சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.  ஈழத்தமிழர் வரலாற்றுப் பக்கங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய ‘செஞ்சோலை படுகொலை’ நடந்து இன்றோடு (2006 ஆகஸ்ட் 14 – 2026 ஆகஸ்ட் 14) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாளில், முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை விமானப்படை நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 16 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவிகள், முதலுதவி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிக்காக வல்லிபுனத்திலுள்ள செஞ்சோலை வளாகத்தில் தங்கியிருந்தனர். ஆகஸ்ட் 14 காலை 7:00 மணியளவில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிஃபிர் (Kfir) போர் விமானங்கள்,…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர் வெழுச்சியுடன் முன்னெடுப்பு;

செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 20ஆம்ஆண்டு நினைவேந்தல் 14.08.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சி.குகநேசனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வானது, படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களான சி.குகநேசன், இ.கிரிதரன், அ.சற்குணதாஸ், த.தர்மலவன், ஜீ.ராதிகா, சு.வளர்மதி, மு.கஜேந்தினி, முன்னாள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ச.ஜீவராசா, சமூகசெயற்பாட்டாளர் த.யோகேஷ்வரன், பொதுகமக்கள் எனம் பலரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

1093 வெளிநாட்டவர்களை நாடுகடத்த தீர்மானம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் நாடுகடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற 26 சம்பவங்கள் தொடர்பில் 573 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2025ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்டு சம்பவங்களில் மேலும் 26 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 24 சுற்றிவளைப்புகளின் மூலம் 1,093 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த வாரம் புதுடெல்லி செல்லவுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன். அவரின் ஆலோசனையின் பிரகாரம் அடுத்த வாரம் புதுடெல்லி சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோரை சந்தித்து, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளோம். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.…

மேலும் படிக்க