அண்மை செய்தி தாயகச் செய்தி 

மானிப்பாய் காணி விவகாரம்: அப்பாவி மக்களை பலிகடாவாக்க வேண்டாம்!

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி தொடர்பாக சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான செய்திகளால் தாம் மற்றும் தமது குடும்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தெரிவிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர், இன்றைய காலச் சூழலில் ஊடகங்களின் விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றாலும், உண்மைக்குப் புறம்பான செய்திகளின் தாக்கம் அப்பாவி மக்களையும் அவர்களது குடும்பங்களையும் கடுமையாகப் பாதிப்பதாகத் தெரிவித்தார். பண்டத்தரிப்பு பகுதியில் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டதாகவும்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொட்டகலை திருமண மண்டப மோதல்: விலக்க சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

தலவாக்கலை — வட்டகொட பகுதியைச் சேர்ந்த குழுவினர் கொட்டகலை நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று (17) திருமண விழா ஒன்றை நடத்தியுள்ளனர். இதன்போது, மாலை 4.00 மணியளவில் திருமணத்திற்கு வந்திருந்த, மதுபோதையிலிருந்த இருதரப்பினரிடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாகச் சென்று மோதலைச் சமரசம் செய்ய முயன்றுள்ளனர். எனினும், மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் ஒன்றாக இணைந்து அந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, காயமடைந்த அதிகாரிகளை மீட்கத் திம்புள்ளை-பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், வன்முறைக் கும்பல் அவர்களையும் விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்தியுள்ளது. பொலிஸார் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தாக்குதலுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களைக் கைது செய்தனர். பொலிஸார் தாக்கப்படுவதைக் கண்ட கொட்டகலை நகர மக்கள் உடனடியாகச்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தொடர்பணியில் ஏர் நிலம்..ஆழ்துளைக் கிணறு அமைப்பு.

தொடர்பணியில் ஏர் நிலம்.. 05.06.2016இல் இறைபதமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் 10வது ஆண்டு நினைவு நாள் 05.06.2026 ஆகும்.. இவ் நாளில் அவரது ஆன்மா சாந்திபெற இறைவணை வேண்டுவதோடு நினைவுகளால் வணங்குகின்றோம். இறைபமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தாயகம் மன்னார் முத்தரிப்புத்துறை 70 குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்தி செய்யுமுகமாக ஆழ்துளைக் கிணறு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதோடு சிறப்புணவு வழங்கி ஆன்ம சாந்தி பிரார்தனையும் நடைபெற்று பயன்தரு மரக்கன்றும் நடுகை செய்யப்பட்டது… இச் செயற்திட்டத்திற்கு அவரது சுவிற்சர்லாந்து வாழ் மகள் திருமதி ராதிகா கஜேந்திரன் அவர்கள் 3,24,000/= நிதியினை வழங்கியிருந்தார். இவ் நிதியுதவி நல்கிய குடும்பத்தினர்கும் இப் பணியை நிறைவாக்கிய “ஏர் நிலம்” தொண்டமைபின் இணைப்பாளர் கவிஞர் மன்னார் பெனில், நிர்வாக இயக்குனர் திரு.தனம் நித்தி ஆகியோருக்கும் பயன்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட. அமெரிக்க ஜனாதிபதி

மேற்கு ஆசிய போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியுடனான இரவு விருந்தின்போதே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஜி7 உச்சிமாநாட்டை தொடர்ந்து வெர்சாய் அரண்மனையில் மெக்ரோனுடன் இரவு உணவு அருந்தியபோது, ​​டிரம்ப் தனிப்பட்ட முறையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஆங்கிலக் கால் வாயில் பதற்றத்தின் தீப்பொறி ஆபத்தான கடற்படை மோதல்

ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி பிரித்தானியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய கடற்பரப்பில் அதிகரிக்கும் மோதல் அபாயம் ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ஆங்கிலக் கால்வாயில் ஆபத்தான கடற்படை மோதல் உலகின் மிக முக்கியமான மற்றும் அதிக போக்குவரத்து கொண்ட கடல் வழித்தடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆங்கிலக் கால்வாய், அண்மையில் ஒரு பதற்றமான இராணுவச் சம்பவத்தின் மையமாக மாறியுள்ளது. ரஷ்ய கடற்படையின் அட்மிரல் கிரிகோரோவிச் (Admiral Grigorovich) போர்க்கப்பல், சர்வதேச கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியக் கொடி ஏந்திய ஒரு தனியார் யாட்ச் படகின் அருகே எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பிரித்தானிய பாதுகாப்பு அமைப்புகளும்…

மேலும் படிக்க