இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்தியாவின் அன்பளிப்பு; வடக்கு காவல் நிலையங் களுக்கு 134 வாகனங்கள்!

இந்தியா அரசாங்கம், இந்தியா–இலங்கை நட்பு திட்டத்தின் கீழ் இலங்கை  காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக 134 ஒற்றை கெப் (Single-Cab) வாகனங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இந்த நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த வாகனங்கள் வட மாகாணத்திலுள்ள காவல் நிலையங்களில் சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, எதிர்காலத்திலும் இலங்கைக்கு இதுபோன்ற உதவிகளை வழங்க இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என தெரிவித்தார்.அதேவேளை, இந்த அன்பளிப்பை பாராட்டும் வகையில் காவல்துறை.மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். இந்த நிகழ்வில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதியமைச்சர் சுனில் வட்டகல, அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன, டிமோ நிறுவனத்தின் பொது முகாமையாளர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம்! பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பகுதிகளில் இந்த நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோர மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் சீரற்ற வானிலைக்கு மத்தியில், மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இன்று (24) முற்பகல் 6.00 மணி முதல் நாளை முற்பகல் 6.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை யில் 28,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.

சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 28,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்நிலையம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, அனர்த்தங்களினால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அங்கு 3,950 குடும்பங்களைச் சேர்ந்த 15,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. இதற்கு மேலதிகமாக, புத்தளம் மாவட்டத்தில் 1,219 குடும்பங்களைச் சேர்ந்த 4,265 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,051 குடும்பங்களைச் சேர்ந்த 4,566 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,204 குடும்பங்களைச் சேர்ந்த 4,558 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், காலி மாவட்டத்தில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும் மற்றும் வவுனியா மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. கட்டுரை 

இலங்கையின் பொருளாதார பிளவு: கடன், நாணய அழுத்தம் மற்றும் கட்டமைப்பு சமநிலை யின்மை

இலங்கையின் பொருளாதார பிளவு: கடன், நாணய அழுத்தம் மற்றும் கட்டமைப்பு சமநிலையின்மை ⊰❉⊱═════════════════⊰❉⊱ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱═════════════════⊰❉⊱ 𓂀 அறிமுகம்: வெளிப்படையான நிலைத்தன்மையும் மறைந்திருக்கும் முரண்பாடுகளும் 𓂀 இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை இரண்டு வேறுபட்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரு புறம், சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) ஆதரவில் செயல்படுத்தப்படும் சீர்திருத்த திட்டத்தின் கீழ் சில நிலைத்தன்மை குறியீடுகள் காணப்படுகின்றன. பணவீக்கம் குறைந்துள்ளது, மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மீண்டும் நேர்மறை நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களுக்குப் பின்னால், இறையாண்மைக் கடன் நெருக்குதல் (sovereign default), நாணய வீழ்ச்சி மற்றும் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஆகியவற்றிலிருந்து இன்னும் மீளாத…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கிழக்கு காணிகளை பாதுகாக்க விசேட குழு – ஜனாதிபதி அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விசேட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி காணிகள் கையகப்படுத்தப்படுவதால் மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இதனைத் தடுக்கும் நோக்கில் பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று (22) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும், அம்பாறை மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளிட்ட கல்வி நிர்வாக பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற நிர்வாக அமைப்புகள் அரசியல் சார்ந்தவை அல்ல, அவை முழுமையாக நிர்வாக பணிகளாகவே செயல்பட வேண்டும் எனவும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முதன்மைப் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 2.4 சதவீதமாகப் பதிவாகியிருந்த நாட்டின் முதன்மைப் பணவீக்க மதிப்பு, ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது. இது மார்ச் மாதப் பணவீக்கத்தை விட அதிகமான உயர்வாகும். மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 1.1 சதவீதம் வரை சற்று அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 3.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவற்ற பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதம் வரை மிகக் கடுமையான உயர்வைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் தேசிய பணவீக்கம் இந்த அளவுக்குத் திடீரென உயர்வடைவதற்கு, உணவற்ற பிரிவில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட பல விமானங்கள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6 விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வருகை தந்த 9 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கும் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கட்டார் நாட்டின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 02 விமானங்களும், சார்ஜாவிலிருந்து வந்த எயார் அரேபியா நிறுவனத்தின் 02 விமானங்களும், அபுதாபியிலிருந்து வந்த எத்திஹாட்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சடுதியாக விலை அதிகரிப்பு.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த 10 நாட்களுக்குள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. டொலரின் மதிப்பு உயர்வால் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளும் கடந்த 10 நாட்களுக்குள் கணிசமாக உயர்ந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது: அந்தவகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 225 ரூபாயிலிருந்து 245 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.10 நாட்களுக்கு முன்னர் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், இன்று 200 ரூபாவை நெருங்கியுள்ளது. அதேநேரம், ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 900 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாகவும், வெள்ளைப்பூண்டு ஒரு கிலோகிராம் 350 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் போராட்டம்!

வேதன முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் இன்று (21) முதல் காலவரையறையற்ற தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இதற்கு முன்னர் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தின் முதற்கட்டமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் போன்ற வெளிப்புறக் குழுக்களில் பங்கேற்பதில் இருந்து பொறியியலாளர்கள் விலகியிருப்பார்கள் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுத்பால ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார். மேலும், தேசிய தேவைகளைக் கருத்திற் கொண்டு இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த, வீதி அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்படாத ஏனைய பணிகளில் இருந்தும் விலகியிருக்க பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளதாக…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ஒரே நாளில் நீருக்கு பலியான 6 உயிர்கள்;

நேற்றையதினம்  தெல்தெனிய – பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். அவர்கள் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்களுடன் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்திய நிலையில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 18 – 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.   இதேவேளை, யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த்தடாகத்தில் ழூழ்கி சிறுவன் ஒருவர்  நேற்றையதினம் பரிதாபமாக உரியிழந்துள்ளார். சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை புலோலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய திலீபன் சந்தோஷ் என்ற சிறுவனே…

மேலும் படிக்க