அண்மை செய்தி இலங்கை செய்தி. 

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை இன்று 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்காக பாடசாலை ரீதியில் விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேர் உள்ளடங்கலாக 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்று படுத்திக் கொள்வது கட்டாயமாகும். அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். பரீட்சைக்கான கால அட்டவணையை கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பதாகவே…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சிறைச்சாலை மோதல்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளுக்கு அழைப்பு

சிறைச்சாலைகள் சில தொடர்பில் பதிவாகியுள்ள அமைதியின்மை மற்றும் குழப்ப நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்படி கலந்துரையாடலுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.அது தொடர்பில் மேலும் தெரிவித்த ஆணைக் குழுவின் தலைவர்;சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியவை. மனித உரிமைகள் ஆணைக்குழு அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் கணிசமானளவு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடற்பிராந்திய ங்களுக்கு சிவப்பு அறிவிப்பு; கடலுக்கு செல்லத் தடை

நாட்டின் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.​அந்த வகையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வர தொழில்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிவிப்புகளை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கிணங்க, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை…

மேலும் படிக்க