புதிய கட்டுமான நடவடிக்கை களுக்காக, தற்காலிக இடமாற்றம் குறித்து விசேட ஆலோசனை
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (06.08.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக அமைந்துள்ள மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்தில் முன்னர் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் இயங்கி வருகிறது. போதனா மருத்துவமனையில் தரைமட்டத்திலுள்ள சில பழமையான கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய மாடிக் கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகள் நிறைவடைய மூன்று ஆண்டுகள் செல்லும் என்பதால், இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர வேண்டிய சிகிச்சைப் பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான குறித்த கட்டடத்துக்கு மாற்றுவது தொடர்பாகவும், அதற்கான ஒப்பந்தம்…
மேலும் படிக்க