அண்மை செய்தி தாயகச் செய்தி 

விவசாயிகளி டமிருந்து சிறுபோக நெற் கொள்வனவு மேற்கொள்ளப் படவேண்டும் – ரவிகரன்

விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் சிறுபோக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள சூழலில், தாமதமின்றி துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 03.06.2026நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கிவருகின்றது. இந்நிலையில் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? அல்லது கடந்த காலங்களைப்போன்று நெற்கொள்வனவில் தாமதங்கள் ஏற்படுமா? அத்தோடு சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து  கொள்வனவுசெய்து களஞ்சியப்படுத்துவதற்கு  நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய களஞ்சியசாலைகளில் இடவசதிகள் உள்ளதா? இந்த விடயங்கள் தொடர்பில் உரியதரப்பினர் விளக்கங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.இங்குள்ள நெற் களஞ்சியசாலைகளில் நெல் நிரம்பியிருப்பதாக…

மேலும் படிக்க
கட்டுரை மருத்துவ குறிப்பு 

இரத்தத்தின் pH அளவைப் பாதுகாக்கும் மனித உடலின் அசாதாரண உயிரியல் அமைப்புகள்

உடலின் நுட்பமான சமநிலை: இரத்தத்தின் pH அளவைப் பாதுகாக்கும் மனித உடலின் அசாதாரண உயிரியல் அமைப்புகள் அமில–கார சமநிலையின்மையிலிருந்து ஒவ்வொரு உயிரணுவையும் பாதுகாக்கும் மறைக்கப்பட்ட அறிவியல் ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர்: ஈழத்து நிலவன் மருத்துவமனை விசேட மருந்தியல் நிபுணர் | அரசு மருத்துவ ஆராய்ச்சியாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ 🔬 உயிரின் அமைதியான காவலன் – இரத்தத்தின் pH மனித உடல் என்பது கோடிக்கணக்கான உயிரியல் மற்றும் உயிர்வேதியியல் செயல்பாடுகள் ஒரே நேரத்தில் துல்லியமாக நடைபெறும் ஒரு அதிசய உலகமாகும். நாம் சுவாசிப்பது, சிந்திப்பது, நகர்வது, உணவைச் செரிப்பது, இதயம் துடிப்பது, நரம்புகள் தகவல்களை பரிமாறுவது போன்ற ஒவ்வொரு செயற்பாடும் மிக நுட்பமான வேதியியல் சமநிலைகளின் மீது தங்கியிருக்கின்றன. இந்த சமநிலைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இரத்தத்தின் pH அளவு விளங்குகிறது. சாதாரண நிலையில் மனித இரத்தத்தின் pH 7.35 முதல்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மூதூரில் வீதி புனரமைப்பின்போது – புதைக்கப்பட்ட கைக்குண்டு மீட்பு

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள நெய்தல் நகர் மையவாடி வீதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (04) காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் – நெய்தல் நகர் பகுதியிலுள்ள குறித்த வீதியின் புனரமைப்பு பணி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது போத்தலில் அடைக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இக் கைக்குண்டு தென்பட்டுள்ளது. இதனையடுத்து வீதி புனரமைப்பு வேலை செய்தவர்களால் மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அடைக்கப்பட்ட போத்தலில் மற்றுமொரு கைக்குண்டு இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அவ்விடத்தில் பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற அனுமதியை பெற்றதன் பின்னர் கைக்குண்டுகள் மீட்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

முதியோர் இல்லம் தீக்கிரை; 11 பேர் தீயில் கருகி பலி – மூவர் மாயம்!

களுத்துறை மாவட்டம், ஹொரணை,  அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் ஹொணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக இல்லத்தில் இருந்த சிலர் தீயில் கருகியுள்ளனர். அவ்வாறு தீயில் கருகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், சுமார் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த இந்த மையத்தில், மனநலக்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறிப்பிட்ட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னர், தங்களது தேசிய அடையாள அட்டையைத் தயாரித்துக் கொள்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

துவாரகா என கையெழுத்திடப்பட்ட. துண்டறிக்கை, வைரல்.!

தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் 03.06.2026 உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தொடர்பான அறிவிப்பு அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, தமிழீழ மக்களின் பன்னாட்டு அரசியல், பொருளாதார, சமூக மற்றும் இராசதந்திர தேவைகளை முன்னிறுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) எனும் கட்டமைப்பு, 2009 ஆம் ஆண்டு வரை புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டு வந்தது. அதன் பின்னரும் சில நாடுகளில், குறிப்பாக சுவிசைத் தளமாகக் கொண்டு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது தலைமைச் செயலகத்தின் நெறிப்படுத்தலின் கீழ், அமைப்பு சார்ந்த கட்டமைப்புகளும் அரசியல் பணிகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற நேரடியான பெயரின் கீழ் மீளமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்டமைப்புகளும் தேசியத் தலைவரின் சீரிய சிந்தனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் செப்பனிடப்பட்டு வருகின்றன.…

மேலும் படிக்க