காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை
நாட்டின் தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முற்பகல் வௌியிடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு இன்று முற்பகல் 08.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்குள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில், 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் நிலவும் மோசமான வானிலை காரணமாக அவசரகால நிலை ஏற்பட்டால், உடனடியாக செயற்படுவதற்கு ஹெலிகாப்டர்களும் படையினரும் தயாராக இருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.அதேவேளை, நேற்று பிற்பகலுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில்…
மேலும் படிக்க