சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயிலிட்டியில் மக்க ளின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை; ரவிகரன்

மயிலிட்டியில் உயர்பாதுகாப்பு வலயத்திற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை; ரவிகரன் எம்.பி பங்கேற்பு யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டிந் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 05.06.2026 இன்று ஏழாவது வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு மக்களால் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

மன்னாரில் 150 மெகா வோட் காற்றாலை மின்உற்பத்தி நிலையம்

இலங்கையின் மின்சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை விரைவுபடுத்தும் நோக்கோடும், மன்னார் – கொண்டச்சி பகுதியில் 150 மெகாவோட் கொள்ளளவு கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. வலுசக்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில், அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.மன்னார், சிலாவத்துறை – கொண்டச்சி பகுதியிலுள்ள இலங்கை முந்திரி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அரசகாணியில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சுமார் 31 நவீன காற்றுச் சுழலிகள் மூலம் 150 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மின்சார விநியோகத்தில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, மேம்பட்ட மின்கல மின்சக்தி சேமிப்பு அமைப்புடன் (BESS) இது இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், பறவைகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் விரிவான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கு மற்றும் கிழக்கு கடற் பிராந்தி யங்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற் பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 8 டிங்கிகள், 2 கெனோக்கள், 4 டிராக்டர்கள் ஆகியவையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனஇவை தவிர, கடலட்டைகள், வணிக ரீதியான வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலை பனிச்சங்கேனி, சோபா தீவு, பொல்மல்குடா, கின்னியா, சூடைக்குடா, ஒட்டமாவடி, ஆலம்பில், புதுவக்காடு மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிகுளம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மேலதிக சட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வடமேல் மாகாணங்களில். இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவுக்குப் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

2025ஆம் ஆண்டுக்கான அதிபர் சேவையின் தரம் III இற்கு போட்டிப் பரீட்சை

2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்குப் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதிப் பத்திரங்களை தங்களது திணைக்கள இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் இப்பரீட்சை ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி நடத்தப்படவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அதனைத் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க