அண்மை செய்தி இலங்கை செய்தி. 

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும். அன்றைய தினம் பரீட்சைக்கான நேர அட்டவணை பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது: இரண்டாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை. முதலாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை.இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவற்றுக்கான விரிவான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளமை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன்

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு அருகில் இருந்த உப்புமால் வீதி தற்போது பயன்படுத்தப்படாது மூடப்பட்டுக் காணப்படுகின்றது. கடற்கரைப் பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏதேனும் ஏற்பட்டால், அந்தந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தேவையான ஒரு வீதியாகவும் அந்த வீதி காணப்படுகின்றது. எனவே மூடப்பட்டுள்ள அவ்வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக விடுமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் வலியுறுத்தப்பட்டது. இதன்போது முல்லைத்தீவுமாவட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன்

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து விஜயரத்தினம் சரவணன் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்த வேலைகளைத் துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற ஊறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் மத்திய அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி கிடைத்தவுடன் பாடசாலைகளின் திருத்த வேலைகள் விரைவாக அரம்பிக்கப்படுமெனவும் வடக்குமாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தித்வா புயலினால் முல்லைத்தீவு கல்விவலயத்தில் 32பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகளிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது. அதில் 09பாடசாலைகளின் திருத்த வேலைகள் 2025இல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு இந்த ஆண்டில் 15பாடசாலைகள் திருத்த வேலைகளுக்காக உள்ளீர்க்கப்பட்டிருந்தன. அதாவது சிறு திருத்த வேலைகளுக்காக  ஒதுக்கப்பட்ட நிதியில்தான் அந்த…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன்

மாகாண சபை தேர்தல்களுக்கு தடங்கலாக இருக்கும் சட்ட சிக்கல்களை தாண்டுவதற்கு பாராளுமன்றத் தெரிவு குழுவிற்கு முன்வைக்கப்பட்ட சட்டமா அதிபர்  திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இதில் சட்டமா அதிபரினாலேயே பரிந்துரைக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை இரத்து செய்து 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்கு திரும்புதல் மூலம் மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வழி செய்து உள்ளது. இருப்பினும் அந்த பரிந்துரையை கருத்தில் கொள்ளாது அரசரப்பு புதிய திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்றும் அதில் பெண்களுக்கு இளைஞர்களுக்கும் அதிக ஒதுக்கீடுகளை செய்வது பற்றிய புதிய  திருத்தச்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

சொல்லிசை பாடகரை சிறையில்சந்தித்த சிறிதரன்

சொல்லிசை பாடகரை சிறையில்சந்தித்த சிறிதரன் எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார். குறித்த பாடகரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ள சிறிதரன் இன்று (08), பாடகரை சிறைச்சாலையில் சந்தித்து , நம்பிக்கையூட்டியுள்ளார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். நிகழ்வில் அமைச்சரிடம் பெண் சரமாரி கேள்வி

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் நடைபெற்ற பெண்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் இறுதிக் கட்டத்தில், அங்கு கலந்துகொண்ட பெண் ஒருவர் தனது பிரச்சினைகளை முன்வைத்து உரையாற்றியதால் சிறிது நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சாவித்திரி போல் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின்போது பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, சமூக ஒழுக்க விழுமியங்கள், பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து நீண்ட நேரம் உரைகள் இடம்பெற்றன. இந்நிலையில், நிகழ்வு நிறைவடையும் வேளையில் நன்றி உரை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சங்கானை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் எழுந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “பெண்களுடன் கலந்துரையாடல்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 302 மனித எலும்புக்கூடு

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. அங்கு அகழ்வுப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வாராய்ச்சி நேற்று  முன்னெடுக்கப்பட்டது. அகழ்வுகளின் போது மேலும் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்தே, அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 298 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, தற்பொழுது நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் வல்லுநர்களின் நேரடி முன்னிலையில்  அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதன்போது, புதிதாக 6 மனித எலும்புக்கூடுகள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க வலியுறுத்திய – ரவிகரன்

முல்லைத்தீவு பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி; மூன்று மாதத்திற்கு பிற்பாடு காணியை விடுவிக்க இணங்கிய பொலிஸார் முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள தனியார் காணி உடனடியாக  விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து குறித்த காணியை விடுவிப்பதற்கு பொலிசார் மூன்றுமாத காலஅவகாசம் கோரியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள காணியை எப்போது விடுவிக்கப்போகின்றீர்கள். அந்தக்காணி மு.நாகம்மா என்பவருக்குரிய ஒரு தனியார் காணியாகும். குறித்த காணி விடுவிப்புத் தொடர்பாக மாகாணசபைக் காலத்திலும் வலியுறுத்தியிருக்கின்றேன். இருப்பினும் இதுவரை குறித்த காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அந்தக்காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்கள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்! சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்! ​ அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் பெரும் திரளான இளைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. ​”குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்னும் பொருண்மையில், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இன அடக்குமுறைகளைக் கண்டித்தும், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ​இக்கண்டனப் பேரணியில் ஈடுபட்டவர்கள், “பாடினால் பயங்கரவாதமா? தாயகக் கலைஞனை உடனே விடுவி!”, “தமிழர் வலிகளைப் பாடுவதும் எழுதுவதும் குற்றமா?”, “ஜனநாயகத்தின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி. 8 வயது சிறுவன் பலி

பொத்துவில் – பாணம பிரதான வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதிய வேளையில் பசரச்சேனை பகுதியில் வீதியோரமாக சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஒன்று உந்துருளி மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில்  உந்துருளி ஓட்டுநரும் சிறுவனும் படுகாயமடைந்தனர். சம்பவத்தையடுத்து இருவரும் உடனடியாக பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 8 வருடங்களும் 10 மாதங்களும் வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், வீதிகளில் வாகனங்களை இயக்கும் போது வேகக் கட்டுப்பாடு மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தையும் மீண்டும் நினைவூட்டியுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக…

மேலும் படிக்க