தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.விஜய், சங்கீதா ஆகியோர் முன்னிலையாகாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் – சங்கீதா ஆகியோர் 2021 இல் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.ரெலோவின் 12வது தேசியமாநாடு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது இயக்கத்தின் புதியநிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக கோவிந்தம் கருணாகரன்(ஜனா) வும், உபதலைவராக சுரேன்குருசாமியும்,நிதிச்செயலாளராக க.விஜிந்தன்,நிர்வாகசெயலாளராக நித்தியானந்தனும்,இளைஞரணி செயலாளராக பிரபாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து தலைமைக்குழு,மற்றும் மத்தியகுழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயிலிட்டி மக்களின் பிரதான கோரிக்கைகள் – ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று  வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,  தம்மை மீள் குடியேற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும்  போராட்டங்களை முன்னெடுத்தனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பிள்ளையானுடன் தொடர்புடைய 5 கொலைகள் தொடர்பான அறிக்கை

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ) கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பான இரகசியத் தகவல்களைக் தகவல்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன.இந்த விபரங்கள் அடங்கிய விசேட அறிக்கை இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின்படி, இந்த 5 கொலைகளும் மட்டக்களப்பு பிராந்தியத்தை மையமாகக் கொண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன: கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை. பிள்ளையான் குழுவினரால் கோரப்பட்ட கப்பப் பணத்தை (Extortion) வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை.  TMVP அமைப்பிற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பிள்ளையானின் சொந்தக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களே…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் யாழில் பலி!

போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார். கடந்த மே மாதம் 28ஆம் திகதி கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக, மேலதிக அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.பிரேத பரிசோதனைகளின் பின்னர் அன்னாரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு வைரஸானது புதிய மரபணுத் திரிபுகளுடன் தீவிரம்

நாட்டில் தற்போது பரவி வரும் டெங்கு வைரஸானது புதிய மரபணுத் திரிபுகளுடன் தீவிரமடைந்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் பரவிய டெங்கு வைரஸுடன் ஒப்பிடுகையில், தற்போது பரவி வரும் புதிய வைரஸில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்த புதிய மாற்றங்களைக் கொண்ட வைரஸ் இதற்கு முன்னர் இலங்கை மக்களுக்குத் தொற்றியிருக்கவில்லை. இதன் காரணமாக, நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு இந்த புதிய டெங்கு வைரஸ் மிக வேகமாகத் தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம் என்பதால், அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே ஓரளவிற்குத் தயாராகவே இருந்தது. எனினும், இம்முறை வைரஸின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாகப் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் எனச்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இதுவரை சுமார் 40 லட்சம் பேர் வரி அடையாள இலக்கம் பெறவில்லை:

நாட்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் ‘வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்’ (TIN Number) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 40 லட்சம் பேர் அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாட்டில் சுமார் 17 மில்லியன் (1 கோடியே 70 லட்சம்) மக்கள் இந்த இலக்கத்தைப் பெற வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் மாத்திரமே TIN இலக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய, தற்போது அன்றாட மற்றும் வணிக ரீதியிலான பல்வேறு தேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இந்த இலக்கம் இனி அவசியமானதாகும்: புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் மற்றும் கடன் அட்டைகளை (Credit Cards)…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வேலணையை அச்சுறுத்திவந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைது

யாழ்ப்பாணம் – வேலணையை அச்சுறுத்திவந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஊர்காவற்றுறை பொலிசார் திருட்டில் ஈடுபடுவோர் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேலணை பிரதேசத்தை நீண்ட நாள்களாக அச்சுறுத்தி வந்த மாடு கடத்தல் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை  குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர் வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில், நீண்டகாலமாக பண்ணையாளர்களின் பெறுமதிமிக்க கறவை மாடுகள் மற்றும் வீடுகளை உடைத்து நகைகள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்களை திருடிவந்த குழுவே கடந்த இரு நாள்களில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் நீண்ட நாள்களாக தேடப்பட்டுவந்த நிலையில், பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை, பருத்தியடைப்பு ஆகிய பகுதிகளில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் போது, 355 என்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இன்றையதினம் மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 24ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றையதினம் நடைபெற்றது. அதன் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் குழந்தை ஒன்று , நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , புதிதாக மேலும் இரண்டு என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 355 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 341 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை அகழ்வு பணிகளில் ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றையதினம் முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ், பேராசிரியர்…

மேலும் படிக்க