இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கோதுமை மா விலை இன்று முதல் உயர்வு – சிற்றுண்டி விலையும் அதிகரிப்பு

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும் – ஜனாதிபதி

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து,  சுமார் மூன்றரை ஆண்டு காலம் கடினமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த பூனாகலை, கபரகலை பகுதியினைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயாபுரம்’ வீட்டுத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். எதிர்வரும் வரவு- செலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை யர்கள் ஊடாக அச்சமின்றி நாடு திரும்பலாம்

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றன. இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டெங்கு தீவிரம்; உயிரிழப்பு 72 ஆக உயர்வு

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதுடன், பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இதுவரை நாட்டில் 94 ஆயிரத்து 292 பேர் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 29ஆயிரத்து 962 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களில் மேலும் 8 ஆயிரத்து 956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த நோயாளர்களில் 52.92 சதவீதமாகும். தென் மாகாணத்தில் 13 ஆயிரத்து 779 பேரும், மத்திய மாகாணத்தில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இன, மத மோதல் களுக்கு இனி இட மில்லை.! – ஜனாதிபதி

இலங்கையில் மீண்டும் எந்தவொரு இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42ஆவது தேசிய மீலாதுன் விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இடம்பெற்ற இன மோதல்களால் இலங்கை பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளதாகவும், அந்தக் கொடூரமான அனுபவங்களின் பாதிப்பை இன்றைய தலைமுறையினரும் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாட்டில் மீண்டும் எந்தவொரு இன மோதலும் உருவாகுவதற்கு இடமளிக்கப்படாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் நீதித்துறை தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், நீண்டகாலமாக வழக்குகள் முடிவுக்கு வராமல் இருப்பதால் மக்கள் நீதியின் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் 1ஆவது சேவைக்கு BIA இல் உற்சாக வரவேற்பு

இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் 1ஆவது சேவைக்கு BIA இல் உற்சாக வரவேற்பு – வாரத்திற்கு 3 சேவைகள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கிய ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways) நிறுவனத்தின் முதலாவது விமானம் நேற்று (25) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது. இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் புதிய விமான சேவையின் ஆரம்பத்தை முன்னிட்டு, விமான நிலையத்தில் விசேட நீர் பீச்சி வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கையின் பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்டிய நடனக் கலைஞர்களின் சிறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் விநியோகbத்திற்கு. தொடர்ந்தும் QR

மத்திய கிழக்கு மோதல் இன்னமும் முடிவுக்கு வராததால் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். “மேற்கு ஆசியாவில் தொடரும் நெருக்கடிகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நிச்சயமற்ற தன்மை என்பன உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் விநியோகத்தில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கு QR முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். QR முறைமை மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் நடைமுறையில் இருந்த போதிலும், எரிபொருள் நுகர்வானது சிறிய அளவிலேயே வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, டீசல் பாவனை சுமார் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

டுபாயில் சிக்கிய ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான “பஸ் லலித்” எனப்படும் லலித் கன்னங்கர என்பவர், மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ‘பஸ் லலித்’ இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். டுபாய் பாதுகாப்புப் படையினரால் கடந்த நாட்களில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ மீது மனிதக்கொலை, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கட்டுநாயக்கவில் ஒரு கோடி பயணிகளை கையாளத் திட்டம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் ஒரு கோடி பயணிகளை கையாளும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.முதலாவது முனையத்தில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பல்வேறு விரிவாக்கத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”36 பயணிகள் பதிவு (Check-in) கவுண்டர்கள் மற்றும் முழுமையாக வசதிப்படுத்தப்பட்ட புதிய லொபி பகுதியை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முனையம் ஒன்றின் திறனை அதிகரிப்பதற்காக மேலும் நான்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த அனைத்துத் திட்டங்களும் ஒரு வருடத்துக்குள் நிறைவுசெய்யப்படும். இதன் மூலம் முனையம் ஒன்றில் பயணிகள் கையாளும் திறன் அடுத்த ஆண்டு, ஒரு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

SLS போலி தரச்சான்றுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

போலியாக இலங்கை தரச்சான்று முத்திரையை (SLS) பயன்படுத்தி சந்தைக்கு விநியோகிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை, நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.அவிசாவளைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையிலே,இந்த போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அமிதிரிகல, ருவான்வெல்ல பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்தச் சுத்திகரிக்கப்படாத குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு, அவிசாவளையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அங்கு 500 மில்லிலீற்றர் முதல் 19 லீற்றர் வரையிலான பல்வேறு அளவிலான போத்தல்களில் போலியான SLS முத்திரை மற்றும் ‘894’ என்ற சான்றிதழ் இலக்கம் அச்சிடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட இந்த 8,500 போத்தல்களும் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு பொறுப்பேற்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறான போலி உற்பத்தியாளர்கள் செலவுகளைக்…

மேலும் படிக்க