இலங்கை செய்தி. 

நீர்கொழும்பு வன்முறை மோதலில் மேலும் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்து ள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். நேற்றுமுன்தினம் (13) மற்றும் நேற்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு அதிகாரிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஏற்கனவே 21 சிறைக்கைதிகள் உயிரிழந்திருந்த நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மோதலில் காயமடைந்த சில சிறைக்கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் தொடர்ந்து சிகிச்சை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

ஆயுதக் கிடங்கான சிறைச்சாலை சமையலறை! – சந்தேகநபர்கள் அடையாளம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது. போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, தலா 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என்று…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

கொழும்பு பல்கலைக்கழக நடவடிக்கைகள் இணைய வழியில்

நாட்டில் நிலவும் டெங்கு நோய் பரவல் நிலைமையை கவனத்திற் கொண்டு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் முதல் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்றும், எனினும், பல்கலைக்கழகத்தை மூடுவது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களும் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக விடுதிகள் அனைத்தும் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடம், சட்ட பீடம், கல்வி பீடம் மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளை ஜூலை 09 முதல் ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை எச்சரிக்கை

நாட்டின் ஆறு மாவட்டங்களில் நிலவவுள்ள அதிக வெப்பநிலை குறித்து முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளது. மனித உடலால் உணரப்படும் அளவில் இம்மாவட்டங்களில் வெப்பநிலை, உச்சந்தொடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் அடிக்கடி போதுமான அளவில் நீரைப் பருகுமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன வீட்டிலுள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தம்படியும் திணைக்களம் கேட்டுள்ளது.அதேவேளை, சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், வெயிலில் அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியீடு

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் பல்கலைக்கழக அனுமதிக்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.இவ்விண்ணப்பங்கள், பரிசீலிக்கப்பட்ட பின்னர், 42,937 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் புதிய பட்டப்படிப்பு பாடநெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு 176,527 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மாணவர்களின் பாதுகாப்புக்கு அதிரடி முடிவு – முழுக் கை, முழுக் கால் ஆடைக்கு அனுமதி

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக, பள்ளி மாணவர்கள் கொசுக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிய கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை டெங்கு கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பதே இந்த புதிய நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதற்கென, தற்போதுள்ள பள்ளிச் சீருடையுடன் கூடுதலாக, மாணவர்களின் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெங்கு பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் கொசு விரட்டிகளை (Mosquito Repellents) மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வையும், கல்வியையும் வழங்குமாறு பள்ளி முதல்வர்களுக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியத்தையும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும்.! இன்றைய வானிலை அறிவிப்பு

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (11) மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மாகாணம் மற்றும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

கதிர்காமத்துக்கான காட்டுவழிப்பாதை திறக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை இன்று (10) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ‘அரோகரா’ கோஷத்துடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, வழிபாடுகளில் கலந்துகொண்ட முக்கிய அதிதிகளால் உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை பக்தர்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் இன்று திறந்து வைக்கப்பட்டது. வருகின்ற 24 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு காட்டுப்பாதை மூடப்படவுள்ளது எனவும் தெரிவித்தார். இம்முறை பாதயாத்திரையில் முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வெப்ப வானிலை தொடர்பான எச்சரிக்கை.

முன்னெச்சரிக்கை: மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பக் குறியீடு’ இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ‘எச்சரிக்கை’ நிலைக்குக் கூடும். இம்மாவட்டங்களின் சில இடங்களில் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. கடல் மாவட்டங்கள்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் கிழக்கு மாவட்டம்: மட்டக்களப்பு, அம்பாறை வடமத்திய மாவட்டம்: பொலன்னறுவை தென் மாவட்டம்: அம்பாந்தோட்டை வெப்பநிலை அதிகரிப்பால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள்: சூரிய ஒளியில் நீண்ட நேரம் நேரடியாக வேலை செய்வதனாலும், வெளியில் நடமாடுவதனாலும் அதிக சோர்வு மற்றும் நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்: அவசியமான நடவடிக்கைகள்: போதுமான தண்ணீர் அல்லது திரவ உணவுகளை அருந்தி உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருங்கள். கடுமையான உடலுழைப்பைக் கோரும் வெளிப்புறச்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கஜேந்திரகுமார் உள்ளிட்ட எம்.பிக்களின் ஆசனங்களில் மாற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் ஆசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் தமது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விடுத்த கோரிக்கையையடுத்து அவரது ஆசனம் இடமாற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த இராமநாதன் அர்ச்சுனா எம்.பியும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்படி எதிர்க்கட்சியின் நான்காவது தொகுதியில் முதல் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த கஜேந்திரகுமார் எம்.பி.யின் ஆசனம் அந்த வரிசையில் முதலாவது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை காலம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அடுத்ததாக யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் ஆசனம் அமைந்திருந்தது. ஆனால் அர்ச்சுனா இராமநாதனுக்கு அருகில் உள்ள தனது ஆசனத்தை அரசியல் கட்சி மற்றும் சிரேஷ்டத்துவம் அடிப்படையில் வேறு இடத்திற்கு…

மேலும் படிக்க