பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்! சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்! அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் பெரும் திரளான இளைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. ”குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்னும் பொருண்மையில், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இன அடக்குமுறைகளைக் கண்டித்தும், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்டனப் பேரணியில் ஈடுபட்டவர்கள், “பாடினால் பயங்கரவாதமா? தாயகக் கலைஞனை உடனே விடுவி!”, “தமிழர் வலிகளைப் பாடுவதும் எழுதுவதும் குற்றமா?”, “ஜனநாயகத்தின்…
மேலும் படிக்க