தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அபிவிருத்தி உத்தி யோகத்தர் களின் பிரச்சினையை விசாரிக்க சுயாதீன விசாரணைக் குழு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக்குழு நியமிக்கப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். வடக்கு மாகாணசபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்று (17.08.2026) காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை இவர்களில் ஐந்து பிரதிநிதிகளுக்கு ஆளுநரை நேரில் சந்தித்து தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கையளித்த மனுவில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்க சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் செம்மணியில் அகழ்ந்து எடுக்கப் படும் மனித எச்சங்களுக்கு சர்வதேச நீதி கோரி பேரணி

  யாழ்ப்பாணம் – 17.08.2026 செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித எச்சங்களுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணரவும், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகளுக்கு சர்வதேச நீதியைப் பெற்றுத்தரவும் கோரி இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வாசிகசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, கோயில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை இடம்பெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அகழ்வுப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடனும் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நயினாதீவு படகு விபத்து. மீட்கப்பட்ட 10 பேர். யாழ் போதனா வைத்தியசாலையில்.

நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிகட்டுவான் பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி இரண்டு படகு இயக்குநர்கள் உட்பட 10 பேருடன் பயணித்த குறித்த படகு நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மாலை கடலில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்தது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்பட்ட போதிலும், காணாமல் போன படகையும் அதில் பயணித்தவர்களையும் தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டனர். இதன்போது, கடல் சீற்றத்துக்கு மத்தியிலும் காணாமல் போயிருந்த படகையும் அதில் பயணித்த 10 பேரையும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதனையடுத்து, மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் வருகை தந்திருந்தனர். அத்துடன் அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். இந்த நேரடி விமான சேவையின் கீழ் வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊடகத் துறைக்கான உப துறைசார் மன்றத்தை நிறுவும் நிகழ்ச்சித் திட்டம்

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட துறைசார் மன்றத்துடன் இணைந்து, ஊடகத் துறைக்கான உப துறைசார் மன்றத்தை நிறுவுதல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் கொழும்பில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சித்திட்டம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அரச சேவை மறுசீரமைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவின் மேலதிக செயலாளர் சாந்தி வீரசிங்க உள்ளிட்ட அப்பிரிவின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. துறைசார் மன்றங்கள் அமைக்கப்படும் விதங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அரச அதிகாரிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த வீரசிங்க, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி தீபா லியனகே, தபால் மாஅதிபர் ருவன் சத்குமார, அரச…

மேலும் படிக்க