க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை இன்று 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்காக பாடசாலை ரீதியில் விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேர் உள்ளடங்கலாக 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்று படுத்திக் கொள்வது கட்டாயமாகும். அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். பரீட்சைக்கான கால அட்டவணையை கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பதாகவே…
மேலும் படிக்க