தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மோப்ப நாய்களின் உதவியுடன் அதிகாலை சோதனை தீவிரம்!

2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் முதல் இன்று வரை திடீர் சோதனைகள் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை  இடம்பெற்று வருகின்றன. போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது கல்முனை காரைதீவு நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கைகளில் பொலிஸ் மோப்ப நாய்கள் பங்கேற்றதுடன்  குறிப்பாக அதிகாலை வேளைகளில்  நெடுந்தூர சேவையில் கொழும்பிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற  பேருந்துகளும் பயணிகளும் இதன்போது   சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அத்துடன் அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்ல…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி – மடக்கிப்பிடித்த மக்கள்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி  காவல் துறை பிரிவுக்குட்பட்ட நுணாவில் மேற்கு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அழிவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சருகு புலி, அண்மைக் காலமாக குடியிருப்பு பகுதிகளில் நடமாடி கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு கிராம மக்கள் மற்றும் சாவகச்சேரி காவல்துறையினருடன் இணைந்து.மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த சருகு புலி பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் இருந்து மயக்கமருந்து மற்றும் கொண்டு செல்லும் கூடு போன்ற  உபகரணங்கள் இன்றி வந்தவர்கள் நாளை வருவதாக கூறி செல்லமுற்பட்ட வேளை ஊரவர்கள் குழப்பம் அடைந்ததை அடுத்து, மற்றுமொரு வனஜீவராசிகள்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

உக்ரைன் போர் ஒரு தீர்மானகரமான திருப்புமுனையில்

உக்ரைன் போர் ஒரு தீர்மானகரமான திருப்புமுனையில் உக்ரைனின் ஏவுகணை இலட்சியங்கள், உறைந்த போர்முனைகள், நேட்டோ விரிவாக்கம் மற்றும் அமைதியின் நிச்சயமற்ற எதிர்காலம் ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ அறிமுகம்: புதிய கட்டத்தை நோக்கி நகரும் போர் ரஷ்யா–உக்ரைன் போர் 2022 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மிகவும் முக்கியமான மற்றும் தீர்மானகரமான கட்டத்தை தற்போது அடைந்துள்ளது. போர்க்களத்தில் கடுமையான மோதல்கள் தொடர்ந்தாலும், அதே நேரத்தில் மாஸ்கோ, கீவ், பிரஸ்ஸல்ஸ், வாஷிங்டன் மற்றும் நேட்டோவுக்கு இடையே ஒரு தீவிரமான இராஜதந்திரப் போட்டியும் உருவாகியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தற்போதைய போர்முனைகளை உறைய வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், உக்ரைன் தனது சொந்த பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருவது…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும். அன்றைய தினம் பரீட்சைக்கான நேர அட்டவணை பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது: இரண்டாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை. முதலாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை.இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவற்றுக்கான விரிவான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளமை…

மேலும் படிக்க