எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? பலாலி மக்கள்
எங்களின் பூர்வீக காணி அரச படைகளின் சரணாலயமா? எங்கள் நிலங்களை சுரண்ட இனியும் இடமளிக்க முடியாது என்ற வலுவான கோசத்துடன், வலிகாமம் வடக்கு – பலாலி பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் இன்று 8ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். பல ஆண்டுகளாக தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும், தமது காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் காணப்படுவதால் வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும், பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும், மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு மக்கள் தமது…
மேலும் படிக்க