தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடி யேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து.
தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த கிராமங்களை மீள்குடியேற்றம்செய்வது தொடர்பில் விசேட கூட்டங்களை ஏற்பாடுசெய்யுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இகியோருக்கு இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 17.06.2026இன்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவில் ஆண்டான்குளம் கிராமமும்,…
மேலும் படிக்க