அண்மை செய்தி தாயகச் செய்தி 

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி;

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி; 2027இல் புலிபாய்ந்தகலிற்கு 53.5மில்லியன், முல்லை கடற்கரைக்கு 80மில்லியன் நிதி ஒதுக்கப்படுமென பதில் முல்லைத்தீவு மாவட்டம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் சுற்றுலாத்தலத்தின் மேம்பாட்டிற்கென 53.5மில்லியன் ரூபாயும், முல்லைத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்தின் மேம்பாட்டிற்காக 80மில்லியன்ரூபாயும் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுசெய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதன்போது துறைசார் அதிகாரிகளால் பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழு அறையில் 25.06.2026இன்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவலகள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

O/L பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சை விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களைக் ஒன்லைன் (Online) முறைமை ஊடாகத் திணைக்களம் கோரியுள்ளது. இதற்கமைய, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் ஜூன் 25 முதல் ஜூலை 8ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk இன் “Exam Information Centre” பகுதிக்குச் செல்வதன் மூலமோ அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைய முகவரி மூலமோ விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் 2025 சாதாரண தரப் பரீட்சைக்குப் பயன்படுத்திய பரீட்சை சுட்டெண் (Index number) மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், புதியவர்கள் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பதிவிட்டுப் பதிய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

TIN பெற அவசரம் இல்லை: நீண்ட வரிசை குறித்து யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்பாக, யாழ்ப்பாண அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் விளக்கமளித்துள்ளார். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக நிலவும் நெரிசலைத் தொடர்ந்து, அரச அதிபர் நேற்று பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து பொதுமக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், TIN இலக்கத்தை ஜூன் 30ஆம் திகதிக்குள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்தக் காலக்கெடுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், TIN பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எந்தவித கட்டணமும் அறவிடுவதில்லை என்றும், இதற்காக பணம் பெறுவதோ அல்லது வழங்குவதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TIN பதிவு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மலேசியா விலிருந்து நாடு கடத்தப்பட்ட முக்கிய குற்றவாளி

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” என அழைக்கப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் தங்கியிருந்த அவர், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதையடுத்து, நேற்று (25) நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 வயதுடைய சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Interpol Red Notice)  பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது, 2022 ஆம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கமைய, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால, கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அத்துடன், ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றம் அறிவிக்கப்பட்ட பின்னரே பேருந்து கட்டண உயர்வின் இறுதி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, எரிபொருள் விலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பேருந்து கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வவுனியாவில் 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவரை கைது

வவுனியாவில் 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.  குறித்த கைது நடவடிக்கை வவுனியா லக்சபானா வீதிக்கு நேற்று இடம்பெற்றது. வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த காரில் கொண்டுவரப்பட்ட கஞ்சாவினை மற்றொரு முச்சக்கரவண்டிக்கு மாற்றமுற்றப்பட்ட போது இவ் கைதுசம்பவம் இடம்பெற்றது. இதன் போது கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை பொலிசார் மீட்டுள்ளதுடன், வாகனத்தையும், முச்சக்கவண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ்…

மேலும் படிக்க