தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காத்தான்குடி பிரதான வீதியில் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவர், சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதி வடிகானுக்குள் நேற்று மாலை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காத்தான்குடி பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இரவு 7.30 மணியளவில் அந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர்…

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை 

கல்லோயாவிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை

கல்லோயாவிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழினத்தின் எழுபது ஆண்டுகால இரத்தச் சுவடுகள், குடியேற்ற அரசியல், மற்றும் நீடிக்கும் இனஅழிப்பின் வரலாறு ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ முன்னுரை : ஒரு இனத்தின் வரலாற்றை அறிதல் ஏன் அவசியம்? ஒரு மக்களின் எதிர்காலம் அவர்களின் கடந்தகால நினைவகத்தின்மீது கட்டியெழுப்பப்படுகிறது. வரலாறு என்பது வெறும் காலவரிசைப் பதிவல்ல; அது ஒரு மக்களின் அரசியல் அனுபவம், அவர்களின் வாழ்வியல் போராட்டம், இழப்புகள், எதிர்ப்புகள் மற்றும் அடையாளப் பாதுகாப்பின் சாட்சியமாகும். தமிழர் வரலாற்றில் 1956 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக மட்டுமல்லாமல், பின்னர் பல தசாப்தங்கள் நீடித்த இனமுரண்பாடுகளுக்கும் அரசியல் வன்முறைகளுக்கும் அடித்தளமாக அமைந்த ஆண்டாகவும் நினைவுகூரப்படுகிறது. கல்லோயா பள்ளத்தாக்கில் ஆரம்பித்த வன்முறைகள், பின்னாளில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ரூ.2 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சாவுடன் இளைஞர் கைது!

ரத்மலானா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரின் உடைமைகளில் இருந்து 3 கிலோகிராம் மற்றும் 125 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணாமல் போன 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரால் சிறுவன் காணவில்லை என நேற்று (12) இரவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பருத்தித்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் ஆரம்பித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சிறுவனின் வீட்டிற்கு அருகில் அமைந்திருந்த கிணறு ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அச்சுவேலி – தீர்த்தங்குளம் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவல்

யாழ்ப்பாணம் அச்சுவேலி – தீர்த்தங்குளம் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவல் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேகமாக பரவிய தீ காரணமாக அப்பகுதியில் சில நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் நடவடிக்கையால், தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை அச்சுவேலி காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர்சேதமோ அல்லது பெரியளவிலான பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பில்  அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணை அறிக்கையின் பின்னரே தீ விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நீடிக்கும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ். செயலக முன்றலில் காணி களை விடுவிக்கக் கோரி மாபெரும் மாபெரும் போராட்டம்

காணிகளை விடுவிக்கக் கோரி மாபெரும் போராட்டம் – யாழ். செயலக முன்றலில் திரளுமாறு மயிலிட்டி மீள்குடியேற்றக் குழு அழைப்பு   வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், உயர் பாதுகாப்பு வலயங்களாக முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டம் குறித்து மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் ஊடகங்கள் மூலம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.அந்த அறிவித்தலில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி எமது சொந்த ஊர்களில் இருந்து நாம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டோம். இதன்படி, கடந்த ஜூன் 5 ஆம் திகதியுடன் எமது இடப்பெயர்வு அலைக்கு 36 வருடங்கள் நிறைவடைந்து, தற்போது 37 ஆவது…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி! காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி.

இயக்குனர் இமயம் பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி! காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி. இந்திய அரசு வழங்கிய “பத்மபூஷன்” எனும் விருதை விட என் தமிழீழ மக்களின் விடுதலையே எனக்கு முதன்மையானது என்று கூறி பத்மபூஷன் விருதை உதற எறிந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தமிழீழம் சென்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்து உறவாடித் திரும்பியவர் பாரதிராஜா. பாரதிராஜா அவர்கள் மீது அளவற்ற பெருமதிப்பை வைத்திருந்தார் தலைவர் பிரபாகரன். இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களைத் தொடர்பு கொண்டு தமிழீழ விடுதலை போராட்டம் குறித்த திரைக்கலை படைப்பொன்று உருவாக்க பாரதிராஜா அவர்கள் திட்டமிட்டிருந்தும் அவருடைய அந்த கனவு நிறைவேறாமல் போனது உலகத் தமிழர் போராட்ட வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பேரிழப்பாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு தொடர்கின்றது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

குவைத்தில் போதைப் பொருள் வேட்டை; 3 இலங்கையர் உட்பட 7 பேர் கைது

குவைத்தில் போதைப்பொருள் தொடர்பான தனித்தனி நடவடிக்கைகளில் மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு குவைத் பிரஜை, ஒரு இந்தியர், மூன்று இலங்கையர்கள் மற்றும் இரண்டு நாடற்றவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருந்த பல்வேறு வகையான போதைப்பொருட்கள், மனநிலையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் அவற்றை பொதி செய்து விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களில் 2.550 கிலோகிராம் ஹஷிஷ், 150 கிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவை அடங்குகின்றன. மேலும், கைது நடவடிக்கைகளில் ஒன்றின் போது சந்தேகநபர் ஒருவர் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படுவதால், அவருக்கு எதிராக கூடுதல் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மண்டைதீவு படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம்:

மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் 31 மீனவர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதன் 40 ஆவது ஆண்டு நினைவு தினம், நேற்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை நினைவுத் தூபியருகே நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். குருநகர் ஆலய பங்குத்தந்தையின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, நினைவுத் தூபிக்கு மெழுகுவர்த்தி மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கடந்த 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி, குருநகர் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்பட 31 மீனவர்கள் ஒரு படகில் கரைவலை மீன்பிடிப்புக்காக மண்டைதீவுக்குச் சென்றிருந்தனர். இதன்போது அங்கு நிலைநாட்டப்பட்டிருந்த கடற்படையினர், அந்த மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்…

மேலும் படிக்க