அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வெப்ப வானிலை தொடர்பான எச்சரிக்கை.

முன்னெச்சரிக்கை:

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பக் குறியீடு’ இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ‘எச்சரிக்கை’ நிலைக்குக் கூடும்.

இம்மாவட்டங்களின் சில இடங்களில் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் மாவட்டங்கள்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்

கிழக்கு மாவட்டம்: மட்டக்களப்பு, அம்பாறை

வடமத்திய மாவட்டம்: பொலன்னறுவை

தென் மாவட்டம்: அம்பாந்தோட்டை

வெப்பநிலை அதிகரிப்பால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள்:

சூரிய ஒளியில் நீண்ட நேரம் நேரடியாக வேலை செய்வதனாலும், வெளியில் நடமாடுவதனாலும் அதிக சோர்வு மற்றும் நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

அவசியமான நடவடிக்கைகள்:

  • போதுமான தண்ணீர் அல்லது திரவ உணவுகளை அருந்தி உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருங்கள்.

  • கடுமையான உடலுழைப்பைக் கோரும் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது தவிர்க்கவும்.

  • இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள்.

  • வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள். வாகனங்களில் குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.

அன்மைச் செய்தி

Leave a Comment