இலங்கை செய்தி. செய்திகள் 

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லை.மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லையென கொழும்பு பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஆகையால் இலங்கை மக்கள் முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு இன்னும் முயற்சி செய்ய வேண்டியுள்ளதாகவும் அதற்கு சட்டத்தின் ஆட்சி (Rule of Law) வலுப்படுத்தப்படுவது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட  விசேட  செய்தியிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “முழுமையான சுதந்திரத்தை அடைய சட்டத்தின் ஆட்சி இன்றியமையாதது.  சட்டத்தை  சமமாகவும் நீதியுடனும் கடைப்பிடிக்கும்  சமூகமே  உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.  நாட்டின் தற்போதைய நிலையை அவதானிக்கும்போது  பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் இலங்கை பெரிதளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூற முடியாது.  உண்மையான சுதந்திரமென்பது வெறும் அரசியல் சுயாட்சி மட்டுமல்ல. அது நீதியும் சமத்துவமும் பொறுப்புணர்வும் நிலவும் சமூக அமைப்பை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது.

மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது. ============================================ மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதி, நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஆமை இறைச்சி ஆமை முட்டைகளுடன் ன் மூன்று (03) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து படகு ஒன்றையும் கைப்பற்றி உள்ளனர். மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடமத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் சட்டவிரோத விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 17 கிலோ ஆமை இறைச்சி மற்றும் 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு படகுடன் குறித்த மூன்று சந்தேக நபர்களை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்)வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று 02.02.2026இன்று இடம்பெற்றது. அந்தவகையில் ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டப்பேரணியானது நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி, வவுனியாவடக்கு பிரதேசசெயலகம் வரையில் இடம்பெற்றதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார் கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர் இதன்போது ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளால் வவுனியா வடக்குபிரதேசசெயலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மேலும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஹார்முஸ் நெருப்புப் புள்ளி ஈரான் – அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றிய மோதல்:

ஹார்முஸ் நெருப்புப் புள்ளி (HORMUZ FLASHPOINT) ஈரான் – அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றிய மோதல்: மத்திய கிழக்கை ஒரு பிராந்தியப் போரின் விளிம்புக்கு தள்ளுகிறது ⧉════════❁════════⧉ “இந்த முறை இது ஒரு பிராந்தியப் போராக அமையும்” – காமேனியின் எச்சரிக்கை ஈரானின் உயரிய தலைவர் அயத்துல்லா அலி காமேனி, அமெரிக்காவை நோக்கி இதுவரை இல்லாத அளவில் மிக நேரடியானதும் ஆபத்தானதும் ஆன எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவால் தொடங்கப்படும் எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் ஒரு வரையறுக்கப்பட்ட மோதலாக இருக்காது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். “அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராகவே மாறும்.” தேசிய அரசுத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், இந்த மோதலை வெறும் ராணுவச் சம்பவமாக மட்டும் பார்க்காமல், மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிரான வரலாற்றுப் போராட்டமாக காமேனி சித்தரித்தார். ஈரானின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் உத்தியோகபூர்வ முன்மொழிவொன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளித்து வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நன்மைகளை தடுப்பது இதன் நோக்கம் அல்லவென்பதுடன், சிறுவர்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இம்முன்மொழிவு கையளிக்கப்பட்டமைக்கான நோக்கமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா ரணசிங்க இதற்கான சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதுடன், அதற்கான கால அவகாசம் தொடர்பிலும் தெரிவித்தார். இந்தத் தடையை நடைமுறைப்படுத்த நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், ஆரம்பகால சிறுவர் அபிவிருத்திக்கான தேசிய செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஆலோசனை அவசியப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகள் விளக்கமறியலில்

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகள் மற்றும் மேலும் 6 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது. எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி செய்திகள் 

சுதந்திர தினம் கரிநாள்; பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு –

சுதந்திர தினம் கரிநாள்; பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போராட்டம் சுதந்திர தினம் கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01), இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இதற்கு அழைப்பு விடுத்தனர். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர்.  

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

விளிம்பில் புவிசார் அரசியல்:உக்ரைன்–ரஷ்யா போர்:

விளிம்பில் புவிசார் அரசியல்: உக்ரைன்–ரஷ்யா போர்: அபாயகரமான தந்திரோபாய–இரசாயன–மூலோபாய கட்டத்திற்குள் நுழைகிறது ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ விரிவடைந்து வரும் உலகளாவிய மோதலுக்கு மத்தியில் ஒரு பலவீனமான இடைவேளை உக்ரைன்–ரஷ்யா மோதல், போர் தொடங்கியதிலிருந்து அதன் மிகவும் சிக்கலானதும் முரண்பாடானதும் ஆன கட்டங்களில் ஒன்றை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் Donald Trump-ன் வேண்டுகோளின் பேரில், Kyiv மீது ரஷ்ய தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது, பதற்றம் குறைவதுபோன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த தந்திரோபாய இடைவேளையின் அடியில் — இரசாயனப் போர் குற்றச்சாட்டுகள், ஐக்கிய நாடுகள் சபையில் சட்டப்போர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல் தடைகள், உளவுத்துறை நடவடிக்கைகள், சீன தொழில்துறை தொடர்புகளைக் கொண்டிருக்கக்கூடிய அதிவேக ஏவுகணை அச்சுறுத்தல்கள் என ஒரு பன்முக மோதல் வேகமாக விரிவடைந்து வருகிறது. மேற்பரப்பில் அமைதியாகத் தோன்றுவது, உண்மையில் ஒரு பெரும் மூலோபாயப் புயலுக்கு முன்பான அமைதியாக…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

காசாவில் போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்

காசாவில் கடந்த ஒக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று (31) காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6 இற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, பொலிஸ் நிலையம், கான் யூனிஸில் உள்ள ஒரு அகதிகள் கூடார முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் 3 குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.காசா நகரில் உள்ள பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

பெந்தோட்டை பகுதியில் போதைப் பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

அளுத்கம, பெந்தோட்டை பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (31) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 5.105 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன் தெரு மதிப்பு ரூ. 7 கோடிக்கும் அதிகமென தெரிவிக்கப்படுகின்றது.மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க