செய்திகள் தாயகச் செய்தி 

கட்டளையை மீறிச் சென்ற  பாரவூர்தி மீது காவல்துறை யினர் துப்பாக்கிப் பிரயோகம்

கிளிநொச்சியில் காவல்துறையின் கட்டளையை மீறிச் சென்ற  பாரவூர்தி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று (01) அதிகாலை கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் சில்லுகள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபரான பாரவூர்தியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம்.

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமை.அந்தவகையில் இன்று (01) காலை கொட்டும் மழைக்கு மத்தியிலும் தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள நிலையில் ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் இதேவேளை  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தையிட்டி விகாரை தொடர்பில் உண்மைக்கு அப்பாற்பட்ட விடயங்களை யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்..  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இலங்கையின் சுதந்திர தின நாளில் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் :

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் இதனைக் குறிப்பிட்டார்.தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக இப்போராட்டமானது வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் இப் போராட்டத்தினை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இப்போராட்டமானது சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஈரான் வரைந்துள்ள சிவப்புக் கோடு.ஈழத்து நிலவன்

ஈரான் வரைந்துள்ள சிவப்புக் கோடு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ✦. மேற்கு ஆசியாவில் தற்காப்பு நிலையிலிருந்து உடனடித் தாக்குதல் நிலைக்கு மாற்றம் மத்திய கிழக்கு பகுதி முன்னெப்போதையும் விட மிக அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் தனது போர் விதிமுறைகளில் (Rules of Engagement) அடிப்படையான மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலும்—அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்—உடனடிப் பதிலடித் தாக்குதலை உருவாக்கும் என தெஹ்ரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அடையாளத் தாக்குதல்கள், தாமதமான பதிலடிகள், சர்வதேச இராஜதந்திரக் கணக்கீடுகள் ஆகியவற்றின் காலம் முடிவடைந்துவிட்டதாக ஈரான் இராணுவத் தலைமை வலியுறுத்துகிறது. இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்: “இது இரண்டு மணிநேரப் போர் அல்ல.” இனிமேல், சிறிய ஆக்கிரமிப்பைக்கூட ஒரு பிராந்தியப் போரின் தொடக்கமாகவே தெஹ்ரான் கருதும். ✦. ஈரானின்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ரூ. 2 கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் மாமா மற்றும் மருமகன் கைது

ரூ.2 கோடி 30 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேகநபர்களை சம்மாந்துறை  காவல்துறை.கைது செய்தனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை.பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றில் நேற்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கைதான 49 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரது வாக்குமூலம் மற்றும் சம்மாந்துறை  காவல்துறை.நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என்.ஆர் பெரேராவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்மாந்துறை புற நகர் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்  காவல்துறை.அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனையின் பிரகாரம் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பல்வேறு குற்றச் செயல்கள் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியுமான என். றிபாய்டீன் தலைமையிலான காவல்துறை.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரி போராட்டம். அருட்தந்தை மா.சக்திவேல்,

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரி போராட்டம். பயங்கர வாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறி, ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், தற்போது சிங்கம் போன்ற கொடிய முகத்துடன், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்காக வரைபை வெளியிட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(30.01.2026) கொழும்பு – நீதி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிவில் செயற்பட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், அருட்தந்தை மா.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை மா.சக்திவேல், “ ஜெ. ஆர். ஜெயவர்த்தனவிற்கு இல்லாத கொடிய முகம் ஒன்று அநுரவிற்கு இருக்கிறது. இந்த சிங்கம் தெற்கில் உள்ள தமிழ் மக்களை வேட்டையாட காத்திருக்கிறது. இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தமிழர்கள் சூரையாடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

பெய்ஜிங்கில் ஸ்டார்மர்: உறைபனி காலத்தின் முடிவு

பெரிய மறுசீரமைப்பு (The Great Rebalancing) பெய்ஜிங்கிலிருந்து பிரஸ்ஸல்ஸ் வரை: மேற்கத்திய நாடுகள் எவ்வாறு கட்டுப்பாட்டை இழக்கின்றன ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ✦. பெய்ஜிங்கில் ஸ்டார்மர்: உறைபனி காலத்தின் முடிவு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பிரிட்டிஷ் பிரதமர் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மகா மண்டபத்தில் (Great Hall of the People) காலடி வைத்துள்ளார். அதிபர் ஷி ஜின்பிங் உடன் சர் கீர் ஸ்டார்மர் நடத்திய இந்தச் சந்திப்பு, வெறும் இராஜதந்திர மரியாதைக்கான நிகழ்வு அல்ல. அது, இத்தாத்துவ பிடிவாதங்களை விட்டு விலகி, நடைமுறைப் பிழைப்பிற்காக (Pragmatic Survival) ஐக்கிய இராச்சியம் அமைதியாக நகர்கிறது என்பதற்கான ஒரு முக்கியமான மூலோபாயச் சைகையாகும். சீனாவுடன் தாம் “மிகவும் அதிநவீன உறவு” ஒன்றை உருவாக்க விரும்புவதாக ஸ்டார்மர் வெளிப்படையாகக் கூறினார். பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு, உலகளாவிய செல்வாக்கு ஆகியவை பெய்ஜிங்குடன் நேரடியான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

முறையற்ற வகையில் வெளிநாடு சென்றவர்கள் இடையூறுகளின்றி நாடு திரும்ப அனுமதி.ஆனந்த விஜேபால

நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் எந்தவித இடையூறுகளும் இன்றி நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதற்கு வசதியாக தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில், அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு தாயகம் திரும்ப விரும்புவோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னர் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய சிலர், விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலைப்பாட்டை அகதிகளுக்கான ஐக்கிய…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள்உளவாளிகள்.சி.சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் நுழைக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் , தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரன் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.   அவர்களால் புகுத்தப்பட்டவர்கள் தான் அங்கே அதிகம் உள்ளனர். பதில் செயலாளராக இருந்தவர் அந்தப் பதவியில் இருந்ததால் அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார்.   அதேபோல் சாணக்கியன் எம்.பி எப்படி உள்வாங்கப்பட்டவர் என்று தெரியாமல் உள்வாங்கப்பட்டு விட்டார். உண்மையில் இறுதிப் பொதுக்குழு கூடிய போது சாணக்கியன் எமது கட்சியில் இல்லை. அவர் எப்படி அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அது மர்மமாகவே இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது

கரையோர காவல்துறை பிரிவின் ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 63 வயதுடைய கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் மற்றும் சிறுமி ஒருவர் காயமடைந்து கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது. அதன்படி, இத்துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளால் ஹெட்டியாவத்தை பகுதியில் நேற்று பகல் கைது செய்யப்பட்டதுடன், இதன்போது முச்சக்கரவண்டி…

மேலும் படிக்க