அண்மை செய்தி சிறப்புச் செய்தி 

கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற சம்பவம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று(2) நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக நேற்று(2) நள்ளிரவு பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை கைப்பற்ற முனைந்த போது வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காணொளி அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

வளைகுடாவில் நரக நெருப்பு: ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் முழுமையான போர்முறைக்கு உயர்வு

வளைகுடாவில் நரக நெருப்பு: ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் முழுமையான போர்முறைக்கு உயர்வு துல்லியத் தாக்குதல்களில் இருந்து கட்டமைப்பு வீழ்ச்சிவரை: நீண்டகால பேரழிவை நோக்கி நகரும் பிராந்தியம் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ “உண்மை வாக்குறுதி 4” (TRUE PROMISE 4) — ஈரானின் பல்துறை தாக்குதல் கோட்பாடு ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC), “உண்மை வாக்குறுதி 4” நடவடிக்கையின் 90வது அலை மூலம், மோதலை முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரப்படுத்தியுள்ளது. இது ஒரு சாதாரண பதிலடி அல்ல—முழுமையான மூலோபாய உள்கட்டமைப்பு போர். சமீபத்திய இலக்குகள்: * அபுதாபி தொழில்துறை எஃகு வளாகங்கள் * பஹ்ரைன் அலுமினிய உற்பத்தி மையங்கள் * மனாமா அருகிலுள்ள பாதுகாப்பு சார்ந்த அமைப்புகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம்

ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் (05) ஞாயிற்றுக்கிழமை வெளியிடவுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு குறிப்பிடும்போதே லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய விலைத்திருத்தம் தொடர்பான பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ள அவர், நிதியமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் என்றார். பெரும்பாலும் எதிர்வரும் (05) ஞாயிற்றுக்கிழமை புதிய விலைத்திருத்தம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுவரை, தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது. நாட்டின் நுகர்வுக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

எரிபொருள் கப்பலொன்று நேற்று நாட்டை வந்தடைந்து

எரிபொருள் கப்பலொன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 40,000 மெற்றிக் தொன் எரிபொருளுடன் இக்கப்பல் நாட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவது; நாட்டுக்கு வந்துள்ள கப்பலில் 32,000 மெற்றிக் தொன் டீசலும் 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் உள்ளன. தரப்பரிசோதனையின் பின்னர், தரையிறக்கப்பட்டு இது விநியோகத்துக்கு அனுப்பப்படும். எதிர்வரும் காலங்களில் எவ்வித தட்டுப்பாடுகளுமின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென்றும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள் மடம் மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

குருக்கள்மடம் மனித புதைகுழியில் இடம்பெற்று வந்த அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மூன்று தினங்களாக இப்புதைகுழியில், அகழ்வுப் பணிகள் இடம்பெற்று ஆறடி ஆழம் வரை தோண்டப்பட்டது.இருந்தபோதும் மனித எச்சங்கள் எதையும் இதற்குள் காணக்கிடைக்கவில்லை. இதனால், இப்பணிகள் நேற்று முன்தினம் (01) கைவிடப்பட்டன.தோண்டப்பட்ட இடம் மண்ணிட்டு மூடப்பட்டது. களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஸ்கேன் செய்யப்பட்ட வேறு இடத்தில் பணிகளைத் தொடர்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.புனித ஹஜ் கடமையை முடித்துவிட்டு கல்முனை வீதியால் பயணம் செய்திருந்த 170 முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இவ்விடத்தில் மூடப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. உலக செய்திகள் 

ரஷ்ய வெளியுறவு பிரதியமைச்சர் அவசரமாக கொழும்பு வருகை!

ரஷ்ய வெளியுறவு பிரதியமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ நேற்று (31) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்தார். இவருடன், ரஷ்ய வெளியுறவு அமைச்சின் உயரதிகாரி ஒருவரும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்திய தலைநகர் பதுடில்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று மாலை 04.20 மணியளவில், இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் பொறியாளர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு, இலங்கைக்கான ரஷ்யத் தூதர் லெவன் ஜகரேயன் ஆகியோர் விமான நிலையம் சென்று ரஷ்ய பிரதியமைச்சரை வரவேற்றனர். இலங்கை-ரஷ்யாவுக்கிடையிலான 11 ஆவது அரசியல் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில், இவர் இலங்கை வந்துள்ளார். நாட்டின் உயர்மட்ட தலைவர்களையும் இவர் சந்திப்பாரென வௌிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

நள்ளிரவு உத்தி யோகபூர் வமாக வெளியிடப் பட்டுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று  (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளிட்ட மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 176,527 மாணவர்கள், அதாவது 62.64% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை Doenets.lk மற்றும் Results.exams.gov.lk ஆகிய இணையதளங்கள் மூலம் பார்வையிட முடியும். மேலும், இன்று (01.04.2026) முதல், மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி onlineexams.gov.lk இணையதளத்தின் மூலம் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், அதிபர்கள் மற்றும் வலய/மாகாண கல்வி அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் பெறுபேறுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இதேவேளை, பல்வேறு காரணங்களுக்காக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

39 நாடுகளுக்கு இலங்கையின் இலவச சுற்றுலா விசா..!

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு 2025 ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ், இலவச விசா வழங்குவதற்கான சட்ட வரைவுகள் சட்ட ஆலோசகரால் தயாரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த முன்மொழிவு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அமைச்சரவை அதற்கான அனுமதியை அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, இலங்கையை உலகின் முன்னணி சுற்றுலா இலக்குகளில் ஒன்றாக வலுப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்குள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஏடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

போரின் விளிம்பில்: ஈரான்–அமெரிக்க மோதல் – கலப்புப் போரின் புதிய கட்டம்

போரின் விளிம்பில்: ஈரான்–அமெரிக்க மோதல் – கலப்புப் போரின் புதிய கட்டம் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ விளிம்பில் ஒரு பிராந்தியம்: நிழல் யுத்தத்திலிருந்து நேரடி இராணுவ மோதல் வரை ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கிடையேயான மோதல், நீண்டகால “நிழல் யுத்தம்” (Shadow War) நிலையிலிருந்து வெளிப்படையான, பல்துறை இராணுவ மோதலாக வேகமாக மாறியுள்ளது. முன்பு பிரதிநிதி போர்கள் (Proxy Wars), இணையவழித் தாக்குதல்கள் மற்றும் மறைமுக நடவடிக்கைகளால் மட்டுமே வரையறுக்கப்பட்ட இந்த மோதல், இப்போது மூலோபாய குண்டுவீச்சுகள், பெரிய அளவிலான படை நிலைநிறுத்தங்கள் மற்றும் நேரடி தரைப்போர் சாத்தியங்களைக் கொண்ட ஒரு ஆபத்தான கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. இந்த தீவிரமடைந்த பதற்றத்தின் மையத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடபகுதி கடற் பரப்பு க்களில் அதிகரித் துள்ள இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்.ரவிகரன்

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; கண்காணிப்பு கருவிகள் பழுதடைந்துள்ளனவா எவும் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக தம்மால் கண்காணிக்கப்படுவதாகவும், அத்தகைய அத்துமீறல்களுக்கெதிரா தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 31.03.2026நேற்று கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே குறித்த விடயம் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்திய இழுவைப் படகுகள்…

மேலும் படிக்க