தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெளிமாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிக்கான அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்துக; ரவிகரன்

வெளிமாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிக்கான அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்துக; சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து முல்லைத்தீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிமாவட்ட மீனவர்கள் ஊடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் ஊடுருவல்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெளிமாவட்ட மீனவர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை கடற்றொழில் அமைச்சரிடம் நேரடியாகக் கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தினார். முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 11.08.2026இன்று இடம்பெற்ற இவ்வாண்டிற்கான இரண்டாவது முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில்சார்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லைத்தீவில் கடற்சீற்றம்; மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக மீனவர்களின் வாடிகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடற்சீற்றம் தொடரும் பட்சத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், மீனவர்களை சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்தார். மேலும், கடற்சீற்றம் தொடரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை!

யாழ். மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! அனைத்துக் கட்சிகளும் போர்க்கொடி ​யாழ். மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, மாநகர சபை உறுப்பினர்கள் இன்றையதினம் (11) அடையாளப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ​45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் கூட்டுப் பங்களிப்புடன் குறித்த அடையாளப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. ​இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ​இதன்போது அதிகாரிகளின் இந்த முறையற்ற…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

40 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்படும் இலந்தைக் குளம்

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலந்தைக் குளத்தின் புனரமைப்புப் பணிகளை சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று(11) உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குச்சவெளி பிரதேச செயலாளர் U.L. சியாவுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், “நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டிருந்த இலந்தைக் குளத்தைச் செப்பனிடுவதற்காக அரசாங்கத்தினால் ரூ. 20.1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்புனரமைப்புத் திட்டம் முழுமையடையும் போது, சுமார் 120 ஏக்கர் வயல் நிலங்கள் நேரடி நீர்ப்பாசன வசதியைப் பெறவுள்ளன. இதன் மூலம் அப்பகுதியின் விவசாய நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதோடு, பல விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கணிசமாக வலுப்பெறும். தற்போது திருகோணமலை மாவட்டத்திலும், குச்சவெளி பிரதேசத்திலும் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இ.போ.ச பஸ் விபத்து.

15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இ.போ.ச பஸ் விபத்து. சாரதிக்கு படுகாயம்; பயனிகளுக்கு பேரும்/சிறு காயம். மொனராகலையில் சம்பவம். மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று, புத்தள – மஹகொடய பகுதியில் இன்று (11) அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. ​இவ்விபத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி சிகிச்சைக்காக மொனராகலை போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிலும், ஏனைய பயணிகள் சிறு, பெரு காயங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், அவர்களும் மொனராகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு மற்றும் வேகமே காரணம் என தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 5 முறைப்பாடுகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் ஐந்து (5) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் வழிகாட்டலில், குறித்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரியையும் சட்டத்தரணி முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி ருடானி சாஹிர் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். எனினும், குறித்த சந்திப்பின் போது, நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான சிறந்த தீர்வாகும் என்ற நிலைப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், அவர்களின் அடிப்படை உரிமைகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருளுக்கான 50 ரூபா வரியை நீக்குமாறு விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம் வழங்க முடியும் என, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது; ”பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால், 50 ரூபா வரியை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேபோன்று தற்போது நடைமுறையில் உள்ள   கிவ்.ஆர். (QR) முறையும், எரிபொருள் விநியோகத்திற்கான வரம்புகளும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் அவற்றையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், ”எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத பெறுமதி சேர் வரி மற்றும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான சேவை வழங்கியமைக்கான சேவை கண்டனம் 3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால்,  தாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நேரடி தலையீடுகளை மேற்கொள்வதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை  சந்தித்து கலந்துரையாடிய போதே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இவ்வாறு உறுதியளித்துள்ளார். இச்சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காண்பதே  இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தேவையான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக சஜித் பிரேமதாச இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், அவற்றுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்க்கட்சித்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை?

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையில் ஆராய்வு பிணை வழங்கும் நடைமுறைச் சட்டத் திருத்தங்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிப்பட்ட  தொடர்புகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பிற்கே பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன்,  இந்த நிலைமை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதைக் கருத்திற்கொண்டே போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டது.தேசிய செயற்பாட்டு சபை  நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடியபோதே  இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் வரம்பற்ற செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள குற்றச்செயல் சூழல், தற்போது தேசிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை களுக்கு இடையூறு

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு காரணமாக இன்று (11) முற்பகலில் கடவுச்சீட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பில் வினவியபோது, குறித்த அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்

மேலும் படிக்க