தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு நேரம் நீடிப்பு!

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர்.பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது.குறித்த பகுதியை கடந்த ஆண்டு நேரக்கட்டுப்பாட்டுடன் இராணுவத்தினர் போக்குவரத்திற்கு அனுமதித்தனர். இந்நிலையில் வடமாகாண ஆளூநர் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலின் போது, குறித்த வீதியினை 24 மணி நேர போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு இராணுவத்தினர், மறுத்துள்ளனர். அழுத்தமான கோரிக்கைகளை தொடர்ந்து மேலும் ஒரு மணி நேரம் வீதியை திறந்து விட சம்மதித்துள்ளனர்அதன் அடிப்படையில் இதுவரை காலமும் காலை 06 மணி முதல் இரவு 7 மணி வரையில் திறந்து விடப்பட்ட வீதியினை ஒரு மணி நேரம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச் சண்டை வீரர்கள். தாயகம் திரும்பினர்!

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட வெற்றிக் கிண்ணங்களை பெற்ற குத்துச்சண்டை குழுவினர் இன்றையதினம் பலாவி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். வடக்கு மாகாணத்தில் இருந்து பிரபாகரன் ரதுக்ஸன், நகுலேஸ்வரன் சிறீஹரிஸ், லெனின் சானுராஜ், முஹமட் றிலாஸ், புஸ்பநாதன் அஜந்தா ஆகிய வீர வீராங்கனைகள் இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நேற்றுமுன்தினம் பங்குபற்றினர். குத்துச்சண்டையில் எட்டு வகைகள் காணப்படுகின்ற நிலையில், இதுவரை வடக்கு – கிழக்கில் இருந்து எவரும் பங்கெடுக்காத வகையிலான குத்துச்சண்டை போட்டியிலேயே அவர்கள் பங்கெடுத்து சாதனையை நிலைநாட்டி நாடு திரும்பினர். அவர்களது பயிற்றுவிப்பாளரான தியாகராஜா நாகராஜா என்பவரும் அவர்களோடு உடனிருந்து போட்டியின்போது அவர்களை வெளிப்படுத்தினார். குறித்த போட்டியில் பங்குபற்றுவதற்கு செல்வதற்கு எவரும் நிதி உதவி வழங்காத நிலையில் கடன்பட்டும், வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்துமே சில போட்டியாளர்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் காவல்துறை யினர்.துரத்திச் சென்ற உந்துருளி.கோர விபத்து

யாழ்ப்பாணத்தில்  காவல்துறையினர்.துரத்திச் சென்ற உந்துருளி.ஒன்று, வீதியில் பயணித்த மற்றொரு   உந்துருளியுடன். மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை யாழ்ப்பாணம் காவல்துறையினர்.  உந்துருளி.சென்ற நபர் ஒருவரைத் துரத்திச் சென்றுள்ளனர்.இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், காவல்துறையினர். துரத்திச் சென்ற  உந்துருளி.கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாகப் பயணித்த வேறொரு உந்துருளி.மீது பலமாக மோதியுள்ளது. தப்பியோட முயன்ற  உந்துருளி.மோதியதில், மற்றைய  உந்துருளி.பயணித்த நபர் படுகாயமடைந்து, தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோட முயன்ற நபரை காவல்துறையினர். சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.இவ்விபத்துத் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர்.மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மீகொடையில் நள்ளிரவில் அரங்கேறிய பெரும் சோகம் ஆறு பேர் உயிரிழப்பு.

மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின், ஹைலெவல் வீதி, மீகொடை சந்திக்கு அருகில் நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு (31), அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக வந்த கெப் வண்டியொன்று, வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த ‘தன்சல்’ (தானசாலை) ஒன்றில் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்து புகுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த ஆண்கள் 35 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் ஹங்வெல்ல, அவிசாவளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். உயிரிழந்த பெண்களில் 15 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதுடன், அவர்கள் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிழக்கு மாகாண நன்னீர் மீன்வளத்தை மேன்படுத்த ஜப்பான் 1.33 மில்லியன் டொலர் நிதியுதவி

கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதையும், நன்னீர் மீன்பிடித் துறையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபாய்) மதிப்பிலான திட்டம், கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் மூலம் தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தொழில்நுட்ப ஆதரவுடன் ஜப்பானிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் இத்திட்டம், தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நீர்த்தேக்கங்களில் 200 மீன் கூண்டுகளை நிறுவுதல், தடுப்பணை வலை அமைப்புகளை வழங்குதல், இங்கினியகல மீன் இனப்பெருக்க மையத்தை மேம்படுத்துதல், மீன்பிடி சங்கங்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்கள், மற்றும் முதல் வளர்ப்புச் சுழற்சிக்கான மீன் குஞ்சுகள் மற்றும் தீவனத்தை இலவசமாக விநியோகித்தல் ஆகியவை இதன் முக்கிய முன்னெடுப்புகளில் அடங்கும். இந்நிகழ்ச்சியில் பேசிய…

மேலும் படிக்க