ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனித குலமும் வேதனையை ரஞ்சித் ஆண்டகை
உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனிதகுலமும் வேதனையை அனுபவித்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரதான திருப்பலியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வது அல்லது புனித பைபிளின் பகுதிகளை வாசிப்பது மாத்திரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக இந்தக் காலப்பகுதியில் உலக அமைதிக்காக நாம் பிரார்த்திப்போம். ஒரு மனிதனின் சுயநலத்தாலும், உலகை ஆள வேண்டும் என்ற அந்த மனிதனின் ஆசையாலும் இன்று உலக அமைதி சீர்குலைந்துள்ளது. இதனால் மனிதகுலத்திற்கே பெரும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த மனிதனின் மனதை மாற்றவும், இந்த கடினமான மற்றும் தவறான பாதையிலிருந்து அவரை விலக்கவும் நாம் பிரார்த்திப்போம். கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்களால்…
மேலும் படிக்க