1093 வெளிநாட்டவர்களை நாடுகடத்த தீர்மானம்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் நாடுகடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற 26 சம்பவங்கள் தொடர்பில் 573 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2025ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்டு சம்பவங்களில் மேலும் 26 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 24 சுற்றிவளைப்புகளின் மூலம் 1,093 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும் படிக்க