இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

9 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள், மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 22ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். நேற்று (3) அவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலதிக நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும், மூன்றாம் குற்றச்சாட்டுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலையான நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட ஒரு மீனவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மேலதிகமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து, நீதிமன்றம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பில் பெருமளவு போதைப் பொருட்களுடன் மூவர் கைது

கொழும்பின் வெல்லம்பிட்டிய மற்றும் மட்டக்குளி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவு போதைப்பொருட்கள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு (CCD) அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை பகுதியில் நேற்று (02) நண்பகல் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் மெத்தாம்பெட்டமைன் (ஐஸ்) ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வெல்லம்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 130 மின்னணு சிகரெட்டுகளுடன் 26 வயதுடைய சந்தேகநபர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா சென்ற கார் விபத்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா சென்ற கார் விபத்து!– அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர் யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து நேற்று (02) பிற்பகல் 2.00 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஷெனன் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வீதியை விட்டு விலகி, தொலைபேசி இணைப்புக் கம்பமொன்றையும் உடைத்துக்கொண்டு, ஹட்டன் ஓயாவை நோக்கி நீர் செல்லும் கால்வாயொன்றில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்றபோது காரில் மூவர் பயணித்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பு ஆசனப்பட்டிகளை அணிந்திருந்ததால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், விபத்தில் காருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஹட்டன் பொலிஸ்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எல்-நினோ தாக்கத்தால் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம்

எல்-நினோ காலநிலை தாக்கத்தால் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் நான்காவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், எல்-நினோ காலநிலையால் மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பது தொடர்பிலும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதுவரை ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் களிலிருந்து 463 கிலோ ஐஸ் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களிலிருந்து நேற்று 800 கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப் பொருள் தொடர்பில், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேற்படி கொள்கலன்களில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 463 கிலோ ஐஸ் ரக போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்திருந்த இரகசிய தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொண்டுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், இது தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, குறித்த கொள்கலனில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொள்கலனில், துவாய்களால் சுற்றப்பட்ட நிலையில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டு இந்த போதைப் பொருள் நாட்டுக்குக்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடும் வரட்சியால் ஏழு மாவட்டங்கள் பாதிப்பு;

நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக 07 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 82,000 பேர், குடிநீரைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.நாட்டின் 24 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேர், குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அந்நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதனைத் தவிர அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட மக்களும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

துப்பாக்கி லைசன்ஸ்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் செயற்பாடுகள் இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கிணங்க இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய கால அவகாசத்துக்குள் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கத் தவறும் அனைத்துத் துப்பாக்கி உரிமையாளர்களும் துப்பாக்கிச் சட்டக் கோவையின் 22 வது பிரிவின் விதிகளுக்கு அமைவாக, செல்லுபடியாகும் அனுமதியின்றித் துப்பாக்கி வைத்திருத்தல் என்ற குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியவர்களாவர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இதற்கிடையில், 2027-2028 ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிலையப் பதிவுப் புதுப்பித்தலும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன் கடுமையான சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் பாதுகாப்பு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று முக்கிய தீர்மானம்

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை ரூ.17 ஆல் அதிகரித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பு நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளமையே மாவின் விலையை உயர்த்துவதற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவின் விலை உயர்வுக்கு ஏற்ப பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான இறுதி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு:

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும். அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பு துறைமுக நகர கொலைச் சம்பவம் – இரு சீன பிரஜைகள் கைது

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீன பிரஜைகள் சீகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடத்தப்பட்ட நபரின் சடலம் எஹெலியகொடை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இதன்போது,…

மேலும் படிக்க