தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா கந்தபுரம் கிராமத்தில் நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நடுகை!

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “வளமான நாடு அழகான வாழ்க்கை” சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா கந்தபுரம் கிராமத்தில் நெல் உலர்த்தும் தளம் மற்றும் களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (02) இடம்பெற்றிருந்தது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இவ்விழாவில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர், அரச அதிகாரிகள் மற்றும் கந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் மூலம் அப்பகுதி விவசாயிகளின் நீண்டகால தேவையாக இருந்த நெல்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா கொள்ளையடித்த குற்றச் சாட்டில் இருவர் கைது

யாழ்- வல்வெட்டி, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைக்  கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேகநபரைத் தேடி  காவல்துறையினர்.விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 27 ஆம் திகதி பகல் வேளையில் வீட்டில் ஆள்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளிறங்கிய இருவரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வல்வெட்டித்துறை காவல்துறையினர். விசாரணையை துரிதப்படுத்தி கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்ததில் மேற்படி  சந்தேகநபர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 19 வயது இளைஞர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களில் ஒருவர் வல்லைச் சந்தியிலும், மற்றொருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் மேற்படி…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மெதிரிகிரியை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர்,வெட்டிப் படுகொலை

பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர், அவரது அயல் வீட்டு இளைஞரினால் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த மெதிரிகிரியைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார். படுகொலை செய்யப்பட்ட யுவதியை அவரது அயல் வீட்டில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் நீண்டகாலமாகக் காதலித்து வந்துள்ளார். எனினும், மேற்படி இளைஞரின் காதலை அந்த யுவதி தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார். இதனால் கடும் மனவிரக்தியடைந்திருந்த அந்த இளைஞர், நேற்று மாலை யுவதி மீது கூரிய ஆயுதத்தால் வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலை செய்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான 28 வயதுடைய இளைஞர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளார். அவரைக்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். பல்கலை வளாகத்தில் வெசாக் கூடுகள் உடைத்துச் சேதம்! காவல்துறை யினர் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள்,  இனந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகளே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோாரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் கோப்பாய்  காவல் நிலையத்துக்கு. முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் காவல்துறையினர். தடயங்களைச் சேகரித்துள்ளதுடன், வெசாக் கூடுகளைச் சேதப்படுத்திய நபர்களைக் கண்டறிவதற்காகத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியில் மனிதப் புதைகுழியி லிருந்து 262 என்புகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள் ஒன்று கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 262ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றன. இது தொடர்பில் செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இதன்போது, புதிதாக என்புத்தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது. மேலதிகமாக மேலும் மூன்று மனித என்புத்தொகுதிகள் தென்பட்ட போதிலும், அவை இன்னும் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்படவில்லை. அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து கண்டறியப்பட்ட நாணயக்குற்றி வடிவிலான பொருளானது 97ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டு,…

மேலும் படிக்க
அண்மை செய்தி புலச் செய்திகள் 

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு 2026

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு 2026 *********************************** சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் சூரிச் சிவன் ஆலய சைவத்தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடாத்தும் “அற்றார் அழிபசி தீர்த்தல்” நிகழ்வும் தாயக உணவுக் கண்காட்சியும் பத்தாவது ஆண்டில் பெருந்திரளான மக்கள் மத்தியில் கடந்த 26.04.2026 ஞாயிற்றுக்கிழமையன்று Sporthalle Unterrohr Schlieren Unterrohrstrasse 2 8952 Schlieren எனும் இடத்தில் சைவத்தமிழ்ச் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சி.இராதாகிருஷ்ணன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆசியுரையினை சூரிச் சிவன் ஆலய பிரதமகுரு கைலாசநாதக்குருக்கள் நிகழ்த்த அதனைத் தொடர்ந்து நடன நிகழ்வுகள் இடம்பெற்றது. தொடர்ந்து கருத்துரைகளை சைவத்தமிழ்ச் சங்க செயலாளர் திரு.செ.சிறிஸ்கந்தவேள், சைவத்தமிழ்ச் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சி.இராதாகிருஷ்ணன் என பலர் ஆற்றியதோடு இசை நிகழ்வுகள், நாடக ஆற்றுகைகள், எனப் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு நேரம் நீடிப்பு!

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர்.பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது.குறித்த பகுதியை கடந்த ஆண்டு நேரக்கட்டுப்பாட்டுடன் இராணுவத்தினர் போக்குவரத்திற்கு அனுமதித்தனர். இந்நிலையில் வடமாகாண ஆளூநர் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலின் போது, குறித்த வீதியினை 24 மணி நேர போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு இராணுவத்தினர், மறுத்துள்ளனர். அழுத்தமான கோரிக்கைகளை தொடர்ந்து மேலும் ஒரு மணி நேரம் வீதியை திறந்து விட சம்மதித்துள்ளனர்அதன் அடிப்படையில் இதுவரை காலமும் காலை 06 மணி முதல் இரவு 7 மணி வரையில் திறந்து விடப்பட்ட வீதியினை ஒரு மணி நேரம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச் சண்டை வீரர்கள். தாயகம் திரும்பினர்!

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட வெற்றிக் கிண்ணங்களை பெற்ற குத்துச்சண்டை குழுவினர் இன்றையதினம் பலாவி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். வடக்கு மாகாணத்தில் இருந்து பிரபாகரன் ரதுக்ஸன், நகுலேஸ்வரன் சிறீஹரிஸ், லெனின் சானுராஜ், முஹமட் றிலாஸ், புஸ்பநாதன் அஜந்தா ஆகிய வீர வீராங்கனைகள் இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நேற்றுமுன்தினம் பங்குபற்றினர். குத்துச்சண்டையில் எட்டு வகைகள் காணப்படுகின்ற நிலையில், இதுவரை வடக்கு – கிழக்கில் இருந்து எவரும் பங்கெடுக்காத வகையிலான குத்துச்சண்டை போட்டியிலேயே அவர்கள் பங்கெடுத்து சாதனையை நிலைநாட்டி நாடு திரும்பினர். அவர்களது பயிற்றுவிப்பாளரான தியாகராஜா நாகராஜா என்பவரும் அவர்களோடு உடனிருந்து போட்டியின்போது அவர்களை வெளிப்படுத்தினார். குறித்த போட்டியில் பங்குபற்றுவதற்கு செல்வதற்கு எவரும் நிதி உதவி வழங்காத நிலையில் கடன்பட்டும், வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்துமே சில போட்டியாளர்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் காவல்துறை யினர்.துரத்திச் சென்ற உந்துருளி.கோர விபத்து

யாழ்ப்பாணத்தில்  காவல்துறையினர்.துரத்திச் சென்ற உந்துருளி.ஒன்று, வீதியில் பயணித்த மற்றொரு   உந்துருளியுடன். மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை யாழ்ப்பாணம் காவல்துறையினர்.  உந்துருளி.சென்ற நபர் ஒருவரைத் துரத்திச் சென்றுள்ளனர்.இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், காவல்துறையினர். துரத்திச் சென்ற  உந்துருளி.கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாகப் பயணித்த வேறொரு உந்துருளி.மீது பலமாக மோதியுள்ளது. தப்பியோட முயன்ற  உந்துருளி.மோதியதில், மற்றைய  உந்துருளி.பயணித்த நபர் படுகாயமடைந்து, தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோட முயன்ற நபரை காவல்துறையினர். சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.இவ்விபத்துத் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர்.மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மீகொடையில் நள்ளிரவில் அரங்கேறிய பெரும் சோகம் ஆறு பேர் உயிரிழப்பு.

மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின், ஹைலெவல் வீதி, மீகொடை சந்திக்கு அருகில் நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு (31), அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக வந்த கெப் வண்டியொன்று, வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த ‘தன்சல்’ (தானசாலை) ஒன்றில் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்து புகுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த ஆண்கள் 35 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் ஹங்வெல்ல, அவிசாவளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். உயிரிழந்த பெண்களில் 15 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதுடன், அவர்கள் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென…

மேலும் படிக்க