சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செருப்பு மாலை அணிவித் திருந்த தனது பதாகையை கிழித்து, அறுத்துச் சென்ற அர்ச்சுனா

யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவித்திருந்த தனது பதாகையை கிழித்து, தனது காரில் அர்ச்சுனா இராமநாதன் எடுத்து சென்ற  சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை இலக்கு வைத்து அவமதிப்பான வாசகங்கள் கொண்ட 10 அடி உயர பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பிரதான வீதியில், சின்னக்கடை பகுதிக்கு அண்மையில் இந்தப் பதாகை வைக்கப்பட்டிருந்தது.அந்தப் பதாகையில் ‘நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராஜபக்ஷ ஈனப் பிறவி’ என எழுதப்பட்டு அவரது புகைப்படத்தின் மீது செருப்புகளால் செய்யப்பட்ட மாலையும் தொங்கவிடப்பட்டிருந்தது. நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் இந்தப் பதாகை அமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இந்நிலையில், குறித்த பதாகையின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தனது காரில் வந்த அர்ச்சுனா இராமநாதன், பதாகையை கிழித்தெடுத்து, தனது காரில் எடுத்து…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழிலிருந்து தங்கம் கடத்த முற்பட்ட 08 பேரும் சுங்க அதிகாரிகள். விசாரணை செய்ய நீதிமன்று அனுமதி

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 08 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்று அனுமதித்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு நேற்று முன்தினம் (17) பயணிக்க இருந்த பயணிகளில் இந்திய பிரஜைகளான இருவரின் உடைமையில் இருந்து தலா 100 கிராம் தங்க கட்டிகள் மீட்கப்பட்டன. அதனை தொடர்ந்து பயணிகளை சோதனைக்கு உட்படுத்திய வேளை சந்தேகத்திற்கு இடமான 26 பயணிகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சுங்க திணைக்கள அதிகாரிகள் 26 பேரையும் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று ஸ்கான் செய்தனர்.அதன் போது 06 பேரின் உடலினுள் தங்க கட்டிகள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து 06 பேரையும் தமது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அர்ச்சுனா கஜேந்திரகுமார் இடையே. கடுமையான வாக்குவாதங்கள்

வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டம் வலி.வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து அதனை மேம்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் தையிட்டி விகாரை, போக்குவரத்து விடயங்கள், காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருவருக்கும் இடையில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. அத்துடன் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையிலும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக இராமநாதன் அர்ச்சுனா, மிகக்கடுமையாக ஏக வசனங்களை…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம்

புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம் யாழ்ப்பாணம், நெடுங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய, பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த சிப்பாய் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் பலாலி இராணுவ முகாமுக்கு வந்த அவரிடம், நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதமை தொடர்பில் கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் வழங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் முகாமிலிருந்து வெளியேறிய அவர், அரியாலை – நெடுங்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மானிப்பாய் காணி விவகாரம்: அப்பாவி மக்களை பலிகடாவாக்க வேண்டாம்!

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி தொடர்பாக சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான செய்திகளால் தாம் மற்றும் தமது குடும்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தெரிவிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர், இன்றைய காலச் சூழலில் ஊடகங்களின் விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றாலும், உண்மைக்குப் புறம்பான செய்திகளின் தாக்கம் அப்பாவி மக்களையும் அவர்களது குடும்பங்களையும் கடுமையாகப் பாதிப்பதாகத் தெரிவித்தார். பண்டத்தரிப்பு பகுதியில் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டதாகவும்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தொடர்பணியில் ஏர் நிலம்..ஆழ்துளைக் கிணறு அமைப்பு.

தொடர்பணியில் ஏர் நிலம்.. 05.06.2016இல் இறைபதமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் 10வது ஆண்டு நினைவு நாள் 05.06.2026 ஆகும்.. இவ் நாளில் அவரது ஆன்மா சாந்திபெற இறைவணை வேண்டுவதோடு நினைவுகளால் வணங்குகின்றோம். இறைபமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தாயகம் மன்னார் முத்தரிப்புத்துறை 70 குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்தி செய்யுமுகமாக ஆழ்துளைக் கிணறு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதோடு சிறப்புணவு வழங்கி ஆன்ம சாந்தி பிரார்தனையும் நடைபெற்று பயன்தரு மரக்கன்றும் நடுகை செய்யப்பட்டது… இச் செயற்திட்டத்திற்கு அவரது சுவிற்சர்லாந்து வாழ் மகள் திருமதி ராதிகா கஜேந்திரன் அவர்கள் 3,24,000/= நிதியினை வழங்கியிருந்தார். இவ் நிதியுதவி நல்கிய குடும்பத்தினர்கும் இப் பணியை நிறைவாக்கிய “ஏர் நிலம்” தொண்டமைபின் இணைப்பாளர் கவிஞர் மன்னார் பெனில், நிர்வாக இயக்குனர் திரு.தனம் நித்தி ஆகியோருக்கும் பயன்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடி யேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த கிராமங்களை மீள்குடியேற்றம்செய்வது தொடர்பில் விசேட கூட்டங்களை ஏற்பாடுசெய்யுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இகியோருக்கு இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 17.06.2026இன்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவில் ஆண்டான்குளம் கிராமமும்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி அகழ்வில் மேலும் 14 எச்சங்கள்; இரும்பு வளையம், சிறுமியின் காப்பு போன்றன மீட்பு

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையுமாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 27ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது. என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் ஒரு இரும்பு வலயம் ஒன்று சான்று பொருள் மீட்கப்பட்டுள்ளது. சிறுமி ஒருவருடைய பிளாஸ்ரிக் காப்பை ஒத்த பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளின் போது, 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஜெயபுரம் பகுதியில் நிரந்தரமான நீதிமன்றம் அமைப்பதற்கு சுமார் மூன்று ஏக்கர் காணி

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகர பகுதியிலேயே நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. இதனால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் மற்றும் ஜெயபுரம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்கள் நீதிமன்றங்களுக்கு சென்று வருவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு 2019ஆம் ஆண்டில் இருந்து குறித்த பகுதியில் நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவதற்கு பிரதேச செயலகத்தினால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் ஜெயபுரம் பகுதியில் நிரந்தரமான நீதிமன்றம் அமைப்பதற்கு சுமார் மூன்று ஏக்கர் காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அடையாளப்படுத்தப்பட்ட காணி வன வள பகுதியினரின் ஆளுகைக்கு உட்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையால், குறித்த காணியினை நீதிமன்றம் அமைப்பதற்கு பெற்றுக் கொள்வது தொடர்பான ஒன்றிணைந்த கூட்டுக்களவிஜயம் நேற்றைய தினம் (15.06.2026) இடம்பெற்றது.இக்களவிஜயத்தில் கெளரவ மேல் நீதிமன்ற நீதிபதி, கெளரவ மாவட்ட நீதிமன்ற நீதிபதி, பிரதேச செயலாளர், மாவட்ட வன வள அதிகாரி,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு புதிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமனம்

பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு புதிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமனம் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவின் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளராக தெரிவு செய்யப்பட்ட திருமதி கஜதீபன் விதுஜா அவர்கள், 2026.06.01 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. S. முரளிதரன் அவர்களிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். இந்நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் மாவட்ட காணி பதிவாளரும் கலந்துகொண்டார். பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கு நீண்டகாலமாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் நியமிக்கப்படாத நிலையில், பல்லவராயன்கட்டு மேற்கு பிரிவின் பதிவாளரே பதில் கடமையாற்றி வந்தார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில், பல்லவராயன்கட்டு கிழக்கு பிரிவிற்கென தனியான பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளதால், அப்பிரதேச மக்கள் தங்களது பிறப்பு, இறப்பு…

மேலும் படிக்க