரைன் போர்: ஆபத்தான புதிய கட்டத்தை நோக்கி நகரும் ஐரோப்பா

ரஷ்யா–உக்ரைன் போர்: ஆபத்தான புதிய கட்டத்தை நோக்கி நகரும் ஐரோப்பா தீவிரமடைந்து வரும் போர், மூலோபாய அச்சுறுத்தல்கள், ஐரோப்பியப் பிளவுகள் மற்றும் அமைதிக்கான நிச்சயமற்ற பாதை உலக ஒழுங்கை மறுவடிவமைக்கும் இராணுவ, இராஜதந்திர மற்றும் புவிசார் அரசியல் நகர்வுகளின் விரிவான மதிப்பீடு ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ அறிமுகம்: தீர்மானகரமான திருப்புமுனையை நோக்கி நகரும் போர் ரஷ்யா–உக்ரைன் போர், 2022 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து பல்வேறு வடிவங்களில் பரிணமித்து வந்தாலும், தற்போது அது மிகவும் ஆபத்தான மற்றும் கணிக்க முடியாத கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் நிலப்பரப்பைக் கைப்பற்றும் பாரம்பரிய இராணுவ நடவடிக்கையாகத் தோன்றிய இந்த மோதல், இன்று ட்ரோன் தாக்குதல்கள், நீண்ட தூரத் துல்லிய ஏவுகணைத் தாக்குதல்கள்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

புதுக்குடியிருப்பு குணா கலைக் கல்லூரியில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

புதுக்குடியிருப்பு குணா கலைக்கல்லூரியில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – குணா கலைக்கல்லூரியில் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின்படி சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வானது 20.06.2026இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். இந்நிகழ்வானது விருந்தினர் மற்றும் சாதித்த மாணவர்கள் ஆகியோரது வரவேற்புடன் ஆரம்பமானது. அந்தவகையில் விருந்தினர்களும், சாதனை மாணவர்களும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, தவில், நாதஸ்வர இசை முழக்கத்துடன் மலர்தூவி வரவேற்று அழைத்துவரப்பட்டனர். அதனையடுத்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றதுடன், அதனையடுத்து பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். அதனையடுத்து விருந்தினர்களது உரை, மாணவர்களது கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா…

மேலும் படிக்க