முல்லை- கிளிநொச்சிக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவுக – ரவிகரன்
இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இரு மாவட்டங்களுக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படவேண்டும்இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் இல்லாத இரண்டு மாவட்டங்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி தான். 2026 ஜனவரிமாதத்தின்படியான தரவுகளின்படி முல்லைத்தீவு இணைப்பு மாவட்டத்தில் 8500 குடும்பங்களுக்கு நீர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்தும் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. வடமாகாணத்தில் இதுவரை இல்லாதுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் மேற்படி பிராந்திய முகாமையாளர் காரியாலயங்களை…
மேலும் படிக்க