செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்.
செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு நாள். ஈழத்தமிழர் வரலாற்றுப் பக்கங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய ‘செஞ்சோலை படுகொலை’ நடந்து இன்றோடு (2006 ஆகஸ்ட் 14 – 2026 ஆகஸ்ட் 14) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாளில், முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை விமானப்படை நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 16 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவிகள், முதலுதவி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிக்காக வல்லிபுனத்திலுள்ள செஞ்சோலை வளாகத்தில் தங்கியிருந்தனர். ஆகஸ்ட் 14 காலை 7:00 மணியளவில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிஃபிர் (Kfir) போர் விமானங்கள்,…
மேலும் படிக்க