இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாடு தழுவிய அடை யாள வேலை நிறுத்தம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இன்று (04) காலை 8 மணி முதல் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முடிவு, இன்று நடைபெறவுள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார். வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறை அரசியல்மயமாக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த வாரம் ஏற்கெனவே இரண்டு முறை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடும் வெப்பம் காரண மாக மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்

கடும் வெப்பம் காரணமாக மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் நிம்மதியற்ற நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மனநல மருத்துவர் விந்தியா விஜயபண்டார எச்சரித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிக வெப்பத்தினால் ஏற்படும் நீரிழப்பு, உடலில் உள்ள இரசாயன மற்றும் ஹோர்மோன் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி ஒருவரின் மனநலத்தைப் பாதிக்கின்றது.மூளையில் உள்ள இரசாயனங்கள் மற்றும் ஹோர்மோன்களின் தாக்கம் காரணமாக ஒருவரது மனநிலை வீழ்ச்சியடையக்கூடும்.இரவு நேரங்களில் நிலவும் அதிகவெப்பம் தூக்கத்தைச் சீர்குலைப்பதோடு, இது மேலும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கின்றது. கடும் வெப்பமானது கவனக்குறைவு மற்றும் நினைவாற்றல் குறைபாடு போன்ற நிலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.கடும் வெப்பத்தினால் நாட்பட்ட நோயாளிகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் அதிக ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் வெப்பமான காலநிலையில் மது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம்

ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் (05) ஞாயிற்றுக்கிழமை வெளியிடவுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு குறிப்பிடும்போதே லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய விலைத்திருத்தம் தொடர்பான பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ள அவர், நிதியமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் என்றார். பெரும்பாலும் எதிர்வரும் (05) ஞாயிற்றுக்கிழமை புதிய விலைத்திருத்தம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுவரை, தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது. நாட்டின் நுகர்வுக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

எரிபொருள் கப்பலொன்று நேற்று நாட்டை வந்தடைந்து

எரிபொருள் கப்பலொன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 40,000 மெற்றிக் தொன் எரிபொருளுடன் இக்கப்பல் நாட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவது; நாட்டுக்கு வந்துள்ள கப்பலில் 32,000 மெற்றிக் தொன் டீசலும் 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் உள்ளன. தரப்பரிசோதனையின் பின்னர், தரையிறக்கப்பட்டு இது விநியோகத்துக்கு அனுப்பப்படும். எதிர்வரும் காலங்களில் எவ்வித தட்டுப்பாடுகளுமின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென்றும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. உலக செய்திகள் 

ரஷ்ய வெளியுறவு பிரதியமைச்சர் அவசரமாக கொழும்பு வருகை!

ரஷ்ய வெளியுறவு பிரதியமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ நேற்று (31) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்தார். இவருடன், ரஷ்ய வெளியுறவு அமைச்சின் உயரதிகாரி ஒருவரும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்திய தலைநகர் பதுடில்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று மாலை 04.20 மணியளவில், இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் பொறியாளர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு, இலங்கைக்கான ரஷ்யத் தூதர் லெவன் ஜகரேயன் ஆகியோர் விமான நிலையம் சென்று ரஷ்ய பிரதியமைச்சரை வரவேற்றனர். இலங்கை-ரஷ்யாவுக்கிடையிலான 11 ஆவது அரசியல் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில், இவர் இலங்கை வந்துள்ளார். நாட்டின் உயர்மட்ட தலைவர்களையும் இவர் சந்திப்பாரென வௌிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

நள்ளிரவு உத்தி யோகபூர் வமாக வெளியிடப் பட்டுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று  (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளிட்ட மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 176,527 மாணவர்கள், அதாவது 62.64% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை Doenets.lk மற்றும் Results.exams.gov.lk ஆகிய இணையதளங்கள் மூலம் பார்வையிட முடியும். மேலும், இன்று (01.04.2026) முதல், மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி onlineexams.gov.lk இணையதளத்தின் மூலம் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், அதிபர்கள் மற்றும் வலய/மாகாண கல்வி அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் பெறுபேறுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இதேவேளை, பல்வேறு காரணங்களுக்காக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

39 நாடுகளுக்கு இலங்கையின் இலவச சுற்றுலா விசா..!

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு 2025 ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ், இலவச விசா வழங்குவதற்கான சட்ட வரைவுகள் சட்ட ஆலோசகரால் தயாரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த முன்மொழிவு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அமைச்சரவை அதற்கான அனுமதியை அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, இலங்கையை உலகின் முன்னணி சுற்றுலா இலக்குகளில் ஒன்றாக வலுப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்குள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஏடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் எதிர் கால அபிவிருத்தி க்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்குமென, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ட்ரூ பெற்றிக்  தெரிவித்தார்.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்  சந்தனஅபயரத்ன  மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெற்றிக்  ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல், அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தும் வகையில், இந்த சந்திப்பு இடம் பெற்றது.பல்வேறு நெருக்கடியான காலங்களில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை அமைச்சர் இச்சந்திப்பில்,பாராட்டினார். அத்துடன் நாட்டின் பல அபிவிருத்தித் துறைகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.இலங்கையின் தற்கால அரச சேவை கட்டமைப்பிலுள்ள பழைய முறைகளுக்குப் பதிலாக, அவை நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் சீரமைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.இதற்கான மனிதவளப் பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மின்சார கட்டணம் அதிகரிப்பு.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது அதன்படி 0 – 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது. மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இலங்கை வந்தடைந்த இந்திய எரிபொருள் கப்பல்

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (IOC) எரிபொருள் கப்பல் ஒன்று நேற்று (29) காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. அந்தக் கப்பல் 18,000 மெட்ரிக் தொன் டீசலையும், 18,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோலையும் ஏற்றி வந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா உறுதிப்படுத்தினார். ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை டீசல் கையிருப்பு போதுமானதாக உள்ளது என்றும், 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெற்றோல் விநியோகம் ஜூன் மாதம் வரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற இராஜதந்திர தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த எரிபொருள் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது நிலவி வரும் எரிபொருள் விநியோக சவால்களுக்குத் தீர்வு…

மேலும் படிக்க