சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன – ரவிகரன் எம்.பி

நாடகநடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன – ரவிகரன் எம்.பி ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் 04.02.2026நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் வருடாவருடம் இதேநாளில் எமது போராட்டம் தொடர்சியாக இடம்பெற்றுவருகின்றது. இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சுதந்திரநாளினை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆரப்பாட்ட பேரணி

சுதந்திரநாளினை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆரப்பாட்ட பேரணி இலங்கையின் 78ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி 04.02.2026இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைகமகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கற்புடன் இடம்பெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளாநொச்சி கந்தசுவாமிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது.இவ்வார்ப்பட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோசங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப்பிரச்சிற்கான தீர்வை வலியுத்தியும், தமிழர்தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளை தமிழர்கள் இந்த நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழர்களுக்கான சுதந்திரத்தை எந்த அரசாங்கத்தாலும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை வேலன் சுவாமிகள்

யுத்தம் நடைபெற்று பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழர்களுக்கான சுதந்திரத்தை எந்த அரசாங்கத்தாலும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என சைவ சமயத் தலைவர்களில் ஒருவரான நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கரிநாள் பேரணியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியள்ளார்.அத்தோடு, இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறை நீதிக்கு எதிராகவே செயற்படுகிறது என்றும் கூறியுள்ளார்.இவ்வாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள்ளே வழக்குகள் கொண்டு செல்லப்பட்டு முடக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

மேலும் படிக்க
கட்டுரை மருத்துவ குறிப்பு 

அவசர சுகாதார எச்சரிக்கை: ஐக்கிய இராச்சியத்தில் நோரோவைரஸ் தொற்றுகள் தீவிரமாக உயர்வு

அவசர சுகாதார எச்சரிக்கை: ஐக்கிய இராச்சியத்தில் நோரோவைரஸ் தொற்றுகள் தீவிரமாக உயர்வு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ 2026 பிப்ரவரி: குளிர்காலத்தில் உருவான கடுமையான பொது சுகாதார அபாயம் ஐக்கிய இராச்சியம் தற்போது நோரோவைரஸ் (Norovirus) தொற்றுகளின் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான அதிகரிப்பை எதிர்கொண்டு வருகிறது. National Health Service (NHS) மற்றும் UK Health Security Agency (UKHSA) ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள சமீபத்திய கண்காணிப்பு அறிக்கைகள், இந்த வைரஸ் வழக்கமான பருவ சராசரிகளை விட மிக அதிகமாக பரவி வருவதை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 5 வயதிற்குக் குறைந்த குழந்தைகள் மிக அதிக ஆபத்தில் உள்ளனர். ✹. பரவலின் அளவு: கண்காணிப்பு தரவுகள் என்ன கூறுகின்றன? UKHSA வெளியிட்ட சமீபத்திய கண்காணிப்பு தரவுகள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன: * அதே காலகட்டத்தின் 5 பருவ…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சீறீதரன் எம்பியின் பதவி நீக்கம்; கட்சிக்குள் எதிர்ப்பு!

சீறீதரன் எம்பியின் பதவி நீக்கம்; கட்சிக்குள் எதிர்ப்பு! இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து சிறீதரன் எம். பி.யை நீக்கும் முடிவு கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை காலை மட்டு. ஊடக அமையத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசமைப்பு பேரவையில் இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க சிறீதரன் எம். பி. ஆதரவளித்தார் என்று கூறப்படும் விவகாரம் சர்ச்சையானது.இதையடுத்து, அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில், சிறீதரன் பதவி விலகாது விடின் அவர் விலகும்வரை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து அவரை கட்சி நீக்கும் என்று அரசியல்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லை.புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியில்14 கிராம் ஐஸ் உடன் ஐந்து பேர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்களால் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்ட நிலையயில் முல்லைத்தீவு விசேட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று(02) புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியிலிருந்து ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர் நேற்றைய தினம் (02) புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியில் 14 கிராம் ஐஸ் உடன் ஐந்து பேரும் வெகனார் வாகனம் ஒன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் களும் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு காவல்துறையினரிடம்ஒப்படைக்கப்பட்டனர் இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு காவல்துறையினர் இவர்களை இன்று(03) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அங்கு புதுக்குடியிருப்பு காவல் நிலைய அதிகாரி தி.ஜனன் கு‌றி‌த்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் இவர்களை காவ‌லி‌ல்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி செய்திகள் 

பல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி அழைப்பு

வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை; பல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி அழைப்பு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே 04.02.2026நாளையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகமாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” என்னும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு ஆதரவு நல்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அழைப்புவிடுத்துள்ளார். குறித்த “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கும்வகையில் ஊடகங்களுக்கு 03.02.2026இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி செய்திகள் 

இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினமே.இயக்குநர் வ.கௌதமன்!

இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினமே – தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன்! இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமட்ட ஒரு கறுப்பு தினம் எனவும், சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கறுப்பு தின போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுதந்திரம் பெற்ற இலங்கை தேசம் வேண்டும் என்ற அடிப்படையில் உறுதியாகவும், உக்கிரமாகவும் போராடிய பங்கு தமிழர்களுக்கும் உண்டு. இந்திய ஒன்றியத்திலும், இலங்கையிலும் தமிழ் தலைவர்களின் போராட்டமும் சுதந்திரத்துக்கு காரணமாக அமைந்தது. அந்தவகையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பொன்.அருணாசலம், பொன்.இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், ஈ.எம்.வி.நாகநாதன்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் சிறிதரன்

போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளைய தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் நாளையதினம் முன்னெடுக்கும் போராட்டமானது மிகவும் பெறுமதியானயானது.நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம் எமக்கு இந்த நாட்டில் சமஷ்டி முறையிலாக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகள் 07 ஆண்டுகளைத் தாண்டியும் தீர்க்கப்படவில்லை.எனவே சுதந்திர தினத்தன்று இடம்பெறும் கரிநாளுக்கு வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க