இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இந்த ஆண்டின் நேற்று வரையான காலப்பகுதியில் 76,044 டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதுடன் 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த  ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த  பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ள  னர்.கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம்   15,910 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் பதிவாகியுள்ளதாக அந்தப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அரசாங்கத்தை வீழ்த்து வதற்கான செயற் பாடுகளில் ஈடுபடப் போவதில்லை மனோகணேசன்

ஜனநாயக ரீதியில் தேர்தலொன்று நடத்தப்படும் வரைக்கும் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் தடையின்றி அரசாங்கத்தின் இப்பயணம் தொடர்வதற்கு வழிவிடுவதாகவும்  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே,அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது; தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் மற்றும் பாரளுமன்ற நடவடிக்கைகள் தொடரட்டும்.  எதிர்க்கட்சிகள் என்ற ரீதியில், இந்த அரசாங்கத்தை வீழ்த்தவோ அல்லது  எதிராகவோ செயற்படப் போவதில்லை. அரசாங்கம் தடையின்றி அதன் பயணத்தைத் தொடரட்டும்.  தேர்தலொன்று நடத்தப்படும் வரை   எவ்வித முட்டுக் கட்டைகளும் போடப்படமாட்டாது. அரசாங்கங்கள் வருவதும் போவதும் இயல்பான ஒன்று. இந்நிலையில்,நாடு தற்போதைய நிலையில் சுமுகமாக முன்னோக்கிச் செல்வதற்கே விரும்புகிறோம்.உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் தீர்ப்பின் மூலம் மட்டுமே அரசியல் மாற்றங்கள் நிகழ…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்க விசேட அமைச் சரவைப் பத்திரம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் பிற நிவாரணங்களை ஆராய்வதற்கு விசேட  குழு நியமிக்கப்படவுள்ளது.இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.இவ்வாறான சம்பவங்களின்போது பாதிக்கப்படும் அரசாங்க அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவது வழமையானது.எனினும் நீர்கொழும்பு  சம்பவத்துக்காக மேலதிக இழப்பீடு மற்றும்  நிவாரணங்கள்  வழங்கும் நோக்கிலேயே,   விசேட குழு  நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டார்.இக்குழு முன்வைக்கும் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. நீர்கொழும்பு  சிறைச்சாலையில் அண்மையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த அதிகாரிகளுக்கு   பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் இறுதிச்சடங்கு செலவுகளுக்காக ஏற்கனவே தலா 05 இலட்சம் ரூபா  வழங்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் காலத்தில் கூடுதலாக ஒவ்வொரு அதிகாரிக்கும் தலா 05 இலட்சம் ரூபா  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்க கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி, புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுஜன ஊடக பிரதி அமைச்சருக்கு அழுத்தமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பருத்தித்துறை அஞ்சல் நிலையம் கடந்த 41 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த, பழைய வாடகை கட்டடம் ஒன்றிலேயே இயங்கி வருகின்றது. வடபகுதி மக்களின் அன்றாட நிர்வாக, நிதி மற்றும் அஞ்சல் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான அரச நிறுவனமாக இது திகழ்கின்றது. இருப்பினும், இடவசதி இன்மை மற்றும் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை காரணமாக, பொதுமக்களுக்கு வினைத்திறனான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்களை உளவு இயந்திரமும் மடக்கிய பொலிஸார்!

மணல் அனுமதிப்பத்திரத்தை தவறாக வேறு பகுதியில் பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் உளவு இயந்திரமும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக  கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த கைது முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் நேற்று திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்ட பொலிசார் திருகோணமலை மாவட்ட மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி கல்லாறு பகுதியில் மணல் அகழ்வில்  ஈடுபட்ட நான்கு டிப்பர்களும் ஒரு உளவு இயந்திரமும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவத்தின் டிப்பர் சாரதிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடயப்பொருட்கள்  22.07.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகம்  குறித்த கல்லாறு பகுதியில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றம்

திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள் இன்று (20) அகற்றப்பட்டுள்ளன. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, குறித்த கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை மற்றும் 17.5 அடி அகலம் கொண்ட மற்றுமொரு கட்டடம் ஆகியவற்றை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 31 (2) இன் கீழ், 1988ஆம் ஆண்டின் 64ஆம் இலக்க மற்றும் 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத் திருத்தங்களின் அடிப்படையில், குறித்த கட்டடங்களை அகற்றுவதற்கான உடைத்தல் கட்டளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

முட்டை விலைகள் உயரும் முட்டை உற்பத்தியா ளர்கள் சங்கம்

இலங்கையில் இன்று முதல் முட்டை விலைகள் உயரும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை ரூ. 41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலை ரூ. 42 ஆகவும் அதிகரிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை குளியாபிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டதோடு, இந்த விலை உயர்வுக்கு அரசாங்கத்தின் தவறான கொள்கைகளே காரணம் என்றும் குற்றம் சாட்டினார். நாட்டில் மக்காச்சோள இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டதால் கோழித் தீவனத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மக்காச்சோள உற்பத்தியும் முட்டைத் தொழிலின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. தீவனப் பற்றாக்குறையால் உற்பத்தியாளர்கள் அரிசி உள்ளிட்ட மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இது கோழிகளின் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் பாதித்து, முட்டை உற்பத்தியில் 20 முதல்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை; எச்சரிக்கை

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொணராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளைகளில் வெப்ப குறிகாட்டி (மனித உடல் உணரும் வெப்ப அளவு) ‘அவதானம் செலுத்தும் மட்டத்தில்’ காணப்படுமென திணணக்களம் அறிவித்துள்ளது. எனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக, நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, அம்பாந்தோட்டை,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

செம்மணியில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு

செம்மணியில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடு இன்று கண்டுபிடிப்பு செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாளான இன்று, 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது அடையாளம் காணப்பட்டது

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மாவிட்டபுரம் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய 2026 மகோற்சவப் பெருவிழா இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. முருகப்பொருமானுக்கு அதிகாலையில் இருந்து சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று காலை மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்று, முருகப் விநாயகப் பெருமான், சிவன், உமாதேவியார்  சமேதராயும் மற்றும் முருகப் பொருமான் வள்ளி தெய்வானை சமேதராயும், வசந்த மண்டபத்திலிருந்து  கொடித் தம்பம்  எழுந்தருளி கொடியேற்றம்  சிறப்பாக நடைபெற்றது. மாவை கந்தனின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி  தேர்த் திருவிழாவும்  12 ஆம் திகதி ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித  தீர்த்தத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளமையும்  குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும்   ஏராளமான…

மேலும் படிக்க