அண்மை செய்தி தாயகச் செய்தி 

இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி சாத்தியமில்லை; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு

இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி சாத்தியமில்லை; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு தமிழ்மக்கள் மனிதப் புதைகுழிகளுக்கான நீதியை கோருவதுடன், தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி பேன்றவற்றிற்காகவும் தொடர்ந்து போராடிவருகின்றார்கள் எனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவற்றுக்கு விடையில்லாத வரை நல்லிணக்கம் எப்படி மலரும் எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி என்பது சாத்தியமில்லை எனவுஞ் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு ஒட்டுமொத்த தீவிற்கும் பௌத்த சிங்கள முலாம் பூசுவதாலோ, வரி அறவீடுகளைச் செய்வதாலோ நாடு அபிவிருத்தி அடையாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இந்தத் தீவின் பல்வகைமையை கண்ணியப்படுத்துவதுடன், இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் திணைக்களங்களை தூய்மைப்படுத்துமாறும், உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 23.06.2026இன்று உரைமாற்றும்போதே…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பு.

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் முல்லைத்தீவு – இத்திமடு கிராமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு குமுளமுனையை சேர்ந்த சர்விதன் என்ற இளைஞரே இவ்வாறு  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞர் ஒருவர் வயல் காவலுக்கு இத்திமடு கிராமத்தில் உள்ள வயல்பகுதிக்கு நேற்றையதினம் (23) இரவு  சென்றார். இந்த நிலையில்  இன்று அதிகாலை வயலுக்குள் புகுந்த காட்டுயானை இளைஞனை தாக்கியதில்  குறித்த இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

ஆசிரியர் பரீட்சையில் அநீதி; பட்டதாரிகள் நாம் தெருவில் – யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்!

சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்ப்புப் போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே  இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும். அதனால்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன் படுத்தப்பட வேண்டும் ஆளுநர் நா.வேதநாயகன் 

வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என நான் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளேன். இன்று கரும்பு மீள்நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது, எமது வளங்களை நாம் உரிய வகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது, என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் ‘கரும்புத்தோட்டம்’ பகுதியில் பல தசாப்தங்களின் பின்னர் கரும்புச் செய்கையை மீள ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று (23.06.2026) செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. ‘நாமும் கரும்பும்’ செயற்றிட்டத்தின் கீழ், விவசாயிகள், கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், கரும்புச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் ‘நேச்சுரல் ரூட்ஸ்’ (Natural Roots) நிறுவனம் ஆகியவை இணைந்து கூட்டாக இதனை ஏற்பாடு செய்திருந்தன. பல தசாப்தங்களாகக் கைவிடப்பட்டிருந்த கரும்புச் செய்கையை இப்பிரதேசத்தில் மீளவும் செழிக்கச் செய்யும் நோக்கில் இந்த ஆரம்ப நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பதவிநிலை சமாதான நீதிவான்களாகச் சத்தியப் பிரமாணம்!

வேலணை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள், பதவிநிலை சமாதான நீதிவான்களாக இன்றையதினம் (23) உத்தியோகபூர்வமாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஊர்காவற்றுறை நீதிமன்றக் கட்டடத்தில், ஊர்காவற்றுறை நீதவான் கௌரவ அனீபா ரஜீவ் முன்னிலையில் இந்தச் சத்தியப்பிரமாண நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, நீதவான் முன்னிலையில் தத்தமது பதவிகளுக்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டு அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டனர். இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கான சான்றுப்படுத்தல்கள், அவசர தேவைகள் மற்றும் பிரதேச மட்டத்திலான மக்கள் நலச் சேவைகளை இன்னும் விரிவாகவும், சட்டபூர்வ அதிகாரத்துடனும் முன்னெடுப்பதற்கு இந்த நியமனம் தங்களுக்குப் உறுதுணையாக அமையும் எனச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சபை உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச பன்னாட்டு விசார ணைக்கு உட்படுத்தப் படவேண்டும். ரவிகரன்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய வடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 23.05.2026இன்று உரையாற்றும் போதே தனநாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழியானது தற்போது நாட்டிலே பாரிய மனிதப்புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 390எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக சிறார்கள், பெண்கள், ஆண்கள், முதியோரென பலதரப்பட்டவர்களுடைய எலும்புக்கூடுகளும் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கடந்தவாரம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணி மனிதப்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்டப் பலன்களை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இக் கொடுப்பனவு 270,025 தகுதியான குடும்பங்களுக்குக் கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கமைய, மொத்தம் 3,287,163,750 ரூபா (மூன்று பில்லியன் இருநூற்று எண்பத்தேழு மில்லியன் இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய் தொகை, இன்று உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக அச்சபை மேலும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி, ஏ – 9 பிரதான வீதியில் கோர வீதி விபத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பலி!

கிளிநொச்சி, ஏ – 9 பிரதான வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக அமைந்துள்ள மஞ்சள் கோட்டு பாதசாரி கடவையில் அவர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மிகக் கொடூரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவருக்கு வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியில் மேலும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் மூன்று என்புத் தொகுதிகள் ஒரே நேர்க்கோட்டில் புதைக்கப்பட்டவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. நேற்றைய தின அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 மனித என்புத் தொகுதிகளும் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. இதில் 3 மனித என்புத் தொகுதிகள் ஒரே நேரில் (ஒரே நேர்கோட்டில்) புதைக்கப்பட்டவாறு காணப்படுகின்றன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் இடப்பட்டிருந்த என்புத் தொகுதிகளில் மேலும் 13 மனித என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வவுனியா மாநகர சபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதை களுடன் நுழைந்த உறுப்பினர்கள்

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற வவுனியா மாநகரசபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதைகளுடன் நுழைந்த உறுப்பினர்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (22.06) இடம்பெற்ற வவுனியா மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடை உத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது. சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத போதும் சபை நடவடிக்கை மீது விதிக்கப்பட்ட தடைஉத்தரவை நீக்கி உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து எட்டு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த சபையின் செயற்ப்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சபையின் அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, சபைக் கூட்டத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு…

மேலும் படிக்க