மானிப்பாய் காணி விவகாரம்: அப்பாவி மக்களை பலிகடாவாக்க வேண்டாம்!
மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி தொடர்பாக சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான செய்திகளால் தாம் மற்றும் தமது குடும்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தெரிவிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர், இன்றைய காலச் சூழலில் ஊடகங்களின் விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றாலும், உண்மைக்குப் புறம்பான செய்திகளின் தாக்கம் அப்பாவி மக்களையும் அவர்களது குடும்பங்களையும் கடுமையாகப் பாதிப்பதாகத் தெரிவித்தார். பண்டத்தரிப்பு பகுதியில் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டதாகவும்,…
மேலும் படிக்க